என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, December 17, 2010

நீ வாழ்வது மேல்!

கற்றவரை இவ்வுலகம்
போற்றும்- இது
கல்விப்பெருமையை
பறைசாற்றும்..
வையகத்து வாழ்வாங்கு வாழ்வோரை
வாழவைக்கும் வழிநிலையை
நித்தியமாய் காட்டும்...
அதை அறிந்து தான் வாழ்த்துது
இளம் காற்றும்!

நேர்மையாய் உன்வாழ்வை
வாழு - பிறர் கவலையை
காது கொடுத்து கேளு..
திக்கற்று வாழ்வோரை
தீமைகள் சூழ்கையிலே
அயராது அவருக்காய் மாளு..
தரணியிலே நீ வாழ்வது மேலு!

கவலையின்றி வாழ்பவன் தான்
யாரு - சிலரின் கண்ணிரண்டும்
குருடு நீ பாரு...
நம்பிக்கை இழக்காமல்
நாணயம் தவறாமல்
இலட்சியத்தை நோக்கி
நீ ஏறு..
அதை விட இன்பம் என்ன வேறு?

நடுவீதியில் பெண்ணை
மறியாதே - அவளுன் மனைவியாகலாம்
அது தெரியாதே..
தீயஎண்ணங்கள் பலகொண்டு
தவறுகள் பல செய்து
வாழ்க்கையில் நீயும் சரியாதே - பின்
பைத்தியமாய் வீதியில் திரியாதே!

அரிதாரம் பூசாமல்
பழகு - தீயவர் உன்னருகே
வந்தாலே விலகு..
சமூகத்தில் பலபேரு
ஏமாற்றக்காத்திருப்பர்
இது தானே இன்றைய உலகு...
இதையறிந்தாலே உன் வாழ்வு அழகு!!!

Thursday, December 2, 2010

மரணத்தின் தேதி!

இத்தனை நாள் பார்த்த நிலா
ஒளி மங்கி வீசும்..
இதயத்தின் பாகமெல்லாம்
தீ கருகிய வாசம்!

உன் மாற்றம் என்னுள்ளே
தீயள்ளி போடும்..
உன் நினைப்பு என் உயிரின்
அந்தம் வரை ஓடும்!

சுட்டெரிக்கும் சூரியன்
என் தோழனாய் மாறும்!
என் நிலை கண்டுதான்
கலங்கி நீளும் ஆறும்!

வீணை தடவிய விரல்களெல்லாம்
கண்ணைக்குத்தி நிற்கும்..
வானைத்தொடும் கவலைகள்
முட்டும் எட்டுத்திக்கும்!

பட்ட பகல் வெட்ட வெயில்
துன்பமில்லை எனக்கு - கை
தொட்ட அவள் வெப்பம்நெஞ்சில்
பத்திரமாய் இருக்கு!

ஏமாற்றம் வலியெல்லாம்
எனக்குள்ளே மோதி..
சீக்கிரமாய் நிர்ணயிக்கும்
என் மரணத்தின் தேதி!!!

இன்பமின்றி வேறு இனி ஏது!



கொத்துமலர் பூப்பறிக்க
உன் இதழில் தேன் தெறிக்க
அத்தை மகள் நீ வந்து நின்றாய்..
அடியே - இத்தனை நாள் பத்திரமாய்
பொத்தி வைத்த என் மனசை
பார்வையாலே முழுவதுமாய் தின்றாய்!

அருவிக்கு போகையிலே
ஆத்தங்கரை ஓரத்திலே
குடத்துடனே நீயுந்தான் இருந்தாய்..
குயிலே - குடத்தைப் போல என் உள்ளம்
தளும்பித் தளும்பித்துடிக்கையிலே
குருவியாக நீ பறந்து சென்றாய்!

மான் விழியால் எனைமாற்றி
தேன் மொழியால் எனை பேசி
மயக்கிட்ட ரத்தினமே நீ தான்..
அன்று - மலர்மாலை சூடுகையில்
வெக்கப்பட்டு சிணுங்கிச் சிரித்து
பற்றிக்கொள்ளச்செய்தாய் என்னில் தீ தான்!

அன்பகலா ப்ரியமுடன்
சோதி நிலா நீயிருக்க
மரணத்தின் பயமிருக்காது..
நாங்கள் - மாதெமெல்லாம் மகிழ்வுடனே
பேதமின்றி வாழ்வதாலே
இன்பமின்றி வேறு இனி ஏது???

கடல் கொண்டு போகட்டும்!

பத்துரூபா கேட்டவளை
'பரதேசி' என்றவனில்
பண்பென்று என்ன இருக்க முடியும்?
அவள் பசி போக்க கேட்டிருப்பாள்
என்று மனம் சொல்லுகையில்
இருதயம் சுக்குநூறாய் ஒடியும்!

நாகரீகம் மறந்தவனை
நாய் கூட மதிக்காது
நங்கையர் சொல்லித்தானா விளங்கும்?
பாவம்..
பலிசொல்லை ஏற்காமல்
பாவையரை வதைப்பவனை
படைத்தவனே தண்டிப்பான் சுணங்கும்!

விதி செய்த சதியினிலே
விலைபோகும் மாதுகளை
எப்படி நாம் காப்பாற்ற இயலும்?
வெறும் பணத்துக்காய்
ஆசைப்பட்டு வீணாகும் சிலபேரை
மொத்தமாக அள்ளி செல்லும் புயலும்!

அகதியாக மாற்றப்பட்டு
அகம் நொந்து வாழ்வோரை
அரவணைக்கும் நாள் என்று வருமோ?
தொலைந்து போன சொந்தங்களை
தொலைவில் சென்று தேடினாலும்
இனியவர்களை மீட்டித்தான் தருமோ?

போலியாக பழகியதும்
அன்பென்று நடித்ததுவும்
ஒருநாளில்
உணர்வு கிழித்து வதைக்கும்..
அன்று..
பேராசைப் பட்டதாலே
மனிதமின்றி வாழ்ந்த வாழ்க்கை
அணுவணுவாய்
உயிரையே சிதைக்கும்!

இனத்துவேசம் அறியாத
இலங்கைத்தாய் பெற்ற எமை
பிரித்திட்ட பூதமே நீ அழிக..
உனை என்றென்றும் கூர்வாளால்
ஒழித்திடுமே எம் கைகள்
ஒற்றுமையே உன் பாதம் பதிக!

பாடசாலை பருவத்து
சிறார்களை வைத்து நிதம்
தொழில் செய்து
பிழைப்பவர்கள் சாகட்டும்..
அவரின்
அந்தஸ்து சொத்தெல்லாம்
இப்படி தான் வந்ததென்றால்
கடல்பொங்கி
எல்லாம் கொண்டு போகட்டும்!!!

Saturday, November 27, 2010

தீன் வழியை காட்டி நில்!

வான்மறையின் வசனங்களில்
தேன் உரையை உணர்ந்தாயா?
உளக்கறையை நீக்குமதன்
உன்னதம் நீ அறிந்தாயா?

நபிபெருமான் காட்டித்தந்த
சுன்னாக்கள் தொகுத்தாயா?
தினம் அதைநீ கடைபிடிக்க
அட்டவணையாய் வகுத்தாயா?

பாவங்கள் செய்வோரை
பாதையிலே கண்டாலும்
பக்குவமாய் எடுத்துச்சொல்
பதறாதே ஒருநாளும்!

தீ நாக்கால் சுட்டிடாமல்
தேள் வார்த்தை கொட்டிடாமல்
தனியாக அழைத்துச்செல்
இனிதாக அவன்பிழை சொல்!

தீராமல் தொடர்ந்திங்கே
தீமைகள் செய்தாலும்
தீஞ்சுவையாய் உணர்வதற்கு
தீன் வழியை காட்டி நில்!!!

Wednesday, November 24, 2010

ஒட்டடை நினைவுகள்!

இன்னதென்ற
காரணம் தெரியாமலேயே
வலியெடுக்கிறது
எனது இடது புறத்தில்!

உலகத்திலுள்ள
அனைத்து கவலைகளும்
என்னில் தேங்கியிருக்கிற
மெய் நிலை!

என்னென்வோ
நினைத்துப் பார்த்த
பொழுதிலும்
எதிலும் சிக்காமல்
கைநழுவிச் செல்லும்
அந்த
ஒட்டடை நினைவுகள்!

குளவி கொட்டிப்போன
வேதனையின் சாயலிலும்
பாலைவன மணலின் கொதிப்பிலும்
துயர்களை தருவிக்கிறது
இருதயம்!

Friday, November 12, 2010

சாத்தான் ஆடும் ஆட்டம்!

கனவுகளின் தேசத்தில்
தனியே நீளமாய் பயணிக்கின்றன
அர்த்தமற்ற அங்கலாய்புகள்!

சுவடுகள் அழிந்த
நேற்றைய பொழுதுகளுக்காய்
அழுது வடிகின்ற
நிகழ்கால வடுக்கள்!

பயங்கரமாய் ஊளையிடும்
நரிகளின் அர்த்த ராத்திரியில்
பிதுங்கி வழிகின்றன
என் அச்சங்கள்!

சாத்தான்
ஆடுகிற ஆட்டத்தில்
தாயக்கட்டைகளாய் மாறி
புரட்டிப்போடப்படுகின்றன
இறுதி மூச்சின் விசும்பல்கள்!!!

இரவிடம் மீள்கிறேன்!

இடம்பெயரவியலா
சமநிலை மாற்றத்தால்
சாமான்ய உணர்வுகளிலும்
சீற்றத்தணல் தெறித்தபடி!

ஒவ்வொரு நாட்களிலும்
நிம்மதியான இடம் தேடி
கால் வலிக்க என்
உயிரும் நடந்தபடி!

மழைக்கு முகவரி கேட்கும்
மனசாட்சி எரிந்தவர்களின்
கிரகத்தில் வாழ்கிறேன்!

பாலின வேறுபாடுகளறியா
பாவிகளின் போக்கு எண்ணி
சொல்லமுடியா சோகத்துடன்
இரவிடம் மீள்கிறேன்!

அரிதாரமற்ற மௌனங்களோடு
பெரிதாக நானும்
காட்டி விடாது
துன்பமாய் என் நிலை
உரைக்கிறேன்!

கேளுங்கள்...
எனை மீட்சிக்கும் வழிகளற்று
நீட்சிக்கும் துயரங்களை
சாட்சிகளின் தடயமின்றி
எல்லோரிடமும் மறைக்கிறேன்!!!

Saturday, October 23, 2010

எழுவாய் பயனிலை!



காதலித்து
கண்ணாம்மூச்சியாடி
நீ இன்று
தாய்மைக் கோலத்தில்
தயவாய் வாழ்ந்த படி!

கவிதை எழுதியே
காகிதமாகி
சேற்றில் புதைந்த
செருப்பாய் நான்!

இதயத்தின் வெடிப்புக்களில்
இம்சையின் சித்திரவதை...
உள்ளார்ந்த மனவெளயில்
இன்பமினி எவ்வகை?

இலக்கியமாய் எமைப்பார்த்தால்
நீ எழுவாய் நான் பயனிலை..
சேர்ந்திருந்த நாள் எல்லாம் - இனி
என்ன நினைத்தாலும் பயனிலை!!!

கண்ணீரும் உதிரமாய்!

உன் முகம் நிதம் எண்ணி
என் கண்கள் அழுகிறது...
கண்ணீரும் உதிரமாயிங்கு
உஷ்னமாய் விழுகிறது!

கேலிக்குரியவளாகிறேன்
உன்னுடனிருக்க ஆசைப்பட்டு...
ஒன்றாயிருக்க விரும்புகிறேன்
உன்னுடனேயே வாழ்க்கைப்பட்டு!

ஒன்றில்லை பல(லி) சொல்லும்
உலகுக்கா தெரியாது?
சொல்லட்டும் பிழையில்லை
என் மனசும் சரியாது!

பூமியின் துன்பம் தீர்க்க
மழைத்துளியின் தூறுதலா?
என் நெஞ்சின் சோகம் போக்க
கண்ணீர் தான் ஆறுதலா???

Saturday, October 9, 2010

திருந்திய உள்ளம் !

என் இறைவனே!
உன்னை
எண்ணாத போதிருந்த
காயங்களின் வலி
உன் ஞாபகங்களால்
துதித்து வழிபடுகையில்
காணாமற் போகிறது!

சோகங்களாலும்
சோர்வுகளாலும்
நோவப்பட்ட என் உள்ளம்
நிறைவான அமல்களால்
நிம்மதியாய் இருக்கிறது!

மானிடர்க்குரிய
வேதனைகளும்
துன்பங்களும்
இப்போதெல்லாம்
எனை துரது;துவதில்லை!

ஷைத்தானின்
பிடியில் சிக்கி
என் ஆன்மா
சீரழிவதுமில்லை!

சேதப்பட்டு திருந்திய
என்
இதயத் தோட்டத்தில்
இனி ஒருபோதும்
தீய எண்ணங்களை
வளர விடுவதுமில்லை!!!

விளக்கம் :- அமல்கள் - நற்காரியங்கள்

சாலையோர பூக்கள் !

இதயத்தை கேட்டவளுக்கு
உயிரையே தர
தயாராயிருந்தேன்..
நிஜமாய்!

நம்பிக்கை இல்லை என்றால்
விண்கற்களிடம்
விசாரித்துப் பாருங்கள்..
விண்மீனாய் மாறி
என் காதல் சொல்லும்!

வியர்வை துளிகளை
நுகர்ந்து பாருங்கள்..
என் காதலுக்கு சாட்சியாய்
வாசம் வீசும்!

செவ்வாய்க்கு சென்று
ஆராய்ச்சி செய்யுங்கள்..
அவளின் செவ்வாயில்
நான் சுருண்டதை
வெட்கத்துடன் பகரும்!

சேற்றில் பூத்த
செந்தாமரை பெற்றுள்ள மதிப்பு..
சாலையோர பூக்களுக்கு
இல்லை தான்!

வெட்டாந் தரையில்
வெறுமையாய் இருந்த போதும்
இப்படி மூளைக்குள்
வெம்மை பரவியதில்லை!

ஆனால்..
அநாதை என்று தெரிந்த பின்
எனை துரோகித்து
வஞ்சித்தாயே!

நெருப்புக் கட்டைக்குள்
ஓடி புகுந்து..
தற்கொலை முயற்சியில்
என் இளமை!!!

பெரிய புள்ள !

எல்லாமே
முடிஞ்சி போயாச்சி
நானா!

கெணத்தடியில் தேப்ப குட்டியும்
புல்லு வெலக்கி
பெத்தாவும் பிடிச்சமே..
பேரக்கா வித்த காசில
கிரிடொபி சாப்பிட்டமே..

போற வார பஸ்ஸூக்கெல்லாம்
கெட்டம்பொல் அடிச்சி மாட்டியது..
அமரய்யா கடயில கெழங்கெடுத்து
அடுத்த தோட்டத்துல விறகொடித்து
கட வச்சி வெளயான்டது..

லொக்கெட் மரத்து உச்சியிலேறி
கன்டக்டர் ட்ரைவரா கற்பன பண்ணி
கீழ வுழுந்து காலுடஞ்சது..

வாகனம் கொளுத்தும் திட்டம்
உம்மாகிட்ட மாட்டினது..
அந்தி வரை 'போக்' ல ஒழிஞ்சி
இருட்டினதும் பயந்து செத்தது..

பள்ளிக்கு ஓதப்போயி
அஸருக்கு அஸரத் போனதும்
சொல்லாம கொள்ளாம ஓடி வந்தது..

உங்கட தமிழ் ஹோம்வேர்க் ஐ நானும்
ஏன்டதை நீங்களும் திருத்தமா செஞ்சி
வெரிகுட் எடுத்தது..

யாருமில்லா நேரம் பாத்து
மாவு சீனி களவாண்டி திண்டது..
அரிசி போட்டும் புறா சிக்காததால்;
அழுது பெரட்டியது..

சிரட்டை அடுக்கி.. விக்கட் வச்சி..
ஜுட் ராஜா சமிந்த எல்லோருமா
நடு ரோட்டில க்ரிக்கட் அடிச்சது..

ஹ்ம்ம்..
எல்லாமே முடிஞ்சி போயாச்சி
நானா!

கொழும்புல நீங்க வேலன்னு
பெருமயா பேசிக்கிறாங்க..
நான் தான் ஊட்டுக்குள்ளேயே
வெந்தழியிறேன்..

ஏன் என்டால்..
நான் தான்
வயசுக்கு வந்துட்டேனாமே!!!

பூஜ்யமாய் நான் !

நானில்லாத
உன் நாழிகைகள்
உனக்கு
சந்தோஷம் தரலாம்..
நீயில்லாத
என் நிமிடங்கள்
எனக்கு துன்பம் தரும்!

என் சுவாசக் காற்றின்
கலப்படமில்லாத
உன் மூச்சுக்காற்று
இனிமையாயிருக்கலாம்..
உன் அருகாமையற்ற
என் காலங்கள்
தேள் கொட்டும்!

வேறொருத்தியின் காவலனாய்
உனை எண்ணும் சக்தியின்றி
கழிந்து கொண்டிருக்கிறது
என் நிசப்த பொழுதுகள்!

அரங்கேறிக்கொண்டிருக்கம்
மௌன போராட்டத்துடன்
விடிந்தும் இருளாயிருக்கிறது
என் ஏகாந்த இரவுகள்!

தூக்கம் கலைந்த
என் விழிகளுக்கூடாக
உன் விம்பம் பார்த்தே
நிர்க்கதியாய் நிற்கிறேன்
வெறும் பூஜ்யமாய் நான்!!!

ஆடுகளத்தில் அநாதையாய் !

முதன்முதலாய் - என்னில்
பூத்த காதல் பூ
நீயும் நானும்
காதலிக்கு முன்னேயே
கருகிப்போனது!

உனக்காக
என் மனசில்
நான் வரைந்த ஓவிங்கள்
நிறம் தீட்டப்படாமலேயே
வெறுமையாக!

நீயும் நானுமிணைந்து
நடாத்திய காதல் பாடம்
வெற்றி தோல்வியின்றி
ஆடுகளத்தில் அநாதையாக!

உன் நாமம் கூறியே
நெஞ்சில் ஏற்றிய சந்தோஷங்கள்
தெவிட்டுதலோ தித்திப்போ
துளியுமின்றி
தொடர்ந்தபடி இன்னும்!

எப்போதுமே
என்
உயிரின் திணுசுகளையும்
சாமான்ய உணர்வுகளையும்
உன் ஞாபகங்கள்
ஆக்கிரமித்து வதைக்கும்!

நினைவுகளில் எல்லாம்
உதிக்கின்ற
உன் எண்ணங்கள்
பெருமூச்சாய்
உஷ்ணம் கிளப்பி
சுடும் என் உயிரை!

வற்றிப்போன
உன் மனசறிந்தும்
என் வாலிபமோ
உன்னில்
தொற்றியிருப்பது
பெரும் ஆச்சரியம்!

இருந்துமென்ன..
ஓர் தடாகமாய் மாறிவிட்ட
என் இதயத்துக்குள்
நீ மட்டுமே வந்து
நீச்சலடிக்க வேண்டுமென
கதறுகிறது
என் அணு ஒவ்வொன்றும்
எப்போதுமே
என்
உயிரின் திணுசுகளையும்
சாமான்ய உணர்வுகளையும்
உன் ஞாபகங்கள்
ஆக்கிரமித்து வதைக்கும்!

நினைவுகளில் எல்லாம்
உதிக்கின்ற
உன் எண்ணங்கள்
பெருமூச்சாய்
உஷ்ணம் கிளப்பி
சுடும் என் உயிரை!

வற்றிப்போன
உன் மனசறிந்தும்
என் வாலிபமோ
உன்னில்
தொற்றியிருப்பது
பெரும் ஆச்சரியம்!

இருந்துமென்ன..
ஓர் தடாகமாய் மாறிவிட்ட
என் இதயத்துக்குள்
நீ மட்டுமே வந்து
நீச்சலடிக்க வேண்டுமென

கதறுகிறது
என் அணு ஒவ்வொன்றும்!!!

காய்ந்துவிட்ட கண்ணீர் !

நான் அழுகிறேன்
இல்லையில்லை
அழ முயல்கிறேன்
எவ்வளவு தான்
பிரயத்தனப்பட்டாலும்
அடைமழையில் வரைந்த
ரங்கோலியாகத்தான் அது!

முன்பு
கண்ணீர் வெள்ளம்
வற்றும் போதெல்லாம்
இதய ஊரில்
ஒரு மயான அமைதி நிலவும்!

இப்போது
அது முடியாமல்
என்னுடன்
ஊமையாய் கரைகிறது
அந்த நிலவும்!

வயிற்று வழியே மேலெழும்
அக்கினிக் குழம்பு
தொண்டைக் குழியை நிரப்புகிறது!

சல்லடையான
என் இதயத்துக்குள்
கல்லறைக் காயங்கள்
தகிக்கிறது!

என் மனசின்
அந்தரங்கத்தின்
அவஸ்தையோடு
அந்தரப்பட்டு
கண்ணீரும்
காய்ந்து போகிறது!!!

உயிரை உடைத்துப்போடு !

இதயத்தணலில் மேலெழும்
சில நினைவுப் புகை
என்னில் படிந்துகொள்கிறது!

அதனால்
மனசோ அவிந்தழிந்து
நாற்றமெடுத்த
விரக்தியில் நான்!

வக்கிரம் வலம் வரும்
இவ் வஞ்சகர்கள்
உள்ளத்தில்
எதை சாதிக்கப்போவதான பிரமமையோ?

உயிர் கவசத்தை
உடைத்துப்போடுவதில்
இப்படியும் கூட
இன்பம் காண
முடிவது பற்றித்தான்
புதினமாயிருக்கிறது!

முடிவிலியாகிப்போன
துரோகங்களால்
மிதமிஞ்சிப் போகிற
துரோகத்தைத் தடுக்க
ஆண்டவா
உனக்கு கூட
அருள்தரப்போவது யார்???

உடன் பாடுகள் !

நான்
உன்னுடையவளாகப்போகும்
நாளை எண்ணியே
இதயம் பலமிழந்து விட்டது!

வருடங்கள் காத்திருக்க
தெரிந்த எனக்கு
நாழிகைகளை சமாளிப்பது தான்
காயங்கள் தோறும்
உப்பால் கழுவுவது போலிருக்கிறது!

அரிதாக முதலில்
நான் கண்ட
கற்பனைகள் யாவும்
பெரிதாக தன்னுலகுக்குள்
அழைத்துச் செல்கிறது!

சொல்வாக்கு தவறாத
உன் குணம் கண்டதாலோ என்னவோ
செல்வாக்கை குறைவின்றி
பெற்று விட்டாய் என்னிடத்தில்!

கற்கண்டை சாப்பிட்டாற் போல - காதல்
சொற்கொண்டு நீ பேசுகையில்
ஆனந்த அருவியின் அலை வந்து
மோதுகிறது என் உள்ளத்தில்!

முரண்பாடுகளின்
தடயங்கள் அழிந்து போன
அன்பொன்றில்
கட்டுப்பட்டிடத்தான்
என் உயிருக்குள்
உடன்பாடுகள் அதிகமாக!!!

நரகச்சாலை !

இதயம் எதிர்கொண்ட
தாக்கங்களை
இரு வரியில் கூறிட
முடியவில்லை!

எதையும் தாங்கும்
இதயம் கொள்ள
எல்லோருக்கும் முடிவதில்லை!

அராஜகமாய் அரங்கேறுகிறது
அதிகாரத்தின் அடிவாடித்தனம்!

அநியாயமாக செத்துப் பிழைப்பது
அன்பு தேடும்
உள்ளங்கள் தான்!

அப்பாவிகளின்
உள்ளத்தின் வலிகளை
அப் பாவிகள் உணர்வதற்கு
ஏன் தான் சாத்தியமாவதேயில்லை?

தன் ஆளுமையை காட்டிடத்தான்
மனிதத்தோல் போர்த்திய
மிருகங்களை உற்பவித்தானா
அந்த இறைவன்?

மலட்டு மனம் கொண்டவர்களின்
பொறாமைத் தீயில்
எரிந்துவெந்து சாம்பலாகுவது
தத்தம் மரக்கட்டை
உடல்கள் தான் என்பதை
உணரும் காலம் வெகுதூரமில்லை!

உள்ளத்தில் விஷம் வைத்து
உதட்டில் தேன் தெளிக்கும்
கலையை கற்ற நரகசாலை எதுவோ?

நேசங்கள் !

இரத்தக்களறி ஆகிவிட்ட
என் வாழ்வை..
கண்ணீர் கொண்டு
கழுவியும் பயனில்லை!

சொந்தம் என்று சொல்லியே
சோகங்களை சொந்தமாய்
தந்துவிட்டுப் போனவர்களை
எத் திணையில்
நான் அழைக்க?

ஆழ் மனதில் உருவாகிய
காதல் கூட
காற்றில் எறியப்பட்ட
காகிதமாய்
பறந்து போனது!

உறவுகளின் உதறல்களால்
உடைந்த உள்ளத்தை
சீராக்க பட்டபாடெல்லாம்
மழை நீரில் விட்ட
கப்பல் தான்!

குதறி விடப்பட்டுள்ள
என் மனசின்
காயங்கள் தான்
காய்ந்து கிடக்கின்றன!

எத்தனை ஆறுதல் கொண்டும்
தேற்ற முடியாதபடி
மாரிகால வானம் போல
மரித்து தான் போயிற்று
என்னில்
ஊற்றெடுத்த நேசங்களும்
எனக்கான பாசங்களும்!!!

Saturday, September 4, 2010

ஓர் இதயத்தின் குமுறல்!



அட்டையாய் என்
இதயத்தில் அமர்ந்து
ஏன் என் இரத்தம் உறிஞ்சுகிறாய்?
உன் வார்த்தைகளின் சுனாமியினால்
சேதப்பட்ட உள்ளத்தை
சீராக்கத்தானே
நிலவினைப்போல
உன் நினைவுகளுடன்
தேய்ந்தும்
தூரமாகவே இருக்கிறேன்....

உனக்குத்தெரியாது
என் சோகம் தின்று
சோர்ந்து போன
கைக்குட்டைக்குத்தான் தெரியும்
இந்த இதயத்தின் புலம்பல்...

தூங்கினாய் நீ
கனவு கண்டது நான்..
வெயிலில் போனாய் பொனாய் நீ
வெந்து துடித்தது நான்...
குளிரின் கையிலே நீ
உன்னிடம்
போர்வையானது கூட நான்...

ஆனால்
இப்போது - தினமும்
இன்னொரு அரவணைப்பிலே நீ..
அதனால்
நித்தமும்
சாவின் பிடியிலே நான்!

சா தா ரணம்!



தோரணங்களாய் மாறி
என்னை அலங்கரிப்பதெல்லாம்
நான் பட்ட ரணங்கள தான்!

விரும்பியோ விரும்பாமலோ
காரணங்கள தெரியாமல்
துன்பங்கள யாவும்
ஆபரணங்களாய் மாறி
வதைக்கும்
என் அனுமதி துளியுமின்றி!

சாதாரணமாய் பொய்விடும் என்று
சமாதாகம் அடைந்தாலும்
அவையோ
சதா ரணமாகவே
தொடர்ந்த வண்ணம்!

விம்மலுடன் பொங்கியெழும்
கண்ணீரை மறைத்தே வாழ்ந்து
பழக்கப்பட்டவள் நான்...
சிலரின் அற்ப ஆயுளில்
பூரணமாக செத்துப்போகும் சுகத்துக்காக
வாழ்நாள் முழுவதும்
கண்ணீரை மட்டுமே
ஏந்த வேண்டியதாச்சு நான்!

ஏனிந்த அவலம்

சிறகுடைந்த பறவையின் பாடல்!



காலை நேர நிலவாய்
என் வாழ்நாள் கழிகிறது...
ஐயறிவு ஜீவக் கொண்ட
உரிமை கூட இன்றி நான்!

என் தலைதனில்
அரைக்கப்படும்
மிளகாயின் காரங்கள்
மகா கொடுமை!

வேலைவெட்டியின்றி
வெட்டிவேலை செய்வதில ;தான்
காலனுக்கும்
சந்தோஷமோ என்னவோ?

என் இதயப்பாத்திரத்துக்குள்
வேக வைக்கப்படுகின்ற
உணர்ச்சிகள் எனும் உணவுகள்
உப்புச்சப்பற்றதாகவே
கொட்டப்படுகின்றன நித்தமும்!

வழி தேட முடியா
பறவையின் நிலையில் நான்..
வலியில் சிறகுகள்
(து) அடித்துக்கொள்கின்றன...

என் நெஞ்சாங்கூட்டுக்குள்
தடவித்தடவி
எதையோ தேடுகிறேன்...
என் கைகளை அணைப்பதென்னவோ
வெறுமை தான்!!!

எலும்புக்கூடுகள்



அடிக்கடி நான்
மரணித்துப்போகிறேன்...
இந்த உலகம் விசாலமானதாம்...
ஆனால்
விசேஷமாக நான்
எதையும் காண்பதில்லை!

ஒரு அமானுஷ்ய சக்தி
எனக்குள் ஊடுறுவி விட்டதாகத்தான்
உணர்கிறேன்!

ஊரடங்கு நேர வீதி போல
வெறிச்சோடிக்கிடக்கிறது
இதயம்...
கடலைப்பிளந்த
நெருப்புக் குண்டமாக
மனசுக்குள்ளே
ஒருவித உருட்டுதல் சதாவும்!

என் ஆகாயத்துக்கு மட்டும்
அஸ்தமனம் மீது
அப்படி என்ன தான் காதலோ?

பகலில் சூரிய் - தன்
அகோரப்பற்களைக்காட்டி
என்னைப் பயமுறுத்த
நான் நேசித்வைகளெல்லாம்
நகம் வளர்த்த கையை - என்
குரல்வளையை நோக்கி
நீட்டியதாகவே!

மண்ணை தகர்த்துக்கொண்டு
வெளிவந்த எலும்புக்கூடுகள்
இரத்தம் நிரம்பிய குவகைளுடன்
உல்லாசமாக!

எல்லோருடைய குப்பைகளும்
என் இதயத்தொட்டியில்
இடப்பட்டதாய்
மாறுகிறது!

ஐயோ
ராட்சசக் கழுகொன்று
இதயத்தைக் கொத்திக்குதறி
ரணமாக்கிய வண்ணம்!

விஷ ஜந்துகள் எல்லாம்
என் மேனியை முத்தமிட்டு
செந்நீர் பருகி
காமம்
தீர்த்துச்செல்கின்றன!

ஓர் ஒளிக்கீற்றைக் கூட
கண்டிராத
கானகமொன்றின் நடுவில்
சிக்கிய
கோழிக்குஞ:சாய்
இப்போது நான்!!!

சீதனம் திண்ணும் கழுகுகளும், சிறகொடிந்த பறவைகளும்!

கவிதைகளை கண்ணீரால் கழுவுவது
வனிதையர் பெற்று வந்த வரமா?
களைஞர்கள் காரணங்களை
கதறி எழுதியும்
இளைஞர்கள் இளகாதது
வெறுமனே பணமா?

எங்கு பார்த்தாலும்
பொதுவான அந்த சிக்கல்...
பெற்றோருக்கும்
அதை எண்ணியே
சதாவும் விக்கல்...

சீ தனத்தை
வேண்டியலையும் இவர்கள்
ஒருமாத வேதனத்தை தானும்
காணாதவர்கள்!

பணக்கார நிரோசாவை
'நீ ரோசா' என்று விட்டு
ஏழைக்குமரி தேவயாணியை
'தேவையா' நீ என்கிறார்களே...

வாழத்துடிக்கும் இந்த
அபலைகளின் அபிலாஷைகள்
அந்தக்கழுகுகளுக்கு
புரியப்போவது எப்போது?

பிறவி செய்த பிழை !



அட்டையாய் என்
இதயத்தில் அமர்ந்து
ஏன் என் இரத்தம் உறிஞ்சுகிறாய்?
உன் வார்த்தைகளின் சுனாமியினால்
சேதப்பட்ட உள்ளத்தை
சீராக்கத்தானே
நிலவினைப்போல
உன் நினைவுகளுடன்
தேய்ந்தும்
தூரமாகவே இருக்கிறேன்....

உனக்குத்தெரியாது
என் சோகம் தின்று
சோர்ந்து போன
கைக்குட்டைக்குத்தான் தெரியும்
இந்த இதயத்தின் புலம்பல்...

தூங்கினாய் நீ
கனவு கண்டது நான்..
வெயிலில் போனாய் பொனாய் நீ
வெந்து துடித்தது நான்...
குளிரின் கையிலே நீ
உன்னிடம்
போர்வையானது கூட நான்...

ஆனால்
இப்போது - தினமும்
இன்னொரு அரவணைப்பிலே நீ..
அதனால்
நித்தமும்
சாவின் பிடியிலே நான்!

Wednesday, July 14, 2010

ஈமானியக்கொடி!



என் தகுதிக்கு மீறிய கற்பனைகளில்
இதயத்தை
மூழ்க விடவில்லை...
கானலாகும் உலக இன்பங்களை
என் உள்ளம்
நாடவுமில்லை!

மரபென்ற வேலிக்குள்
கட்டுப்பட்டிருப்பதால்
மார்க்கத்தின் தீஞ்சுவையை
உணருகிறேன் நான்!

யாரப்பே...
நீ தந்த குரல்கொண்டு
யாரையும் நான்
ஈர்த்தெடுக்கவில்லை..
கண்ணிரண்டால் ஆணகளுடன்
காதலுடன் போர்தொடுக்கவில்லை!

திருட்டுத்தனமாய்
தொலைபேசவுமில்லை...
தீய ஆசைகளுக்கு
வலைவீசவுமில்லை!

ஈமானியக்கொடி
இதயக்கிளையெங்கும்
படர்கிறது...
உள்ளத்தின் களை தீரத்து
அது சந்தோஷத்தைத் தொடர்கிறது!

ஷைத்தானை விட்டு
நானிருக்கிறேன்
தொலைதூரம்...
யாஅல்லாஹ்...
நன்மையை மட்டுமே
எதிர்பார்க்கிறேன்
ஒவ்வொரு நாளும்!

உன் நாமம் கூறினால்
கவலைகள் கழிகிறது..
ரஹ்மானே...
வல்லாவனாம் உன்
ரஹ்மத்
என் வாழ்வெங்கும் பொழிகிறது!!!

Tuesday, July 13, 2010

எனது ஊரும் தலை நகரும்

அங்கு...
நான் ஓடித்திரிந்த மேட்டுநிலம்
குளிர் பூசும் காலநிலை
பசுமைமிகு பச்சை மரம்
அண்ணார்ந்து பார்க்க குன்றுகள்!

மொட்டைமாடியமர்ந்து
கிறுக்கிய கவிதை...
மரத்தடி நிழலின் ஈரலிப்பு
பலாப்பழத்தின் வாசனை...
என் சமையலை ருசித்தவாறே
குறை கூறிய உறவுகள்..
அன்பின் உம்மா வாப்பா
சுட்டித்தம்பி
செல்லத்தங்கை!!!

இங்கு...
சுட்டெரிக்கும் சூரியன்
பச்சையம் மறந்த பொட்டல் வெளி
ஜீவிதம் கசக்கும் விடியல்கள்
வாகனங்களின் தொடர் இரைச்சல்
மூடியே கிடக்கும் ஜன்னல்கள்..
கொலையுண்டாலும் புரியாத அடுக்குமாடி...
நெருப்பு விலையாய் சாமான்கள்..
சுனாமி தந்த கடல் அல்லது கரை
செயற்கை சிரிப்புமற்ற மனித உயிர்கள்!!!

சரிந்து போன சந்தோஷங்கள்!

எங்கள் ஊரில் கிணறு செய்து
அதில் மீன்பிடித்து
மகிழ்ந்திருந்தோம்...
நீங்களோ
அமிலத்தை அதில் ஊற்றி
அலற வைதது சிரித்தீர்கள்!

உங்களோடு இணைந்தே
வானத்தின்
நட்சத்திரம் கோர்க்க
எண்ணியிருந்தோம்...
நீங்களோ
அவற்றையே எரிகல்லாக்கி
எங்களுக்கே வலி தந்தீர்கள்!

உங்களோடு தான்
கைகோர்த்து வர
ஆசைப்பட்டோம்...
நீங்களோ
எங்கள் தோளேறி
தூரம் கணிக்கிறீர்கள்!

உங்கள்
முன்னேற்றங்களைப் பார்த்து
இதயத்தில்
சந்தோஷம் ஏற்றியிருந்தோம்...
நீங்களோ
புழுவாய் எமை கணித்து
துடிக்க வைத்தே ரசிக்கிறீர்கள்!!!

Tuesday, July 6, 2010

எனதான மடமை!

வியாபாரத்தை மட்டுமே
விதியாக்கிக்கொண்ட பின்
உன்னை மாற்ற நினைத்தது
என் மடமை தான்!

கண்ணான கணவன் என்று
காலடியில் கிடந்து நின்று
அன்பை உன்னிடம்
மன்றாடிக்கேட்டதும் மடமை தான்!

கட்டிய மனைவியை
கணக்கிலும் எடுக்காமல்
கடைக்கணக்கில் மூழ்கியே
பணத்தின் பின் அலையும் உனை
உறவென்று சொன்னதும் மடமை தான்!

பிள்ளைகளைப் பாராமல்
பிறவியுடனும் சேராமல்
பிடிவாதம் காக்கும் உனை
என்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ
அழைத்ததும்
எனதே எனதான மடமை தான்!!!

மலை நாட்டிலும் சுனாமிங்க!

தேகத்தை வருத்தி
தேயில பறித்தாலும் - அதற்குரிய
பாகத்தை கேட்கையில
பலிபாவம் எமக்காகும்!

மாவு வெல அரிசி வெல
எகிறிக்கிட்டே போவுதுங்க...
காவு கொள்ளும் வறுமையை
எதிர்த்திடுதல் எப்படிங்க?

ஆயாவிடம் புள்ளைங்கள
பார்க்க சொல்லி விட்ட போதும்
தாயா நின்னு பாத்துக்குமா
இல்லேன்னாலும் என்ன செய்ய?

பெரியவனு மாசம் முழுக்க
சளி வந்து படுத்த போதும்
வறியவன்னு தெரிஞ்சதால
வைத்தியரும் பாக்கயில்ல..

லயத்து குடிசக் காம்பிராவில்
மூனு கொமருப்புள்ளயோட
பயந்து பயந்து வாழ்ந்ததிலே
பாதி வாழ்க்க போயிடிச்சி!

ரொட்டி திண்ணு வளந்த வுடல்
குப்பை தொட்டி ஆனதில
யாருக்குமே வருத்தமில்ல..
வருத்தப்பட ஒருத்தனில்ல...

கரைநாட்டில ஒருநாளு
சுனாமினு வந்திச்சிங்க...
நம்ம வாழ்வில் தினம் அதுதான்
தயவு செஞ்சி வெளங்கிக்கிங்க!

என் இதயமும் உன் பாதமும்!



காதலின்
மொத்த உருவானவளே..
இன்பங்கள ;பிரசவமாகிட
கருவானவளே...

சொற்ப கால உறவில்
சிற்பமாய் நீ எனக்குள்!

உன் மலர்பதங்களை
என் இதயம் தாங்குவதால்
நீ நடந்தாலும்
வலியிருக்காது பாரேன்!

என் கைகளோ
தூக்கத்தின் இடைவெளியிலும்
உன்னை தேடுகிறது...
நீ
இல்லாததை அறிந்து கொண்டு
மனசு கடுமையாய் வாடுகிறது!

புரிந்து கொள்!
மீண்டும் மீட்டிக்கொள்ளவே
தேவையில்லாதபடிக்கு
உன்னிடம் அடகு வைத்திருக்கிறேன்
என் மனசை..
காலம் முழுதும் காப்பாற்றித்தா!!!

தீ சுற்றிய காதல்!

மின்னல் இடி யாவும்
ஒன்று கூடி
வெட்டி முழங்கிய
அந்த இரவில்....

தனியாய் நான்
உறங்குகின்ற
யாருமற்ற நிலையில்...

என் இதயம்
வேகமாய் துடித்து ஓய
பிரயத்தனம் எடுக்கிறது!

நீ பிரிந்து போன கணத்திலிருந்து
தீ என்னை
சுற்றிக்கொண்டது...
வீணாகிய என் காதலை எண்ணி
அனைத்தும் என்னை
வெட்டித்தின்றது!

உன்மீதான என் காதலை
நீ
புரிந்திடாதபடி செல்ல...

துக்கம் தொடை அடைத்து
நாடி நரம் பு புடைத்து
நான் பட்டபாட்டை
எங்கனம் சொல்ல?

சந்திரனும் ஓய்வெடுக்க ஓர்
அமாவாசை வரும்....
என் வாழ்வு மட்டும்
மாறாமலே இருப்பது
நான் வாங்கி வந்த வரம்!!!

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

Wednesday, June 30, 2010

சுழியோடும் இதயம் !



நின்னை நான் நினைத்தது
நீ செய்த பிழையில்லை...
உன் மனசை நாடினேனே
எனக்குத்தான் தலையில்லை!

அகம் கேட்டுப் பழகினேன்-உடல்
சுகம் ஒன்றும் தேவையில்லை...
உன் அலட்சியங்களை தாங்கிட
என் இதயம் ஒன்றும் பாலையில்லை!

உன் இதயத்துக்குள் வந்த நான்
இடையிலேயே போகிறேன்....
மீதியுள்ள வாழ்நாளில்
தனியாகவே சாகிறேன்!

ஈரமுள்ள நெஞ்சுக்குத் தான்
இதயத்தில் வலியெடுக்கும்....
அன்பு நதியில் நீச்சலடித்தால்
இறக்கும் வரை சுழியடிக்கும்!

இருட்டில் தடுமாறும் ஒளியொன்று…..!

காலைக் கடித்த நாய் கூட
சில நேரம் வாலாட்டலாம்...

புல் தின்னாத புலியும்
பூனையை தன் மடியிலிட்டு
தாலாட்டலாம்!

பழமும் அமுதும் கொடுத்து
வளர்த்தாலும்..
மேனி மினுங்க புரண்டு
நெளிந்தாலும்...
கொத்துவதை தவிர
வேறொன்றும் தெரியாது
பாம்புக்கு!

மனிதன் என்ற பெயரில்
பேயாடும் ஒரு இடத்தில்
வாழ்க்கைப் பட்டிருக்கிறேன்!
பிறருக்காக சிரித்திருக்கும்
நான்;;;.....

உண்மையில் அழுவதற்கு கூட
மறுக்கப் பட்டிருக்கும்
காதல் கைதி!

என்னை மட்டும் தேர்ந்தெடுத்து
விளையாடிப் பார்க்கிறது
விதி!
பல இதயங்களிலிருந்தும்
தூக்கி எறியப் பட்டு
விழுந்தடிபட்டு
துடித்த போதெல்லாம்.....

என் தலை தடவிய
தனிமையே,பேனையே,இருட்டே
இப்போது
நீங்களெல்லாம் எங்கே
போய் தொலைந்தீர்கள்?

ஆறுதல் வேண்டி அலைகிற
என்னை மன்னித்து நீங்களாவது
ஏற்றுக் கொள்ளுங்களேன்!!!

இயற்கைக்குள் தொலைந்த பின்!

ஐயோ!
நான் படும் வேதனைகளை
அந்த சூரியன பட்டிருந்தால்
பட்டப் பகலிலே
இருளுக்குள் மறைந்திருக்கும்!

உன் குணம் தெரிந்திருந்தால்
காற்றும் உன்னருகே வர
அஞ்சியிருக்கும்!

கவலைகளுக்கு
என் நிலை தெரிந்தால்...
பாவமென விலகியிருக்கும்!

பிரச்சினைகளுக்கு
என் மனம் புரிந்திருந்தால்
ஓசைப் படாமல் ஒதுங்கியிருக்கும்!

நான் வதை படுவது கண்டு
நம்பிக்கைக்கே தன் மீது
நம்பிக்pகயற்றுப் போயிருக்கும்!

எதிர்காலம் பற்றின
என பயமறிந்தால்....
பயமும் உடனே ஒளிந்திருக்கும்!

கண்களில் ஊறும் கண்ணீர் கூட
வருத்தத்துடன்
வற்றியிருக்கும்!

மனசிற்கு தெரிந்திருந்தால்
அது மங்கிப் போய்
மரத்திருக்கும்!

உள்ளம் கொஞ்சம்
அறிந்திருந்தால்.......
எழும்பாமலேயே
உறங்கியிருக்கும்!

இதயமாவது புரிந்திருந்தால்
துடிப்பையாவது
நிறுத்திக் கொண்டிருக்கும்!!!
Posted by தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

உதிர்ந்த மலர் !

பாருங்கள் கொஞ்சம்....
சாலையோர சாக்கடையில்
என் உடல் வீழ்ந்து கிடக்கிறது!

எச்சில் வழிய
நாக்கை தொங்க விட்டிருக்கும்
இந்த தெரு நாய்க்கு
என் நிலை தெரியாமல்
இல்லை!

என் பிணத்தை
காகங்கள் கூட
அண்டாமல் போவதேனோ?

ஆடை விலகிக் கிடக்கும்
என் அவயவங்களை மட்டும்
ரசிக்கின்றனர்...
மோகம் கொண்ட சிலர்!

மர்;மம் பேசும்
என் மரணத்துக்கு..
வேடிக்கை பார்க்கிற
இப் போலீசுக்கும்
பரிசோதிக்கச் சொல்லும்
டாக்டருக்கும் பங்குண்டு!

ச்சீ..என்ன இது?
வெண்கட்டிகளால்
சித்திரம் கீறிய படி....
நானென்ன
அலங்கார கண்காட்சியா?

நேற்று வரை
என் தலைவலிக்கு
வெறும் பெனடோல் தந்த
டாக்டரும்;;;.....
மஞ்சட் கடவையில்
மயங்கி விழுவதைக் கண்டும்
விசிலடித்து விளையாடிய
போலீசும்........
மர்;மம் பேசும்
என் மரணத்துக்கு..
காரணமானவர்கன் தான்!!!!

பிறவி செய்த பிழை !

மனசில் பதிந்த எனை
மறந்து விட்டுப் போ என்கிறேன்..
நீயோ...
இதயமே நானாகி விட்டதாய்
இன்று வரை உளறுகிறாய்!

தாங்க முடியாத
வார்த்தைகளாலும்..
மன்னிக்க முடியாத
குற்றங்களாலும்..
துளைத்தெடுக்கிறேன் நான்!

நீயோ..
உன் உலகமே நானென்று
உறுதியாகவே உளறுகிறாய்!

உனை மட்டும் எண்ணியே
வாழ்நாளை கழித்திடுவேன்..
எனை மறந்து நீ..
உன் வாழ்வை வசந்தமாக்கப் பார்!

நடப்பதை யோசி
கிடைப்பதை ஆசி
சீனியற்ற தேனீரை சகித்துக் கொண்டே
குடிப்பது போல்.....
நீயற்ற பொழுதுகளையும்
நினைவுகளால்
சிறை படுத்திக் கொள்வேன்!
பிநவி செய்த பிழை தானே
பெண்ணாக பிறந்து விட்டேன்....

ஏற்கத் தான் உன்னால் முடியாது
உன் எதிர்காலத்தையாவது
சிறப்பாக்கிக் கொள்!!!

குட்டிக்கவிதைகள்!

மச்சம் !

உன்
உதட்டருகே
உலா வந்து
உயிர் வாங்குதே மச்சம்..
சத்தியமாய் நீயின்றி மனசுக்குள்
ஏதுமில்லை மிச்சம்!

நிலவுப்பெண்ணே!

நிலவுப்பெண்ணே
எத்தனை ஆயிரம் நட்சத்திரக் காதலர்கள்
உன் கடைக்கண் பார்வை கேட்டு
தவமுடன் ஏங்க...
நீயோ
யாரை எண்ணி உடல் மெலிவதும்
பின் பூரிப்பதும்???

மாற்றம் !

வஞ்சியே!
உனை இதயம் ஏற்ற போது
பூக்கடையாகத்தான இருந்தது..
உன் பிரிவு தந்த சோகத்தின் பின்
சாக்கடையாகிப்போனது!

துரோகம் !

உன் ப்ரியத்தை
கடித்தில் உள்ளடக்காதே...
அது
சுவைத்துக்கொண்டு இன்பத்தை
தருகிறது வெறும் வார்த்தையை!!!

சமர் !

ஆவலுடன் உன்னில்
நான் மலர் கொய்கிறேன்...
பார்வைகளால் ஏனடி
சமர் செய்கிறாய்?

கண்ணாடி !

உன் கண் நாடி போதுமே
கல்நெஞ்சையும் கரைய வைக்க!
கண்ணாடியூடாக காந்தப்பார்வை எதற்கு?

'கத்ரினா' கயல்விழியே!

'கத்ரினா' கயல்விழியே!
உன் பார்வையால் மோசமாக தாக்கப்பட்ட
இதயத்தை
காதலெனும் வைத்தியசாலையில்
அனுமதித்திருக்கிறேன்..
இதை சுகமாக்க மறுக்கும்
உன் உள்ளம் தான் இன்னும்
விதியில் காலடியில்
சிக்கியவாறே..!

பூட்டு !

உன் ஆன்மாவைக் கொஞ்சம்
எட்டிப்பார்
அதன் வாசலில் முழந்தாழிட்டு காத்திருக்கிறேன்
காதல் வரம் கேட்டு...
அதை புரியாதபடிக்கு
என்ன வேண்டிக்கிடக்கு
அப்படியொரு பூட்டு?

நட்சத்திரங்கள் !

இன்று என் வானில்
ஏன் இத்தனை நட்சத்திரங்கள்?
ஓ...
நீ கண்விழித்துப்படிக்கிறாயா?

இதயம் !

இதயம் என்ன
இன்டர்நெட்டா?
நினைத்தவுடன்
வருவதற்கும்
போவதற்கும்?

'நீ' !

மொத்த தமிழ் எழுத்துக்களில்
பிடித்தது எதுவென்றாய்...
உடனே 'நீ' என்றேன்...
உன்னையே சொல்லி விட்டதாய்
குரூர திருப்தி எனக்குள்!

பாலைவனம் !

காதல் குழைகளாய் பூத்துக்குலுங்க
நட்டினேன் உன் இதயத்தில்
வாழைமரம் ஒன்று...
நான் அறிந்திருக்கவில்லை
அது ஒரு பாலைவனம் என்று!

அசிங்கம் !

பொடுகை அசிங்கம் என
வெறுத்தவன் தான் நானும்...
உன் தலையில் அதை
காணாத வரை!

தீர்த்து விடு !

சிலந்தியே!
பூச்சி நான்
உன் வலையில்
வேண்டும் என்றே சிக்கிக்கொண்டேன்!
அப்படியே இரையாக்கி
அன்பால் என்னை
தின்றுத் தீர்த்து விடு!!!

Tuesday, June 29, 2010

துவம்சத்தில் இதயம்!

அதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்கான
அர்த்தங்கள் எனக்குப் புரிகிறது!

அழகு,அறிவு, ஆற்றல்...எல்லாமே
அதிர்ஷ்டத்தின் முன்
கானல் நீர் தான்!

வாழ்வின் பிடிகளுக்குள்
சிக்கிக் கொண்டதால்
வழிகள் ஏதுமின்றி
இரத்தமும் ஆவியாகிப் போகிறது!

சோர்வு துக்கம் விரக்தி பிணி
எனக்குத்தான் எத்தனை உறவுகள்!

நிமிடங்கள் தோறும்
எச்சரிக்கை மணி
துவம்சிக்கிறது இதயத்தை!

கொடூரமான நினைவுகளில்
ரௌத்திரமாகி
கொதித்து சாகிறது
உயிர் பறவை!!!

பிழை பொறுக்க வருவாயா?

மண்ணுள்ளே
புதையுண்டுப் போன
உத்தமியே!

மனசாட்சிக்கு கட்டுப்பட்டு
மனிதனாய் வாழத்தன் ஆசையிருந்தது எனக்கும்!

காலம் செய்திட்ட கலவரத்தில்
இன்று கயவன் பட்டத்துடன்
நான் - இது
இன்றைய என் நிலவரம்!

விதியின் பூட்சுக்கால்களால்
தினமும் நசுக்கப்பட்டு பழகியதால்
இன்று உள்ளம் கிடக்கிறது
குற்றுயிராய்!

சில அரக்கர்களின்
வரட்சிப் பசிக்கு - என்
இதயச்சாறல்லவா
பிழியப்பட்டது?
எல்லாம் முடிந்த பின்
கல்லாயிருந்த அது
தகர்க்கப்பட்டது!

நீ அறியாய்...
அறியாமலேயே போய் விட்டாய்!

நான்
சூழ்நிலைக் கைதியாகி விட்டேன்..
என் வாழ்வும்
இருள் மயமாகி விட்டது!

உன்னை தேடி
ஓடி வருகிறேன்...
பிழை பொறுத்து
என் உயிராய்
இருக்க வருவாயா?

இடியாடும் வானமும் புயலாடும் பூமியும்!

ஆக்ரோஷமாக... பாறையில்
ஆவேசத்துடன் மோதியும்
தோல்விகளை சுமந்தே
திரும்புகின்றன
கடலலைகள்!

எஞ்சியிருக்கும் மீதி நாட்களும்
அப்படியே ஆகிடுமோ என்றே
இடியும் புயலும் மனாதில்
நர்த்தனம் செய்கிறது!

என் எண்ணங்கள் எதுவுமே
வண்ணம் பெற்று சிறப்பானதேயில்லை!

கற்பனைக் கடலில்
மிதக்கிறேன் - எனினும்
ஒன்றாவது விற்பனையாகி
ஈடேற்றம் காணாத
கானல் நீர் தான்!

நஞ்சுச் செடியைச் சுற்றி
வேலியிட்டு என்ன பயன்?
முட்டைக்குள்ளே - அழகிய
முத்தொன்றை எதிர்பார்த்ல்
அறிவாகுமா?

பிடிக்கவில்லை எனக்கெதுவுமே..
மலரொன்று முட்களில் வாழ்வதும்..
சிலர் சொற்களில் உயிர்கள் வீழ்வதும்!!!

எனக்கான ஆறுதல் கரம்!

என் அறிவில் பதிந்திடாத
நாமம் கொண்ட மரமே...
உனை பெற்றதென்னவோ
நான் செய்திட்ட தவமே!

இன்று...
உன் இதய வால்வுகள்
அறுந்து தடிக்கின்றன...
கிளைகளை மட்டும் தானே
இழக்கப்போகிறாய் என்று
போலிச் சமாதானம்
ஒன்றைச் சொல்லியே
தேற்ற வேண்டியதாச்சு
எனையே நான்!

ஆனால்...
வேர்விட்டு படர்ந்திருந்த உன்னை
முழுவதுமாய் வெட்டிப் போட்ட
பின்னால் தான் உணர்ந்தேன்
உனை மிகவும் தான்
இழந்து விட்டேன் என்பதை!

மொட்டை மாடிதனிலிருந்து
என் சோகங்களையும்
சுகங்களையும் கூறுகையில்
முகம் சுளிக்காது
அகம் வலிக்காது
எதன்றலின் சிலுசிலுப்பாலும்
இலைகளின் சலசலப்பாலும்
இதயத்துள் இதமூட்டுவாயே!

நீ
தும்பிப் பூச்சியாய்
சிறகடித்து திரியும் சிறார்களின் நந்தவனம்..
சுள்ளி விறகையும் கொடுத்துதவும்
உன் தயாள குணம் அறிந்திருந்ததால்
இப்போது
சிதறுண்டு போயிற்று என் மனம்!

ஈரெண்டு ஆண்டுகளாய்
நீயின்றி நானில்லை வாசகம்
பேசி வஞ்சித்த என்னவளுக்கும்
கள்ளிச்செடி சொந்தம் கூறி
கழுத்தறுத்த கயவர்கள் மத்தியிலும்
நீ
வெறும் மரமல்ல...
என்னை தட்டிக்கொடுத்த
ஆறுதல் கரம்!

பசியாற்றும் தனிமை!

தூர இருந்தால் தானே
மழைத் தூறல்களுக்குக் கூட
மகிமை!
என்னைத் தான் பிடித்து
தன் பசியாற்றிக் கொள்கிறது
இங்கே தனிமை!

நீ;
நொடிப் பொழுதில்
என் நோய் தீர்த்துச்
சென்றவள்!
கொடி இடையாய்
அந்த மாந்தோப்பில்
நின்றவள்!

உன்னைப் பற்றி இதயத்தில்
எத்தனையோ வண்ணங்கள்!
அவற்றை விட உயிரூட்டுவது
உன் இரு கன்னங்கள்!

மனசைக் கட்டிப்போட்டு
என் உணர்வுகளை
தட்டிய பெண்மையே!
உன்னுடனான
வாழ்க்கை கேட்டு
கெட்டழிகிறேன்
இது உண்மையே!!!

சூறாவளிக் காதல்!



தூரே இருந்தபோது
வார்த்தைகளில் கூட காதல்
தூவானம் பொழிந்தது!
அருகில் வந்தபிறகு
அனைத்தும் மாறி காதல்
எனைப்பார்த்து
தூவென காறித்துப்புகிறது!

யாரிடமிருந்தும்
சந்தோசங்களைப் பறிக்கவில்லை - நான்
ஒருபோதும் காதலின் பெயரால்
வேசமும் தரிக்கவில்லை!

சூழ்ச்சிகள் செய்து ஒருநாளும்
நேசம் கொள்ளவில்லை - எனினும்
என் காதல் உள்ளம் சதாவும்
வீழ்ச்சி காண்பதுபற்றியும் தெரியவில்லை!

எதுகையும் மோனையுமாய் இருந்த
நம் காதல் இன்று
முன்னுக்குப் பின் முரணாகுவதை
அறிந்தவள் நான் மட்டுமே!

தீபாவளியாய் சந்தோசம் கண்ட
என் உள்ளத்தில் தற்போதெல்லாம்
சூறாவளி பயங்கரமாய் சுழன்றடித்தபடி!

அன்று
காவலனாயிருந்த கோவலன்
கேவலனாகிவிட்டான்!
இன்று
அன்பாய் பழகிட்ட நானும்
வம்பாகிப்போனேனோ?

நம்பி வந்த சொந்தமெல்லாம்
என்ன ஆனதோ?
எல்லாமே எனை ஏமாற்றி
மண்ணாய்ப் போனதோ?

திகட்டிக் கொண்டிருந்த
என் பிஞ்சு உள்ளத்தில்
இப்போதெல்லாம் ஏதோ
ஒன்று தெவிட்டியபடியே!

நாவினால் சுட்ட வடு - ஒரு
நாளிலும் மறக்க முடியாது!
கசிந்துருகிக் கெஞ்சினாலும் இனி
உன் மனம் என் வசம் படியாது!!!

கடலளவு நேசம்!

உன் திருமணத்தின் பின்
நான் வெறுமனே ஆகிடுவேனோ?
எனைப் பிரிந்து ஓடிவிட்டால்
இதயம் எரிந்து வாடிடுவேனோ?

வற்றாத நதியாய் உன்மீது என்
நெஞ்சில் காதல் வெள்ளம்!
எனைவிட்டு நீ சென்றால்
மனமெப்படி தாங்கிக் கொள்ளும்?

காட்டிடாதே அன்பிலே
எனக்கு தட்டுப்பாடு!
கவலை தந்த எனை மன்னித்து
அன்பால் கட்டுப்போடு!

இதயத்தில் படர்ந்துவிட்டாய்
வேராக!
எனைத்தனியாக பரிதவிக்கவிடாதே
வேறாக!

அழுதிடுவேன்..
உன் நினைவுகளில்
விழுந்திடுவேன்!
நின் நன்மை வேண்டி இறைவனை
நிதமும் நான் தொழுதிடுவேன்!

துடிதுடிப்பேன்..
நான் கண்ணீரும் வடிப்பேன்!
நெஞ்சிலிருக்கும் உன் பெயர்
தினம் தினம் தவறாது படிப்பேன்!

உடலளவில் நீ
தூரதேசம் சென்றாலும்..
கடலளவு நான் கொண்ட
நேசம் வற்றாது ஒரு நாளும்!!!

சொல்லி(ல்) அடங்காத சோகம்!

பாசம் வைத்த எல்லோருமே
பாதியிலே பிரிந்தது போல்
நேசம்கொண்ட நீயும்
நெஞ்சில் முள் தைக்கிறாய்?

உனை பிரியக்கூடாதென்ற ஆதங்கத்தில்
ஊனுறக்கம் மறந்து அழுததெல்லாம்
பேய் போல் எனைக்காட்டி
பேசவிடாமல் செய்கிறதோ?

கண்ணீரே என் உறவாகி
கவலைகள் மட்டும் எனக்கு வரவாகி
இதயத்தைக் கொல்வது போல்
இம்சை ஏதும் இருக்கிறதா?

காதலியின் கால்களைக்கூட
காதலுடன் முத்தமிட்டு
அணைக்க நினைத்தாலும்
அனைத்துக்கும் கடும் சத்தம்தான்!

பலரின் மத்தியிலும் சகியே
நீயென்னை பரிகசித்த போது
பாவியென் மனம் என்ன
பாடுபட்டிருக்குமென்;றும்
கொஞ்சமாவது பார்க்கலியே???

என் நந்தவனத்து புஷ்பமே!

காதலோடு நீ என்னை
பார்க்கிறபோதும் - அதனால்
என் கவலைகளை தீர்க்கிறபோதும்
வாழ்வின் வசந்தம் புரிந்ததம்மா!

உனைக்காணும் முன்
கோழையாய் இருந்த எனக்கு
காலை மாலையெல்லாம்
காதலிக்க கற்றுத்தந்தாயே!

வாலிபக் காற்றே..!
உன்னால் புரிந்துகொள்ள முடியுமா
நீயில்லாமல் என் ஜீவன் இல்லையே?
நீ முகம் சுளித்தால்கூட
கண்ணீருக்கு
நான் தத்துப்பிள்ளையே!

காலைகளில் காதுமடலருகே
இன்பமாய்த் தவழும்
உன் சத்தமும்..
அணைத்த படியே
அன்பாய் நீ தரும்
முத்தமும் தென்றலாய்மாறி
எனைத் தீண்டிச்செல்லும்!

உன் ஸ்பரிசத்தால் நான் இன்னும்
என்னென்ன ஆவேனோ?
உன் அன்பால் சுருண்டு
உனக்குள்ளே வாழ்வேனோ?

என் நந்தவனத்து புஷ்;பமே!
நீயின்றிய என் வாழ்வில்
இதயத்துடிப்பு சொற்பமே!

வா..
வந்தென்னை உடனே
ஆக்கிரமித்துக்கொள்
உனக்குள் என்னை சீக்கிரம்
ஒளித்துக்கொள்!!!

கனவுகள் பொய்த்த ராத்திரிப் பொழுது !

எரிச்சலில் இதயம் எரிகிறது
என் விதி கொண்ட
அன்பைப்பற்றி
கொஞ்சம் கொஞ்சமாக
எனக்கும் புரிகிறது!

உன் முத்தங்கள்
முள்ளாய் வலிக்கிறது!
சுவாசக் காற்று கூட
என்னைச் சுட்டு எரிக்கிறது!

மூளையைக் கொத்திவிட்டுப் போகிறதே
நரமாமிசம் திண்ணும்
நாகப் பாம்பொன்று!

மொட்டை மாடியிலே
தன்னந்தனியாக
நான் உலாவரும் போது
விலா துடிக்க வைத்திற்றே
உன் விசவசனங்கள்!

கடின பிரயாசை கொண்டு
இன்பங்களை மட்டும்
வருவிக்கப்பார்க்கிறேன்!
ஆனால்..
உயிரின் இழை அறுந்தபடியே
மரணத்தின் கோரவெம்மை
கைநீட்டி அழைக்கிறதென்னை!

கனவுகள் பொய்த்துப்போகிற
ராத்திரிப் பொழுதுகளில் துளிர்க்கும்
உன் மீதான சுகானுபவங்களை
முளையிலே வெட்டியெறிந்து
எள்ளிநகையாடிவிட்டு சிரிக்கிறது
என்னைப்பார்த்து என் ஜீவிதம்!!!

மண்டை ஓடும் இரத்தக்கசிவும்!

உன் இதயத்தை
பூங்கா என்றல்லவா எண்ணியிருந்தேன்
முற்றும் முழுதாக
கள்ளிச்செடி இருப்பது பற்றி தெரியாமல்!

என் மண்டையோட்டு
இரத்தக்கசிவுகளிலும்
உன்னால் மறக்கப்பட்ட நிகழ்வுகளிலும்
நிறைந்து வழிகின்றன
நான் கண்ட ஏமாற்றங்கள்!

என் அன்பென்ற
புண்ணிய ஸ்தலத்தை
எச்சம் செய்து போன காகம் தானே நீ!

பொய் மட்டுமே பூசப்பட்டிருந்த
காட்சி சித்திரத்தின்
முழு உரிமையும் உனக்குத்தான்!

என் மௌன இரட்சிப்புக்களால்தான்
நான் இன்னும் உயிர் வாழ்வதாய்
காதோரம் சொல்லிப் போயிற்று
பெருங்குரலெடுத்து ஆந்தை ஒன்று!!!

உணர்வுப் பிரிக்கை !

சூரியன் அஸ்தமனமாகும் வேளைதனில்
என் ரணமாகிய நினைவுகள் விழித்துக்கொள்ள..
நிலவு மறையும் காலைகளில்
போலி ஒளிக்கீற்றுகள்
பரப்பிவிடப்பட்ட நிலையில் நான்!

வானுள் புதைந்து போன நட்சத்திரங்களாய்
ஆயிரமாயிரம் வாட்டங்கள்
வெளிப்பட முடியாமல் தவிக்கிறது!

உலகத்தின் பார்வையில்..
வாதித்தால் நான் வாயாடி
அடங்கி நின்றால் திமிர்காரி
கோபப்பட்டால் அடங்காப்பிடாரி
சமாளித்துப்போனால் ஏமாளி!

இப்பட்டங்கள் அப்பட்டமாகவே
சொல்லப்படுகையில் கொதிக்கும்
எண்ணெய்யில் இதயம் விழுந்தாட் போல!

என்னுள் ஊற்றெடுக்கும் உணர்வுகளை
எல்லோரும் அறிவதில்
ஏனோ எனக்கு உடன்பாடில்லை!

என்னில் உற்பத்தியாகும் சில வினாக்களுக்கான
விடைகள் இன்னும் ஓர் பூர்வீகத்தின்
சுவடுகளுக்குள் ஒழிந்த படியே!

அதனால் தானா எல்லோரும்
சந்தோஷ வாசலில் வாழ..
என் உயிர் மட்டும் ஊசலில் வாடுகிறது???

பூமி திண்ணும் பூதம் பற்றி!

சில பெருத்த தலைகளின்
மலட்டு ஆவல்களினால்
என் எதிர்காலமெனும் குழந்தை
இன்னும் ஜனனிக்கவேயில்லை!

காலுடைந்த கிழட்டுப் புலியின் ஏக்கம்
போலவே இன்;னும் அடைய முடியவில்லை
என் இலக்குப் பட்சியை!

சருகாய் போன சானத்துக்கிருக்கும்
மதிப்பு கூட துளியும் இன்றி
என் வானம் இருட்டாகத் தான் எப்போதும்!

சதாவும் ஆழ்மனசிலே எரிமலையின்
குமுறல்கள்..
பூகம்பம் ஓய்வெடுத்துக் கொண்டு
என் மூளையை சுற்ற விட்டு
வேடிக்கை பார்ப்பதாய் ஓர் பிரமை!

தேர்தல் கால அரசியல் வாதியாய்
தோன்றி மறையும் சில சந்தோஷங்கள்!

உலகமே எனக்கெதிராய்
சதி செய்து விட்டு..
பலியை விதிமேல் இட்ட உணர்வொன்று!

என் பூமியை இப்போதெல்லாம்
ஓர் பூதம் விழுங்கிய படியே!
எனினும்..
எதிலோ ஆர்வம் கொண்டு
என் ஆன்மா இன்;னும் வாழ்வதற்கு
பூஜித்துக் கொண்டே..!!!

மனித நேயம்!

மனித நேயம்
மரணித்துப் போய் விட்ட பின்
அதனை உயிர்பிப்பதென்பது எவ்வாறு?

காலப் பேரலை என்னையும் தான்
மாற்றிப் போட்டு விட்டதே?
நான் மட்டுமென்ன விதிவிலக்கா?

வியர்வையும் தன்
நாசியை மூடிக்கொள்ளும் படியான
சனக்கூட்டம் அங்கே!

தொண்டையில் நீர் வற்றினாலும்
எங்கிருந்து தான் வந்ததோ தெரியவில்லை
~சீட்| பிடிக்கும் தைரியம் மட்டும்!

முன்பெல்லாம் மனசிலாவது
இடமிருந்தது..
இப்போது மருந்துக்கும்
அது இல்லை!

பருவ வயதுப் பெண்ணும்
தள்ளாடும் கிழவியொருத்தியும்
கால் கடுக்க நின்றவாறங்கே
பஸ்ஸ{க்குள்..
யாருக்கு இடம் தரலாம்?
சபலப் புத்தி எனை
கட்டிப் போடுகிறது!

நியாயம் இடையில்
அடிபட்டு செத்ததால்..
வாக்கு வாதமே
க்ரீடம் சூட்டிக் கொள்கிறது!

கிழவிக்காக நான் இளகினாலும்
ஏதோ ஒன்று மனசை
முறுக்கிக் கட்டிக் கொண்டே!

உணர்ச்சிகளின் கொந்தளிப்பில்
மனசாட்சி எரிந்து சாம்பலாயிற்று!

இளமையின் பிடிகளுக்கிடையில்
மோட்சத்தைப் பற்றி
எங்கே நினைப்பேன்?

அப்போது.. அதோ..
பருவ வயதுப் பெண்ணுக்கு
ஆசனம் அங்கே அதிஷ்டவசமாய்!

ஸ்ருதியிழந்த பாடலானேன்!
இப்போது எந்த சலனங்களும்
இல்லை தான்!
எனினும்..
கிழவிக்கு இடம் தர மறுத்த
அந்த ஏதோ ஒரு அவஸ்தை
மெதுவாக.. மிக மெதுவாக..
அடங்கிப்போகிறது!!!

சூழ்நிலைக் கைதி !

அழுத்தமாக ஒரு வார்த்தை உன்
அதரம் விட்டு வெளி வந்தாலும்
இரும்புருக்கி சொருகியது போல
இதயத்தில் வலியெடுக்கிறது!

சூழ்நிலை கைதியாகி
சுகம் நான் கண்ட பின்பு
அகம் முழுவதும் வியாபித்து விட்டது
அழிக்க முடியாத சோகம்!

எனை நானே தேற்றிக் கொள்ள வேண்டிய
வரட்டுப்பிடியில் சிக்கி
சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பது பற்றி
எனக்கும் விளங்குகிறது தான்!

தேசம் விட்டு
பல மைல் தாண்டி உன்
நேசம் மட்டும் தேடியே ஓடி வந்தேன்!

நீயோ எனை வெளி
வேஷக்காரி என்றெண்ணி அன்பில்
மோசம் செய்து துவம்சிக்காதே!!!

குழந்தை மனசுக்காரி !

இதயப்பாகம் பாறை வைத்தாற்
போல கணக்கிறது!
திரும்பும் திசை எங்கும் தீப்பிடித்த
பிணவாடை மணக்கிறது!

ஒரேயொரு முத்தத்தில் மொத்த
கவலையும் கழிந்துவிடும் என்று
தப்புக்கணக்கு போடுகிறாயா?
அல்லது
முற்று முழுசாய் அன்பை
வெளிப்படுத்த முடியவில்லையே என்று
இதயம் வாடுகிறாயா?

உறவுகள் நெருக்கமாய் இருப்பதெல்லாம்
பிரிவுகளிருக்கும் வரை தானா?
இடைவெளி குறைந்து விட்டால்
அன்பிற்குள் இடைஞ்சல் வருமா?

விதி என்று வீராப்பு பேசினாலும்
சதி தானோ என்று
நினைக்கும் குழந்தை மனசுக்காரி நான்!!!

நானும் என் வாரநாட்களும்!

தொடர்ந்து நாம் சந்தோசமாய்
இருக்க நினைப்பதை
ஏன் தான் இந்த
வார நாட்கள் தின்று தீர்க்கிறதோ?

ஓரிரு தினங்களை உன்னுடன்
கழித்த மகிழ்ச்சி எனை சில நேரங்களில்
ஆர்ப்பரித்துச் சென்றாலும்..
ஏதோ ஒரு வெறுமை உணர்வில் மனசு
உறைந்த படியே!

தூக்கம் என் கண்களை
தழுவிச் செல்ல..
கனவிலும் என் பார்வைகள்;
உன்னில் பதிந்ததாகத் தானே?

உள்ளுக்குள் ஒரு குமைச்சல்..
உள்ளத்தில் ஒரு எரிச்சல்...
புரியவில்லை ஏனென்று?

ஒன்றாய் விழித்து
ஒன்றாய் குளித்து
ஒன்றாகவே சாப்பிட்டு..
பஸ் நிலையம் வரை வருவாயே?
வாகனப் புகைச்சல்
உன்னை மூச்சு முட்டச் செய்தாலும்
எனை வழியனுப்பி விட்டு நீ
கையசைக்கும் போது
இதயம் மிக கடுமையாக
வலிப்பது பற்றி உனக்குத் தெரியுமா?

ஓர் புள்ளியாய்
நீ மறைந்து போகும் வரை
கண் சிமிட்டாமல்
உனையே நான் பார்த்துக் கொண்டிருப்பது
பற்றி அறிய மாட்டாய் நீ!

உன் மார்புக்குள் முகம் புதைத்து
நான் தூங்கும் தூக்கத்தில் தான்
என் அத்தனை புலம்பல்களும் கவலைகளும்
தீர்ந்து போகின்றன!

புது யுகம் காண
புது வழி காட்டிய உனைப் பிரிந்து
நானிருக்கும் ஏழெட்டு மணித்தியாலங்களை
நினைத்தால் தான்
வார நாட்களை கொஞ்சமும்
பிடிப்பதில்லை எனக்கு!!!

நீ எனக்கானவள்!

என் இதயமெனும் அட்சய
பாத்திரத்தில் உன் எண்ணங்களே
சுரந்த வண்ணம் முடிவிலியாக!

ப+ விழியே..!
ஒரு வழியில் நாம் ஒருமித்திடத் தானே
தவமிருந்ததாய் நீ சொன்ன ஞாபகம்?

இப்போதென்ன
மனசு மருகிப் போயிற்றா
மனசாட்சி கருகிப் போயிற்றா?

கண்ணுறக்கம் தொலைத்து
கனநாளாகி விட்டது!
விரும்பியுண்ணும் ஐஸ்கிறீம் கூட
வெந்நீராய் சுட்டது!

சகியே..!
உன் மன்னன் மாய்ந்திட முன்
ஒரே ஒரு தடவை
உன்பாதம் கொண்டு
என் உள்ளத்தில் ஓர் தடம் வை!
நீ எனக்கானவள் தான் என்று!!!

சாத்தான்கள் சாட்சி சொல்கின்றன!

நான் மூளையை கழற்றிப் பார்க்கின்றேன்..
அதன் அறைகளுக்குள்ளே..
குட்டிச் சாத்தான்கள் ஓடிப் பிடித்தும்
ஒளிந்து திரிந்தும் விளையாடிய வண்ணமாக!

என் நுரையீரலை நோக்கிக் குனிகிறேன்
கசப்பான அனுபவங்ஙளால்
குப்பை படிந்த நிலையிலே அது!

குடல்களை மாலை செய்து போட்டு
ரசிக்க முற்படுகையில்
எனை ஏமாற்றியவர்களின்
வார்த்தை விஷம் அதில் வழிந்த படியே!

செவிகளிரண்டை ஆராய்கிறேன்..
செய்திடாத தவறுகளுக்காய்
தந்த சன்மானங்கள் சதாவும் எதிரொலித்து
வதைத்துக்கொண்டே தான்!

எனை சூழவுள்ளவர்களின்
சுவாசக்காற்றினை ஊள்ளீர்க்கிறேன்!
நரமாமிச வாடை
எனை நடுநடுங்கச் செய்கிறது!

என் கண்கள் எனைப் பார்த்து
ரகசியம் சொல்கிறது..
மனிதனின் மனம் சமாதியாகி
வெகு காலம் என்று!

அப்போது என் இதயம் மட்டும்
பரிதாபமாக எனை நோக்கி தலை திருப்புகிறது
ஓ..
அதற்குத்தான் என்னால்
எத்தனை ஏமாற்றங்கள்!!!

புதைகுழி நோக்கி புறப்படுகிறேன் !

ஷ்.. ஷ்... சற்று தாமதப்படுங்கள்
எனை மணவரைக்கு அழைத்துச் செல்ல
உத்தேசமா?
கொஞ்சமே கொஞ்சம் என்
மன அறையை உற்று நோக்குங்கள்!

கடந்து போன என் காதலின்
கால் தடங்கள் புரிகிறதா?
உதிரம் போல என்
உடலெங்கும் ஊடுறுவி விட்ட
உணர்வுகள் தெரிகிறதா?

அவன் ஸ்வாசத்தால்
வாசம் தடவி வைத்திருக்கிறேன்
அதை விஷம் என்றா நச்சரிக்கிறீர்கள்?

என் கழுத்தோடு கை கோர்த்து சிரிக்கிறானே
இந்த மாலை கட்டாயம் தேவை தானா?
கரங்களை பற்றி இழுக்கும் போது..
வளையல்களுக்கு இங்கென்ன வேலை?

கூரைச்சீலை!
அவன் நினைவுகளை முழுசாய்
போர்த்தியிருக்கும் போது
இது அவசியமில்லை அகற்றுங்கள்!

உதடு கன்னம் கண் என அழுகையால்
சிவந்திருக்க..
உதட்டுச் சாயம் மட்டும் எதற்கு?

ம்;.. இப்போது அழைத்துச் செல்லுங்கள்
அந்த ம(ர)ண அறைக்கு!!!

இதயமும் பழஞ்செருப்பும்!

வாழ்க்கை மீதான ஆவல்
கொஞ்சம் கொஞ்சமாக
வலுவிழந்து போகிறது!

யாரையும் பிடிக்கவில்லை
ஏமாந்தே மாய்ந்து போகும்
என்னையும் எனக்குப்
பிடிக்கவேயில்லை!

சேற்றில் முளைத்த செந்தாமரைக்கு
உள்ள மதிப்பு
சாலையோரப் பூக்களுக்கு இல்லை தானே?

வெறுமையாய்
இருக்கும் போது கூட
இப்படி இதயத்தில் வெம்மை
பரவியதில்லை!

அனுபவங்கள் ஆயிரம்!
என்றாலும்..
திருந்தாத என் இதயத்தை தான்
தேய்ந்த பழஞ் செருப்பால்
நாலு சாத்து சாத்த வேண்டும்!!!

பற்றி எரிகிறதே நம் பலஸ்தீனம்!

ஏய் ராட்சசிப் பெண்ணே..!
நான் மட்டுமா?

நீயென்று நான் அணைத்துத்
துயிலும் தலையணை கூட என்
கண்ணீரை அதிகம் பருகியதால்
கண்ணதாஸனாகிப் போனது!

என்னை விட்டு பிரிந்து செல்லத்
தெரிகிறது தானே?
ஏன் கொஞ்சமாவது
புரிந்து கொள்ள முடிவதில்லை
உன்னை ஏந்தியுள்ள என் இதயம்
படும் பாட்டை?

சிந்திக்காமல் நீயும் நானும்
சந்தித்து முத்தித்துக் கொண்ட
நிலவுப் பொழுதுகளின்
நினைவுப் பொழுதுகளை..
இப்போதேனும் மீட்டிப்பார்
பற்றி எரிகிறதே
நம் பலஸ்தீனம் போல!!!

வருகையும் பொய்மையும் !

படை வீரர்களுக்கு மத்தியிலும்
ஊடறுவித் தேடுகிறேன்
என்னவனை!

நாட்டுப் பற்றெல்லாம்
ஒன்றுமில்லை..
எனை பிரிந்த சோகத்தை
தற்காலிகமாக
இடை நிறுத்தவே
இந்த மௌன யுத்தம் என்பதை
நன்கறிந்தவள் நான்!

காதலினை
கண்ணியமாகத்தான்
சமர்ப்பித்தான்!
அன்பினை
முழுமையாகத்தான்
ஒப்புவித்தான்!

அன்று..
வரம்பு என்ற வட்டத்துக்குள்
கட்டுப்பட்டிருந்த
பட்டம் நான்!

வெடி பட்டான் என்றறிந்து
இடி ஒன்றை
சந்தித்தது உள்ளம்!

அன்பின் ஆழத்தை
பிரிவின் நீளத்தில்
உணர்த்திவிட்டுப் போன பின்
~வேண்டாம் வந்து
என்னை உனதாக்கிக் கொள்|
என பல விண்ணப்பங்களும்
போட்டாயிற்று!

எனினும்..
சமாதான ஒப்பந்தம் போலவே
பொய்யாகிப் போயிற்று
என்னவனின் வருகையும்!!!

ஒருத்தியின் இதயத் தீ !

தனிமை தான்
இனிமை என்றிருந்தேன்!
இது எவ்வளவு கொடுமை
என்று இன்றுணர்ந்தேன்!

வாழ்க்கை மீதான நம்பிக்கையில்
நம்பி கை வைத்தவை யாவும்
எனக்கெதிராக சதி
செய்தவாறு!

உலகத்தின் சௌந்தர்யங்களை
கண்கள் தரிசிக்கு முன்பே
ஒதுங்கிட்டாள் பெற்றவள்!
குடித்துக் குடித்தே
விழி பிதுங்கி
நாசமாய் போனார் மற்றவர்!

மணல் வீடு கட்டி
நண்டு பிடிக்க நினைத்த
போதெல்லாம்
கை கட்டி வாய் பொத்தி
உரிமையிழந்த
வேலைக்காரியாய் இருந்திருக்கிறேன்!

புத்தகம் சுமந்து
ஓடியாட எண்ணிய போதும்
முதலாளியின் சின்னவனுடன்
மல்லுக்கட்டவே
நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறேன்!

அன்பென்ற புறா
எனை தீண்டிச் செல்வதற்காக
என்னையே குப்பையாய்
மாற்றி இருந்திருக்கிறேன்!

காற்றெனக்கு
தொட்டில் கட்டி
இயற்கையிடம் பாலருந்தி
நான் உருவாகிட்ட கதை முன்னே
நஞ்செல்லாம் பஞ்சாகத்தான்!!!

மலையக மாதின் மனக்குமுறல்!

தூபங்களிட்டாற் போல
சாபங்கள் நீங்குறதேயில்ல!
வேர்வை வர ஒழைச்சும்
வேதனமோ பசியாற்றல்ல!
கோர்வையா வெலயேத்தம்
கோமானுக்கு இரக்கமில்ல!

மலையகத்தில் கம்பீரமாக
வேதனை யெனும் மால!
நிரந்தரமா என் அகத்தில்
துயரத்தின் ரேக!

தேயில சுமை முதுகில்
வாழ்க்க சுமை மனசில்;;;!
புருஷன் சம்பளத்தோட
சாராயக் கடையில்!

ஆயிரம் ப்ரார்த்தனை
என் உள்ளத்தில் விரியுது!
நீண்ட நாளாய் அடுப்புக்கு பதில்
வயிறும் எரியுது!

நாட்டின் நன்மை கருதி
தேகம் அழியுது
தேயில காட்டில்!
முன்னேற்றம் துளியுமின்றி
காலம் கழியிது
அதன் பாட்டில்!

மலநாடு சாதனை புரியுது
சரித்திரத்தில் மட்டும்!
துரத்தும் தரித்திரம்
எப்போ ஒழியுமோ
எங்கள விட்டும்???

மௌனமாய் ஓர் விண்ணப்பம் !

ஆழ் மனசில்
வளர்த்திருக்கிறேன்
சொல்ல முடியாத ஆசைகளை!
அதனால் நீ
புரிந்து கொள்
என் மௌன பாஷைகளை!

கடந்த நாட்கள்
கவலை கொண்டேன்
ஏன் தான் பிறந்தேன் என்று!
பிறவிப் பயனை
உணர்ந்து கொண்டேன்
உனை சந்தித்த அன்று!

தொலைவானம் பார்த்து நான்
வாழ வெறுப்பை சுமந்து
நின்றேன்!
தொலைபேசியில் நீ கிடைத்தாய்
வாழ விருப்பு
என்றுணர்ந்தேன்!

எல்லோரிலும் நான் கண்டது
எனை எரிக்கும் தீ!
வாழ விருப்பும் அன்பும் சேர்த்து
எனக்களித்தது நீ!

உன் வதனத்தில் மலர்ச்சியாம்
பலர் சொல்ல கேட்டேன் நான்!
நாளெல்லாம் இது தொடர
படைத்தவனை கேட்பேன் நான்!

பார்வையால் என்றென்றும்
இதயத்தைத் துளைக்கிறாய்!
எப்போது எனை உனக்குள்
ஒளித்துக் கொள்ள இருக்கிறாய்?

எனை நோக்கி நீ இருப்பது
புகைபடத்தில் மட்டுமா?
என்றென்றும் நீ வேண்டும்
என் ஆவல் கிட்டுமா?

எல்லாமே உளறி விட்டேன்
வெட்கத்தை விட்டு!
என்னவனே போகாதே
உன்னுடைய என்னை விட்டு!!!

அக்கறை(ர)!

ஏடாகூடமாய் ஏதாவது
சொல்கையில் எல்லாம்
போடா பொறுக்கி என
சிணுங்குவாயே!

வாடாத பூவாய்
எண்ணியிருந்தேன்..
நீயோ
சோடாவாய் மாறி
சீறியதும் ஏன்?

காதலியாய் உனை
எண்ணியே
பேதலித்துப் போனது என்
மரமண்டை!
எத்தனை முறை
அரங்கேறியிருக்கும்
எனக்கும் உயிருக்குமான
மௌன சண்டை?

இறைவன் நடத்திய
விளையாட்டில்..
நீ தான் குடிவந்தாய்
என் மன வீட்டில்!

சித்த பெய்த மழையும்
சங்கமிக்கிறதே
பூமியுடன்!
மொத்த காதலை காட்டியும்
இணைய விருப்பமில்லையா
இந்த பாவியுடன்!

உன்னில் எனக்கிருக்கிறது
மிகையான அக்கறை!
உனை அடைவேன் நிச்சியமாய்
நீ சென்றாலும் உலகின்
அக்கரை!!!

Friday, June 25, 2010

விஷம் கக்கும் விட்டில்கள் !

காந்தல் மலரின் வாசம் எண்ணி - உன்
கூந்தலை அளைந்து விளையாடிய
போதெல்லாம்
பின்னாட்களில்
அது தேளாய் கோட்டும் என்று
நினைக்கவில்லையடி!

உதட்டோர உன் சிரிப்பின்
உள்ளரங்கத்தில்
ஊர்ந்து திரிந்ததெல்லாம்
விட்டில் போல் உரு காட்டி
விஷம் கக்கும் நட்டுவக்காலிகள்
என அறிந்திராத அப்பாவி நான்!

நின் கைத் தொடுகையின
வெப்பத்தில் கூட
எனை எரித்துப் போடுகிற
கணற்கட்டைகள் இருப்பதாய்
கற்பனையும் வந்ததில்லையே எனக்கு?

என் கைகளில்
புத்தக ஏடுகளில்
மேசையில் எல்லாம்
பொறிக்கப்பட்ட உன் நாமங்கள்!

எனை கிழித்துக் கூறு போடப் போகும்
சாபமிகு ஆயுதமாய்
மாறுவதைக் கூட அறியாதளவுக்கு
என்ன இயலாமை வேண்டிக் கிடந்ததோ
எனக்கு???

கரையான் பக்கங்கள் !

மழை கருக்கொள்ளும்
படிமங்களில் எல்லாம்
எரிந்து போன என் சுவாசத்தின்
சாம்பல் எல்லாம்
உருப்பெறுகிறது!

எரிமலையில் பூத்துப் போன
மலர்களுக்கு
வேர்களின் வேதனை புரிவதேயில்லை!

குருதி வழியும் கொடூரங்களின்றி
இருக்கும் ஆகாயம் நோக்குகிறேன்
ஓ...
ஒரு காலத்தில்
பூமியின் காதலனாமே அது?

சாக்கடையில் பூத்ததென்றும்
பூக்கடையில் வேர்த்ததென்றும் பாராமல்
புணர்ச்சி செய்து விட்டுப் போகிற தென்றலை
மிதித்து நசுக்க
யாருக்கிங்கே துணிவிருக்கிறது?

உண்மை தனை உரைத்து விட
செய்யப்படும் கட்டுமானங்கள்
எல்லாம்
செப்டெம்பர் பதினொன்றாய்
இடிந்து போகிறது!

கனன்றெரியும் செந்தீயில்
குளித்தெழுந்தாலும்
தங்கத்துக்கு மட்டும் ஏனோ
தீக்காயங்கள் அறவேயில்லை!

தேசம் விட்டு பறந்து திரியும்
பறவையின்
வலியுள்ள சிறகுகள் பற்றி
யாருக்குத் தெரியும்?

வெறும் பார்வை ஒன்றினால் தடவி
ஒத்தடம் பெற்ற ரணங்கள்..
சொற் கோர்வையினால்
மீண்டும் மீண்டும்
குதறப்பட்டுக் கொண்டே!

ஒவ்வொரு தடவையும்
மிக சுவாரஷ்யமாக
ஆரம்பிக்கப்படும்
என் வாழ்க்கை நாவலின்
இறுதி அத்தியாயங்கள் மட்டும்
எப்போதும் கரையான்
தின்றதாகத்தான்!!!

பிணமும் மணக்கும் அதன் மனமும் !

ஓவியமாய் என்னில்
நீ
இருப்பதனால்;
காவியம் படைக்க
நினைத்ததும்
சரியே!

பிறரிடம்
காட்டுகிறாய்
மனித நேயத்தை!
ஏனோ
எனக்கு மட்டும் தருகிறாய்
வார்த்தைகளால்
காயத்தை!

எளிமையை விரும்புபவளாய்
நீ இருக்கிறாய்..
தனியாய் நான்
தவிப்பது கண்டு சிரிக்கிறாய்!

அருகிலிருக்கும்
என் இதயத்தை
மிதித்துக் கொண்டு
தூர இருக்கும்
மனிதர்களை நீ
மதிப்பது பற்றி
பெருமைப்படுகிறாய்!

அரக்கனாய்
நான் இருந்த போதும்..
உன் மீது கொண்ட இரக்கம்
குறையாது ஒரு போதும்!

உன்
கண்ணீர்..
அது வெந்நீராய்
எனை சுட்டது பற்றி
உனக்குக் கூட
தெரியாது தான்!

இரட்டை வேஷம்
போட்டது
உனை படுகுழியில்
தள்ளிடவல்ல!
வேஷத்தில்
மறைந்துள்ள
உன் மீதான பாசத்தை
நீ
புரிந்திடு மெல்ல!!!

ரகஸிய ஸ்நேகிதிக்கு !

வறண்டு கிடந்ததே
என் இதயப் பாலைவனம்!
வந்தாய் நீ தேவதையாய்
இப்போ அது ரோஜாவனம்!

கண்கள் தரிசித்தன
உன் மென் பாதங்களை!
திருவாய் நீ மலர்ந்தால்
ஏற்பேன் அதை வேதங்களாய்!

சத்தியமாய் உனை காதலிக்க
நினைக்கவில்லை முதலில்!
எப்படி பச்சை குத்த முடிந்ததோ
உன் பெயரை என் இதழில்?

உன் அணைப்பின் சுகத்தில்
அணைந்து போயிற்று
அனைத்து வித கவலை!
பிணைப்பால்
இதயப்பிணி தீர்த்து
ஏற்றுக்கொள் இவளை!

நாம் தனித்திருந்த அறைகள் போல
வாசம் தருகிறது
இதயவறைகளும் தான்!
உன்னுடனான நாட்களில்
இதய வால்வுகள் கூட
ஆனந்த அவஸ்தையில் ஏன்?

குருதியில் கூட
உறுதி எனும் விரலால் தானே
வருடினாய்!
வருத்தி எனை திருத்தி
எப்படி என் உள்ளத்தை
திருடினாய்?

பாச விதை நட்டிருந்தேன்..
நேச விருட்சகம்
எட்டி விட்டாய்!
துகள்களான இதயத்தை
அன்புப் பசையால்
ஒட்டி விட்டாய்!

இலக்குகளற்ற வாழ்க்கையை - விடி
விளக்காக மாற்றினாய்!
கலகம் இருந்த மனசுக்குள் - முழு
உலக இன்பமும் ஊற்றினாய்!

திசை மாறி தவித்த போது- விழி
விசை கொண்டு ஈர்த்தெடுத்தாய்!
மோதல் இருந்த உள்ளத்தில்
காதல் வில்லால் போர் தொடுத்தாய்!

காரிகை உன் கண் அசைவில்
கவியெழுதவும் கற்கின்றேன்!
தூரிகையாய் உனை ஏற்க
ஓவியமாய் நிற்கின்றேன்!!!

ப்ரியவாணி பிரிய வா நீ !

என் கண்களுக்கு
ஓய்வென்பதே கிடையாதா?
சதாவும் கண்ணீர் பிரவாகம்
ஊற்றெடுத்தபடியே இருக்கிறதே!

தயவு செய்து மரியாதை போர்வையில்
காதலிகளாடும் வேஷம்..
அந்த மரண அவஸ்தை..
எனக்கும் வேண்டாம்!

கல்யாண பத்திரிகை எனும் பேரில்
கத்தியை சொருகாதே
நீ திருப்பித்தந்த இதயத்துக்குள்!

வேறொருவனின் ஒருத்தியாக
மாறிவிட உன்னால் முடியும் என
தெரிந்துவிட்ட பின்னால்
உன் மீதான என் தேடல்களில்
அர்த்தங்கள் ஏதுமில்லை!

நான் பிரிய நினைக்கவில்லை
நீ துணிந்து விட்டாயே?

ப்ரியமாயிருந்தவளே!
ஊடல்கள் எம்முள் உற்பத்தியாகு முன்
ப்ரியமாய் பிரிய
விடை கொடு முதலில்!!!

இன்னும் உன் குரல் கேட்கிறது !

நீ...
நான்...
நம் காதல் மீது
நாம் கொண்ட தீவிரம்!

எல்லாமே
இருட்டடிப்பு செய்யப்படப்போவதாய்
நீ சொன்ன போது
அமிலத்தை
நெஞ்சில் கொட்டியதாய்
உணர முடிந்தது என்னால்!

கண் பார்த்து
கை கோர்த்து
கவிக் குழந்தைகளை தாலாட்டினோமே..
எல்லாம் மறந்து போயாச்சா?
இல்லை அத்தனையும் பொய் ஆச்சா?

உள்மனசில் நீ
உறைந்து கிடந்த போதெல்லாம்
இளகிப்பிரிவாய் என்று
சத்தியமாய் நினைக்கவும்
முடிந்ததா என்னால்?

பிரிவுகள் நிரந்தரமில்லை தான்!
எனினும்
உறவுகளில் உதாசீனம் ஏற்படும்
என்பது உண்மை தானே?

~நீ தான் என் எல்லாமே|
என அடிக்கடி நீ சொன்னது
இன்னும் ஞாபகமிருக்கு!

~தேவதையே..!| உனதந்த குரலின்னும்
காதுக்குள் ஈரமாய் கேட்டுக்கிட்டிருக்கு!

உன் இதயத்துடிப்பையும்
ரத்த ஓட்டத்தையும்
ஆராய்ச்சி செய்து பாரேன்!
என்னை மட்டும் தானே
அவை எல்லாம்
சுமந்துக்கிட்டிருக்கு?

அப்படியிருக்க..
உனக்கெப்படி முடிந்தது
எனை உதறிவிட்டு
மணப் பெண்ணாய் மாற???

மழையில் நனையும் மனசு!

மழைநீரின் ஈரமான அரவணைப்பில்
சோகம் தீர்த்துக் கொள்கிற
வரட்டுப் பாசியினங்களைக் காண்கிறேன்!

நான்
போலிச் சிரிப்புகளை கையாள்வதெல்லாம்
உள்ளத்தில் புதையுண்டு போன
வலிச் சுவடுகளை
முடியுமட்டும் மறைக்கத்தான்!

கொடிக் கம்பங்களில் எல்லாம்
கேட்பாரற்று தழைகீழாக தொங்கும்
ஆடைகள் போன்றே..
எதிர்மறை எனும் சிந்தனைக் காற்றில்
என் இதயமும் பல திசைகளுக்கு
முகம் திருப்பியவாறு!

வெளுத்தும் வெளுக்காமலிருக்கும்
வானத்திலிருந்து
ஒரே இடைவெளியில்..
வெயிலும் தூறலும் புறப்படுவது போன்று
சோகங்களையும் சுகங்களையும்
மறைக்கத் தெரியாத மனசெனக்கு!!!

Thursday, June 24, 2010

வலிகள் தந்த வழிகள்!

தூரலாய் வந்து என் மனசில்
சங்கமமான மழைத்துளிக்கு
என் இதயம் வெடித்து
சிதறப் போவது பற்றி சிலநேரம்
தெரிந்திருக்கலாம்!

ஒளிக்கீற்றளவு சந்தோஷங்களை
உள்வாங்க நான் எண்ணியது
இறைவனின்
இயற்கை வண்ண கலையில் தான்!

தன் மடியிலே
அலைகளை
ஆராதித்துக் கொண்டிருக்கிறது
கடல்!

தூய அன்புடன்
அலையைத்தழுவ முற்படும் போதெல்லாம்..
ஏமாற்றி விட்டு கரையைத்தானே
அணைக்க விளைகிறது இந்த அலை?

வெண்முகில் கூட்டங்கள் ஒன்று கூடி
கருமையை உருவாக்குவது போல்
சின்னச்சின்ன கவலைகள்
தம் வலைகளுக்குள்
என்னையும் வலுக்கட்டாயமாக
உள்ளீர்க்கிறது!!!

நெஞ்சில் உறங்கும் நெருஞ்சிகள் !

இரத்தம் கொட்டிக்கொண்டிருந்த
என் காயங்கள்
சிறிது ஆறினாலும்
ரணப்பட்ட தழும்புகளை
அடிக்கடி தடவிப் பார்க்கிறது
விதியின் கைகள்!

அப்போதெல்லாம்
உலகத்தின் இருட்டுகள்
யாவையும் ஒரே உருண்டையாக்கி
நெஞ்சுக்கூட்டில்
உருட்டி விட்டதாய் உணர்கிறேன்!

பல் இடுக்குகளில் சிக்கிக்கொண்ட
சோற்றுப் பருக்கைகள் போல
உள்ளுக்குள்
இறந்த காலத்தின் நினைவுகள்!

தூசு படிந்த என் மனக் குமுறல்களை
அடிக்கடி கூற
எனக்கு இஷ்டங்கள்
அறவுமில்லை தான்!!!

சாத்தானிய வசனம் !

ஏனென்று புரியவில்லை
என்ன செய்தேன் என்றும்
நினைவில் இல்லை!

நாம் அறியாமலேயே
நம்மை பிரித்து விட்டிருக்கிறது
ஓர்; கண்ணாடிச்சுவர்!

இங்கிருந்து நானும்
அங்கிருந்து நீயுமாய் காணலாம்
தொடுகைகள் ஏதுமின்றி!

சதாவும் என் காதுகளில்
எதிரொலிக்கும்
உன் மதுரக்குரலோசை
இப்போதெல்லாம்
பேரிடியாய் மாறியதேன்?

~நான் உனக்கு மட்டும் தான்|
என்ற உன் சத்திய வசனம்..
சாத்தானிய வசனமாய்ப் போயிற்றே?

நிராயுத பாணியாய் மாறிவிட்ட
என் இதயத்தை விட்டு வைக்காமல்
முற்றுகையிட்டுக் கொண்டது சோகம்!

துப்பாக்கி வார்த்தைகள்
மனசை ரகளையாக்கியதால்
கரிய புகையாய் படிந்து கொண்டது துன்பம்!

மௌனமான முகாரிக்குள்
என் கண்கள்
தனக்கான தாலாட்டை
பாடிக்கொள்கிறது!

கடந்து விட்டன கணநாட்கள்
கண்ணுறக்கம் மறந்து!
படர்ந்து இருக்கும் முட்கள் தான்
நீ எனக்கு தந்த விருந்து!

தூக்கம் கொடூரமாகி
என் இரவுகள் முத்தமிடுவதெல்லாம்
உள்ளத்தால் அழுகிற
என் ஊமைக்காயங்களைத் தான்!!!

அஹிம்சைப் போர்!

நான்..
உன் இளமைப் பூக்களில்
சுகமாய் தேனருந்தப் போகும் வண்டு!
அதற்காக என்னிடமிருந்து
தாலி பெறப் போவது என்று?

கரு விழி அசைவில்
கனிந்தது என் மனசு!
ஒரு துளி நொடியில்
தவித்தது என் வயசு!

கார்மேகம் உன் குழலோ
கவலைகள் போக்குதடி!
கன்னத்தின் குழியழகில்
பாலை செழிப்பாகுதடி!

முன்னழகும் பின்னழகும்
இதயத் துடிப்பைக் கூட்டுதடி!
சம்பிரதாய சடங்கெல்லாம்
சங்கடத்தை மூட்டுதடி!

காதல் செடியை தொடராக
நெஞ்சில் மலர வைக்கிறாய்!
உனை பற்றியே துயிலிலும்
சுகமாய் உளர வைக்கிறாய்!

நித்தியமான உன் நினைவுகளுடன்
உறங்க வைக்கிறாய்!
உயிர் தின்னும் பார்வைகளால்
கிறங்க வைக்கிறாய்!

கூடு கட்டி குடியேற ஆசை
உன் ஒற்றை ஜடையில்!
சரிதானா சொல்லி விடு
சம்மதத்தை விடையில்!

உன் முத்தங்களால் தினமும்
மதிமயங்கிப் போகின்றேன்...
இன்னும் மேலே கேட்பதற்கு
தயங்கி நான் சாகின்றேன்!

கோபம் வேண்டாம்
கண்மணியே
காதலன் நான் கேட்கின்றேன்!
திருவாய் நீ மலர்ந்து சொல்
எதுவென்றாலும் ஏற்கின்றேன்!!!

எனை ஆளும் என் தேவதைக்கு!

யுகங்களாய் வருத்தும்
ஒவ்வொரு நிமிடமும்
உன் அன்பினைத் தவிர
ஞாபகங்கள் ஏதுமில்லை!

வேலைத்தளத்தில் போராட்டங்கள்
ஆயிரம் தான்..
ஆயினும் என் இதயத்தின்
அடித்தளத்தில் நீயமர்ந்து
எனை உற்சாகப்படுத்துகிறாய்!

உனைக் காண
கூடு உடைப்பட்ட கிளியாய்
அந்திமாலை ஓடி வருகிறேன்!
காலைகளில் மட்டும்
சிறகுடைந்த குருவியாய் வாடி விடுகிறேன்!

எனை ஏற்றவளே..
எனக்கு ஏற்றவளே!
பருவத் தவிப்பில்
பரிதவித்த எனக்கு
பக்குவமாய் விளக்கினாய்
பலி சொல்லும்
உலகம் பற்றி!

தடுமாற்றம் கண்ட என் இதயத்துக்கு
தடம் மாறாத படி
அறிவுரை தந்தாய்!

என் வாழ்க்கைப் பயணத்தை
விபத்தில் வீழ்த்தாமல்
வழி நடத்தக் கூடிய சாரதி
நீ தானம்மா!

என்னில் காட்டும் உன் ப்ரியத்திற்கு
ஆயுள் முழுக்க நான் உனக்கு மட்டுமே
சொந்தமடி சகியே!!!

கருகிப் போன மனசாட்சி!

எதிர்பார்ப்புகள் எல்லாம்
ஏமாற்றத்தில் நிறைவுறும் போது
எதிலும் நாட்டமில்லாமல்
வேலை நிறுத்தம் செய்கிறது இதயம்!

அன்பு வார்த்தைகளுக்கும்
ஆசை முத்தங்களுக்கும்
உற்சாகம் கொண்டு தானே
ஓடி வந்தேன்..
உன்னை தேடி வந்தேன்!

நாடுகளுக்கிடையிலான
சில பேச்சு வார்த்தை
ஒப்பந்தங்கள் போன்றே
என் கனவுகளும்
தவிடு பொடியாகி விட்டன!

பிறரை சந்தோசப்படுத்த
நீ நினைக்கலாம்..
ஆனால் உன் மீது சந்தேகம்
துளிர்க்கிறதே?

சுடுகாடொன்றில்
வெந்து தகிக்கும்
பிரேதங்கள் போன்றே
சில நேரம்..
கருகித் தான் போகிறது
என் மனசாட்சியும்!!!

காதலைத் தூதனுப்பி....!

என் உள்ளத்துக்குள்
பேனை விட்டு..
என் உயிரில் தொட்டு..
வார்த்தையள்ளி
மனசெழுதும் மடல் இது!

ரோசாப்பூவாய்
வாசம் கசிந்து
நெஞ்சக் கூட்டை ஆர்ப்பரித்த
நாட்களவை!

உனை பலரும்
விரும்பிய போதும்
ஏனோ நீ எனைக் கேட்டு
என்னிடமே
வார்த்தையாடினாய்!

சற்றும் குளிரெடுக்காத
நேரங்களிலும் குளிருவதாய்
பொய்யுரைத்து
என் மார்புச் சூட்டில்
சுகம் காண
ரொம்பவும் பிடிக்கும் உனக்கு!

என் நரம்புகளினூடே
உன் காதலை தூதனுப்பி
உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து
மொத்தமாய் என் உறக்கம்
தின்றதும் நீ!

சூரியன்
கொட்டாவி விட்டெழுந்து
நட்சத்திரங்கள்
அழுது மறையும் முன்பே
~மிஸ்கோல்| அடித்து
என்னை எழுப்பியதும் நீ தான்!

மொட்டவிழ்ந்த உன் மௌனம்
வெகு காலம் செல்லு முன்பே
பூப் பூக்கத் தொடங்கியதேன்?

கனவுகளில் தினமும்
உன்னோடு கூடிய பாராளுமன்றம்
அறிவிப்புகளேதுமின்றி திடீரென
கலைக்கப்பட்டுப் போனது!

உன் அருகாமை
தந்த இங்கிதத்தில்
வெறுமை முளைத்து
பட்ட மரமாய்
மாறிக் கொண்டது!

நிலவெழுந்து
முகம் கழுவும் முன்பே
தீயினை சாட்சி வைத்து...
என் இதயத்தை போலவே
அம்மியையும் மிதித்து...
வேறொருவனுடன்
சென்றுவிட்ட பின்..
உனக்கான இந்த மடல்
அவசியமற்றதாய் உணர்கிறேன்!!!

இதயத்தின் முகவரிக்குள்!

உன்
அன்பெனும் ஆலையிலே
நித்தமும் சாறு பிழியப் படும்
கரும்பல்லவா நான்!

அப்படியே காதலுடன் என்னை
ருசி பார்த்து மகிழும்
எறும்பல்லவா நீ!

உனக்காக
போருக்கு செல்வதென்றாலும் கூட
வலித்திருக்காது எனக்கு!

உனை விட்டு
ஊருக்குச் செல்வதில் தான்
என்னுடனேயே எனக்கு பிணக்கு!

எப்படியிருப்பேன்?
என் கண்ணீர் துடைக்க
உன் கைகள் அங்கில்லை!

எனக்கு முத்தத்துடன்
தலை தடவ யார் இருக்கிறார்?
வலி கண்டாலும் பொருட்படுத்த
நீயிருக்கமாட்டாயே?

சாப்பிடாத தருணங்களில்
அன்பு இழையோடும்
உன் கடுமையை
யாரிடம் எதிர்பார்ப்பேன்?

நிமிடந் தோறும் உன்
திருமுகம்
இதயக் கண்ணாடியில்
வந்தாடுமே!
அப்போது
தனிமை என்னை பிடித்து
பந்தாடுமே?

என்னை தின்னும் உயிர் வலியே
நீ தான் என் முகவரியே!!!

மனங்கவர் மணவாளன்!

கலங்காதே காரிகையே!
காதலுடன் உனை காப்பாற்ற
காளை ஒருவன்
வராமலா இருக்கப் போகிறான்?

யாருக்கு யார் என்று
வல்லவன் என்றோ
எழுதி விட்டானே அன்று?

கவலைப்படாதே
தூய காதலின் நிமித்தம்
நீ தூக்கி எறிந்தவை பற்றி!

கண்ணகியே..!
உன் உள்ளம் கவர
வருவான் ஒரு அற்புதமானவன்!

உன்னிடம்
காதல் பாடம் பயில
வரப் போகும் அவன்
உன் ஆசை மாணவன்!

உத்தமி நீ
;~உண்மையாய்| இருப்பதால்
உலகமே வியக்குமளவு
உனை காத்திட வருவான்
ஒருவன்!

ஆம்..
மிகமிக சீக்கிரம் வந்து
உன்னை தனதாக்கிக் கொள்வான்
உன் தலைவன்!!!

விதவைக் காதலி!

காதலனே..!
என் இதயப் புத்தகத்தில்
உன் நினைவுகள்
பொன்னாய் பதிந்துள்ளன!

அவை ஒவ்வொன்றிலும்
நம் காதல் உள்ளங்கள்
அப்படியே பதிந்துள்ளன!

பெண்களின் வாசத்தைக் கூட
அண்டாத நீ..
என் கண்களின் சேஷ்டையில்
கட்டுண்டது மெய் தானே?

கண் கலங்குகையில் எல்லாம்
ஆறுதல் சொல்லி அணைத்தாயே..
அத் தருணங்களில் எல்லாம்
நீயும் எனக்கு தாயே!

உன் உள்ளத்தில் நானிருப்பதை
அறிந்த பின்னால்..
இந்த உலகையே வென்ற
மகிழ்ச்சி எனக்குள்!

நான் கொண்டேன் சோகம் - இது
யார் தந்த சாபம்?

சூட நினைத்தேனே
உன்னுடன் பூமாலை!
உயிர் கொன்றுப் போனதே
காலனாய் வந்து ~காமாலை|!

உன்னால் நான்
பெறவில்லையே தாலி!
இன்று நானும்
உன் ஞாபகங்களை
தின்று வாழும்
விதவைக் காதலி!!!

மழை ப்ரியம்!

என் ப்ரியத்தை மழையாக்கி
உனை அதில் நனையவிட்டேன்!
நீயோ போலிகளை தினம் காட்டி
தீ கொண்டு எரித்துப் போட்டாய்!

பாசாங்கு செய்வேரை
ஆங்காங்கே கண்டிருக்கிறேன்!
பாசத்தை அலட்சியமாய்
பயன்படுத்தியவள் நீ தானே?

உனை விட அழகிகளை
ஊரிலேயே கண்டிருக்கிறேன்!
உண்மையாய் மனசுக்குள்
உலவவிட்டது உனை மட்டுமே!

நகம் கூட உனை தவிர
பிற பெண்ணில் பட்டதில்லை!
உன்னையன்றிய எவளையும்
மனசாலும் தொட்டதில்லை!

என் மனதின் இளமானே
முதற் காதலும் நீ தானே!
ஆதலால் நீ வெறுத்தாலும்
உன் நினைவுகளை மறவேனே!!!

காற்றில் வந்த கல்யாண கீதம்!

தண்ணீரை நீ கேட்டால்
வடிகட்டி தந்திருப்பேன்..
கண்ணீரை கேட்ட போது
எப்படி நான் துடித்துப் போனேன்?

உன் அன்பைத் தேடினேன்..
நீ எங்கேயோ ஓடினாய்!
உனை நான் நாடினேன்..
கல்யாண கீதம் பாடினாய்!

இதயத்தின் ரணங்களுக்கு
நம்பியிருந்தேன்
உனை மருந்தாய்!
கொஞ்சமாவது புரியாமல்
எனை எப்படி மறந்தாய்?

அன்பென்று நடித்தவர்கள்
பாதியிலே மாறினார்கள்!
வாள்முனை வார்த்தைகளால்
இதயத்தை கீறினார்கள்!

தாலி நீ ஏற்று விட்டாய்
தாயாகவும் மாறி விட்டாய்!
தாடியுடன் அலையும் நான் - இனி
தாரம் தேடப் போவதில்லை!!!

ஒரு வீணை அழுகிறது!

பவ்வியமாய் நடந்து வந்து
பால்நிலா நீ
ஆசிர்வாதம் கேட்டாய்..
சுயநலம் என அறிந்திருக்கவில்லை
சுமங்கலியாய் வாழ் என்றேன்!

இன்று
வேதங்கள் நிஜமிழந்து
மந்திரங்களும்
பொய்யாகிப்போனது!

கண்மணியே!
என் மூச்சடங்கும் நேரம்
நெருங்கிக் கொண்டிருப்பதை
அறிய மாட்டாய் நீ!

ஒரு நிலவினை போல
மெது மெதுவாய் தேய்கிறேன்..
மீண்டும் உதிக்கவே
முடியாத படிக்கு!

காதலில் வாழ்ந்தவளே!
என் அஸ்தமனத்துக்குப் பின்
எப்படி சீர்படுத்திக் கொள்வாயோ
உன் வாழ்வை?

படுக்கையில் நான் விழுந்தால்
பாவி என்னை மன்னித்து விடு!
புதுமைப் பெண் நீ என்று
பூமிக்கே காட்டி விடு!

ஒரு வேளை
நான் மீளா துயிலில்
ஆழ்ந்து விட்டால்..
காவலனை தேடிக் கொள்
கட்டாயம்!

நரம்பில்;லா வீணை நான்
நடுவீதியில் எறியப்படுவதில்
தப்பேதுமில்லையே?

வெள்ளாடை தரித்து நீ
வெறுமனே இருந்திடாதே!
வாழும் வரை வசந்தமாய்
வாழுவதை மறந்திடாதே!

பலி சொல்லும் உலகுக்கு
பயந்து நீ சாகாதே!
செவியிரண்டை மூடிக் கொள்
ஊர் பேச்செண்ணி வேகாதே!

என் துணைவிக்கு ஒன்றென்றால்
என் ஆவி சாந்தம் அடையாது!
ரோஜாவாய் பவனி வர
உனக்கிருக்கும் தடை ஏது???

கருவிழி நாகம்!

சில நேரம்
நான் புன்னகைக்கிறேன்
சில நேரம் சிரிக்கிறேன்
ஆனால் என் ஆன்மாவோ
எனக்குள்ளேயே உருகி அழுகிறது!

ஆண்டவனிடம்
வினாக்களை அடுக்குகிறேன்
வீணாய் கழிந்த
என் கணங்களை எண்ணி!
ஆன்மா
நரகம் நோக்கி விழுகிறது!
நான்
பறந்திட முயல்கையில் எல்லாம்
என் சிறகுகள்
கத்தரிக்கப்படுகின்றன!

மிகக் கொடுமையானது
இவ்வுலகம்!
மனித இனமும்
பொல்லாதது!

விறகை
என் நெஞ்சில் அடுக்கி
மண்ணெண்ணை ஊற்றப்படுகிறது!

கதிர் வீச்சுப் பேச்சுக்களில்
கசிந்துருகி
உள்ளமோ கதறி அழுகிறது!

என் ஆன்மா
ஓலமிட்டு அழுவதை
யாராலும் செவியேற்க முடியாது!
ரத்தக் கறை படிந்திருக்கும்
என் தனிப் பாதையில்
யாராலும் நடந்து வரமுடியாது!

அழகாய தெரிந்தவர்கள்
அகோரமாய் சிரிக்கிறார்கள்!
ஆறுதலாய் தலை தடவியவர்கள்
ஆளை கொல்ல முனைகிறார்கள்!

கருவிழியால்
காதல் தூவிய கண்களில்
கறுத்த நாகமும் புடையான்களும்!

பிசாசுகளின் குகை வீட்டில்
என்னை
அறைந்து வைத்திருக்கும்
சிலுவை
உடைத்தெறியப்படும்
நாள் எங்கே?

சாத்தான்கள் கட்டிய
உரிமை மீறல் எனும் நூல்
எப்போது அறுபடும்?

மனிதம் தின்னும்
காட்டேறிகளுக்கிடையில்
அகப்பட்ட முயல்குட்டி நான்!!!

தரை நிலவு!

பேரூந்தில் நீ ஏறுகையில்
ஏக்கமாய் பார்த்தாயே?
அது தந்த தாக்கம்
முழு நாளுமே தொடர்ந்தது!

என் இதயத்தில்
சுகமாய் துயில் கொள்பவளே!
இன்று மட்டும் எனை பார்க்க
தோன்றியதும் ஏனோ?

ஒவ்வொரு நாளும்
நீ
ஏறி மறையும் வரை
நான் காத்திருப்பதை
காதோரம் வந்து
ரகசியம் சொல்லிற்றா
காற்று?

சில சமயங்களில் மட்டும்
என் உணர்வுகளை
மிதித்து நீ நடப்பதன்
தாற்பரியம் தான் என்னவோ?

விலை மதிக்க முடியாத
உன் பாசமதை
வேண்டி நிற்கும் காரணத்துக்காக
கொலைப்பட்டாலும்
உனை நான் பிரிய மாட்டேன்!

உன் நேசத்தை முழுசாய் தந்திட
நீ மறுத்துப் போனாலும்
அன்பினைத் தேடி வேறெங்கும்
திரிய மாட்டேன்!

உன்னுடைய
காதல் கேட்டு
தினமும்
உயிர் தேய்கிற நானும்
தரை மீது வந்துதித்த
உனக்கான ஒரு நிலவு தான்!!!

புன்னகை கத்தி!

பேனாவை
பற்றும் போதெல்லாம்
;அது
உனை பற்றி எழுத மட்டுமே
அடம் பிடித்தழுது
தலை குனியும்!

எனை வதைத்து
அன்பால் கொன்ற நீயா
இன்று
ஏமாற்றி விட்டு தூரச் சென்றது?

பேரதிர்ச்சியடைகிறேன்
உன் மாற்றங்களால்!

நானில்லாத வாழ்வு
நலமில்லை என்றவளே..!
இப்போதென்ன
பிணமாகவா வாழ்கிறாய்?

உனை காதலித்ததற்கு பதிலாக
சுகமாய் கொஞ்சம்
விஷம் குடித்திருக்கலாம்!

பூக்களாய் நீ
புன்னகையை
பரிமாறிய போதெல்லாம்
ஆனந்தப்பட்டு
சிரித்தேனே நானும்?

அந்த பூங்கொத்துக்கிடையில்
வஞ்சகமெனும்
கத்தி இருப்பது பற்றி தெரியாமல்???

விதி விழுங்கிய இன்பம்!

நிலவெரியும் ஓர் இரவில்
விதியென்ற பாம்பு
முழுமையாய் விழுங்கிற்று
என் வாழ்நாள் இன்பத்தை!

கூரான கத்திரி முனைகளுக்குள்
அகப்பட்டது போல்
என் சந்தோஷ காகிதமும்
சதாவும்
நறுக்கி அரியப்பட்ட படியே!

அன்புக்கும்
பொய்மைக்குமிடையில்
அகப்பட்டு விட்ட
பாவம் செய்த ஜீவன் நான்!

பெரும் கோபம் வருகிறது
எனை பந்தாடிப் பார்க்கிற
அந்த ஆண்டவனிடம்!

நேசம் என்ற முகமூடி அணிந்து
நெருப்பு வார்த்தை கக்கும்
எத்தனை கயவர்களை
கண்டவள் நான்?

ஒரு நாளும்
அன்பு கிடையாது என்றும்
கவலைகள் உடையாது என்றும்
தலை கீழாய் எழுதப்பட்டிருக்குமோ
என் தலையெழுத்து?

என் மனசாட்சி
உயிர் விட்டதன் காரணம்
என் மேல் நானே கொள்கிற
கழிவிரக்கம் தாளாமல் தான்!!!

வரலாற்று குற்றவாளி!

ஊசி முனையாய் கசிகிறது
உயிர்துளி!
ஜீவிதம் கசத்ததால்
தன்னை தானே
தண்டித்துக் கொள்கின்றன
என் ஒவ்வொரு அணுவும்!

தப்பெதுவும் உனக்கானதல்ல
ஏனெனில்..
உனை காதலித்த முதல் தப்பு
என்னுடையதன்றோ?

என்னிடமிருந்து
விவாகரத்தாகின்றன
எனக்குள்
பொங்கிப் பிரவாகித்த
உன் ஞாபகங்கள்!

ஆசையாய்
உனை அணைத்துத் தழுவிய
நினைவுத் தழும்புகள்
இன்று
அக்கினியாய் மாறி வதைக்கின்றன!

காதல் அத்தியாயத்தை
ஆரம்பித்து வைத்த
வரலாற்று குற்றவாளி
நான்!

அதனால் தானா
இதய ஏட்டை கிழித்துப் போட
நினைக்கிறாய் நீ?

வார்த்தை இடிகளின்
வலி தெரியாதிருக்க
நானொன்றும்
இரும்பு இதயக் காரியல்ல!

உன் நெஞ்சச் சிறையில்
ஆயுட் கைதியாய்
வசிக்க முயன்ற எனை
காதல் வரலாறு
மன்னித்து விடட்டும்!!!

பொதி சுமக்கும் நினைவுகள்!

உன் காரசாரமான
வார்த்தைகளை
அசை போட்டபடியே
பலமிழந்து விட்டிருக்கும்
இதயத்துக்கு
என்ன மருந்து தந்து
உற்சாகப் படுத்துவாய்?

ஊடலை
யார் மேற்கொண்டாலும்
தேடிப் போக வேண்டியது
எழுதப் படாத
எனக்கான சட்டம்!

சொல் பேச்சை கேட்குமாறு
ஷெல் வீச்சை வீசுவது
அவமானப்படுமென்னால் - நீ
வெகுமானம் காண்பதற்கா?

மறவாதே!
கூந்தல் கட்டி நீ ஆடிய இடமோ
என் இதயமென்ற
;ஊஞ்சல்!

சதி செய்து எனை மறந்தாலும்
பொதி சுமப்பேன் உன் நினைவுகளை
என் நெஞ்சில்!!!

நீ குளிக்க என் விழி நீர்!

உன் பார்வை பட்டவுடன்
குருதியோட்டம் அதிகமாகிறது!
நீ வந்து போவதால்
பூந்தோட்டம் சுவனமாகிறது!

உனை காண்கையில் எல்லாம்
அன்புப் பறவை
உயிர்த்து எழுகிறது!
கவலை துன்பம் அதனாலே
உதிர்ந்து விழுகிறது!

கண் ஜாடையால் உன் காதல்
குறிப்பு தருகிறது!
அப்போது
என் இதழில் மெதுவாய்
சிரிப்பு வருகிறது!

அனுதினமும்
என் இதயம்
உன்னை காப்பாற்றுகிறது!
நீ குளிக்க
என் விழிகள் நீரூற்றுகிறது!

உன் மௌனத்தால்
காதல் வினாடிகள் வீணாகிறது!
ஆனாலும்
உன் நெருக்கம் எனக்கு தேனாகிறது!

என் கனவுகள் கூட
உன் மீது மட்டுமே படிகிறது!
அந்த நினைவுகளுடனேயே
என் வானமும் விடிகிறது!!!

நான் வசிக்கும் உன் இதயம்!

உன் நேசத்தால் எனக்கு
ஆறுதல் வேண்டும்!
அதனால் இதயத்துக்குள்
சந்தோஷ மாறுதல் வேண்டும்!

ஒரு தருணமேனும் உணவெனக்கு
ஊட்ட வேண்டும்!
அன்புடன் பல செல்லப் பெயர்
சூட்ட வேண்டும்!

கனிவுடன் பாசமதை
தர வேண்டும்!
அஃது ஆழ் மனசிலிருந்து
வஞ்சகமின்றி வர வேண்டும்!

காதல் எனும் தேசத்தில்
தனியே ஆள வேண்டும்!
மாறாமல் இது என்றென்றும்
நீள வேண்டும்!

மடி சாய்ந்து கொஞ்ச நேரம்
அழ வேண்டும்!
உன் பாதம் தொட்டு
சில கணம் நான் தொழ வேண்டும்!

உனை அணைத்துக் கொண்டிருக்க
அந்தி மாலை வேண்டும்!
அதற்கு..
உன்னவளாய் எனக்கொரு
வேலை வேண்டும்!!!

எனக்கு பிடித்த உன் நேசம் !

காதலுக்கு தடையாயிருக்கும்
கடிகாரம் மீது
கடும் கோபம் எனக்கு!

இரவெல்லாம் கதை பேசி
அதிகாலையிலும் தழுவுவாயே..
அந்த சுகத்தில் தேநீர் கூட
தேவையிராது!

பசி மறந்து
அலுவலாய்
;இருக்கும் போதெல்லாம்
ஊட்டி விடும் உன் நேசம்
ரொம்பவும் பிடிக்கும் எனக்கு!

குளித்து முடிந்ததும்
தலை துவட்டும் உன்; முந்தானை..
அது என் உயிரின் கவசம்!

துணிகளும் துவைத்து
எனக்கென சமைத்து..
என் வருகைக்காய் காத்திருப்பாயே..
அந்த எதிர்பார்ப்பில்
கவலையையும் இன்பத்தையும்
அனுபவித்திருக்கிறேன்
ஒன்றாகவே!

என் கண்ணீரையும் துடைத்துப் N;பாடும்
உன் கைகளுக்கு..
முத்தத்தால் வளையல் செய்து போட
ஆசை!

ஆறாத என் இதய ரணங்களையும்
ஒரே புன்னகையில் தடவும் போது..
தழும்புகளின் தடயங்களும்
மறைந்து போகும் தெரியுமா?;

உடலாலும்
மனசாலும்
நான் சந்தோஷிப்பதற்காக
நீ செய்யும் சதா ப்ரார்த்தனையால் தான்
இன்னமும் நான்
உயிர் வாழ்கிறேனோ என்னவோ???

அண்ணாவுக்கொரு வேண்டுகோள்!

நிலாப்பெண்ணே என்று கூறி
என் உள்ளத்தில்
இனிய கவிஞனாய்
உலா வந்த ஸ்ரீதர் அண்ணாவே!

தரம் எட்டில் கற்ற போது
கலாவானம் பார்த்து சந்தோ~முற்றேன்...
வரம் தந்தாட் போல் ஓர் நாள்
நீயே தொலைபேசினாய்!

கரம் தானும் தொட்டுப் பேசாத
உன் ஒழுக்கம் கண்டு
சிரம் மேற்கொண்டு உன்னை
போற்றுகிறேன் அண்ணா!

வாழ்வில் உனை
கொட்டிய கொடுக்குகளை
வெறும் சொடுக்குகளாய் எண்ணாமல்
வடுக்களாய் பார்த்து
துக்கித்தது ஏனோ?

உன்
சறுக்களைக் கண்டு
சிரிக்கவும் ஒரு கூட்டம்
இருந்தனையோ?
அதையெல்லாம் உன் உறவுகள் கூறி
அறிந்தேன் ஐயோ?

பல்கலைத் தென்றலே!
புயலாய் நீ சோகம் தந்தது போதும்...
எழுந்து வா அண்ணா
இலக்கிய உலகுக்கு
கட்டாயம் நீ வேண்டும்!!!