என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Saturday, October 23, 2010

கண்ணீரும் உதிரமாய்!

உன் முகம் நிதம் எண்ணி
என் கண்கள் அழுகிறது...
கண்ணீரும் உதிரமாயிங்கு
உஷ்னமாய் விழுகிறது!

கேலிக்குரியவளாகிறேன்
உன்னுடனிருக்க ஆசைப்பட்டு...
ஒன்றாயிருக்க விரும்புகிறேன்
உன்னுடனேயே வாழ்க்கைப்பட்டு!

ஒன்றில்லை பல(லி) சொல்லும்
உலகுக்கா தெரியாது?
சொல்லட்டும் பிழையில்லை
என் மனசும் சரியாது!

பூமியின் துன்பம் தீர்க்க
மழைத்துளியின் தூறுதலா?
என் நெஞ்சின் சோகம் போக்க
கண்ணீர் தான் ஆறுதலா???