என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Saturday, October 9, 2010

பூஜ்யமாய் நான் !

நானில்லாத
உன் நாழிகைகள்
உனக்கு
சந்தோஷம் தரலாம்..
நீயில்லாத
என் நிமிடங்கள்
எனக்கு துன்பம் தரும்!

என் சுவாசக் காற்றின்
கலப்படமில்லாத
உன் மூச்சுக்காற்று
இனிமையாயிருக்கலாம்..
உன் அருகாமையற்ற
என் காலங்கள்
தேள் கொட்டும்!

வேறொருத்தியின் காவலனாய்
உனை எண்ணும் சக்தியின்றி
கழிந்து கொண்டிருக்கிறது
என் நிசப்த பொழுதுகள்!

அரங்கேறிக்கொண்டிருக்கம்
மௌன போராட்டத்துடன்
விடிந்தும் இருளாயிருக்கிறது
என் ஏகாந்த இரவுகள்!

தூக்கம் கலைந்த
என் விழிகளுக்கூடாக
உன் விம்பம் பார்த்தே
நிர்க்கதியாய் நிற்கிறேன்
வெறும் பூஜ்யமாய் நான்!!!