என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Saturday, October 9, 2010

உடன் பாடுகள் !

நான்
உன்னுடையவளாகப்போகும்
நாளை எண்ணியே
இதயம் பலமிழந்து விட்டது!

வருடங்கள் காத்திருக்க
தெரிந்த எனக்கு
நாழிகைகளை சமாளிப்பது தான்
காயங்கள் தோறும்
உப்பால் கழுவுவது போலிருக்கிறது!

அரிதாக முதலில்
நான் கண்ட
கற்பனைகள் யாவும்
பெரிதாக தன்னுலகுக்குள்
அழைத்துச் செல்கிறது!

சொல்வாக்கு தவறாத
உன் குணம் கண்டதாலோ என்னவோ
செல்வாக்கை குறைவின்றி
பெற்று விட்டாய் என்னிடத்தில்!

கற்கண்டை சாப்பிட்டாற் போல - காதல்
சொற்கொண்டு நீ பேசுகையில்
ஆனந்த அருவியின் அலை வந்து
மோதுகிறது என் உள்ளத்தில்!

முரண்பாடுகளின்
தடயங்கள் அழிந்து போன
அன்பொன்றில்
கட்டுப்பட்டிடத்தான்
என் உயிருக்குள்
உடன்பாடுகள் அதிகமாக!!!