என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Saturday, October 9, 2010

திருந்திய உள்ளம் !

என் இறைவனே!
உன்னை
எண்ணாத போதிருந்த
காயங்களின் வலி
உன் ஞாபகங்களால்
துதித்து வழிபடுகையில்
காணாமற் போகிறது!

சோகங்களாலும்
சோர்வுகளாலும்
நோவப்பட்ட என் உள்ளம்
நிறைவான அமல்களால்
நிம்மதியாய் இருக்கிறது!

மானிடர்க்குரிய
வேதனைகளும்
துன்பங்களும்
இப்போதெல்லாம்
எனை துரது;துவதில்லை!

ஷைத்தானின்
பிடியில் சிக்கி
என் ஆன்மா
சீரழிவதுமில்லை!

சேதப்பட்டு திருந்திய
என்
இதயத் தோட்டத்தில்
இனி ஒருபோதும்
தீய எண்ணங்களை
வளர விடுவதுமில்லை!!!

விளக்கம் :- அமல்கள் - நற்காரியங்கள்