மின்னல் இடி யாவும்
ஒன்று கூடி
வெட்டி முழங்கிய
அந்த இரவில்....
தனியாய் நான்
உறங்குகின்ற
யாருமற்ற நிலையில்...
என் இதயம்
வேகமாய் துடித்து ஓய
பிரயத்தனம் எடுக்கிறது!
நீ பிரிந்து போன கணத்திலிருந்து
தீ என்னை
சுற்றிக்கொண்டது...
வீணாகிய என் காதலை எண்ணி
அனைத்தும் என்னை
வெட்டித்தின்றது!
உன்மீதான என் காதலை
நீ
புரிந்திடாதபடி செல்ல...
துக்கம் தொடை அடைத்து
நாடி நரம் பு புடைத்து
நான் பட்டபாட்டை
எங்கனம் சொல்ல?
சந்திரனும் ஓய்வெடுக்க ஓர்
அமாவாசை வரும்....
என் வாழ்வு மட்டும்
மாறாமலே இருப்பது
நான் வாங்கி வந்த வரம்!!!
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா