என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, July 13, 2010

எனது ஊரும் தலை நகரும்

அங்கு...
நான் ஓடித்திரிந்த மேட்டுநிலம்
குளிர் பூசும் காலநிலை
பசுமைமிகு பச்சை மரம்
அண்ணார்ந்து பார்க்க குன்றுகள்!

மொட்டைமாடியமர்ந்து
கிறுக்கிய கவிதை...
மரத்தடி நிழலின் ஈரலிப்பு
பலாப்பழத்தின் வாசனை...
என் சமையலை ருசித்தவாறே
குறை கூறிய உறவுகள்..
அன்பின் உம்மா வாப்பா
சுட்டித்தம்பி
செல்லத்தங்கை!!!

இங்கு...
சுட்டெரிக்கும் சூரியன்
பச்சையம் மறந்த பொட்டல் வெளி
ஜீவிதம் கசக்கும் விடியல்கள்
வாகனங்களின் தொடர் இரைச்சல்
மூடியே கிடக்கும் ஜன்னல்கள்..
கொலையுண்டாலும் புரியாத அடுக்குமாடி...
நெருப்பு விலையாய் சாமான்கள்..
சுனாமி தந்த கடல் அல்லது கரை
செயற்கை சிரிப்புமற்ற மனித உயிர்கள்!!!