என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, July 6, 2010

எனதான மடமை!

வியாபாரத்தை மட்டுமே
விதியாக்கிக்கொண்ட பின்
உன்னை மாற்ற நினைத்தது
என் மடமை தான்!

கண்ணான கணவன் என்று
காலடியில் கிடந்து நின்று
அன்பை உன்னிடம்
மன்றாடிக்கேட்டதும் மடமை தான்!

கட்டிய மனைவியை
கணக்கிலும் எடுக்காமல்
கடைக்கணக்கில் மூழ்கியே
பணத்தின் பின் அலையும் உனை
உறவென்று சொன்னதும் மடமை தான்!

பிள்ளைகளைப் பாராமல்
பிறவியுடனும் சேராமல்
பிடிவாதம் காக்கும் உனை
என்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ
அழைத்ததும்
எனதே எனதான மடமை தான்!!!