என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, June 29, 2010

நீ எனக்கானவள்!

என் இதயமெனும் அட்சய
பாத்திரத்தில் உன் எண்ணங்களே
சுரந்த வண்ணம் முடிவிலியாக!

ப+ விழியே..!
ஒரு வழியில் நாம் ஒருமித்திடத் தானே
தவமிருந்ததாய் நீ சொன்ன ஞாபகம்?

இப்போதென்ன
மனசு மருகிப் போயிற்றா
மனசாட்சி கருகிப் போயிற்றா?

கண்ணுறக்கம் தொலைத்து
கனநாளாகி விட்டது!
விரும்பியுண்ணும் ஐஸ்கிறீம் கூட
வெந்நீராய் சுட்டது!

சகியே..!
உன் மன்னன் மாய்ந்திட முன்
ஒரே ஒரு தடவை
உன்பாதம் கொண்டு
என் உள்ளத்தில் ஓர் தடம் வை!
நீ எனக்கானவள் தான் என்று!!!