என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, June 29, 2010

பிழை பொறுக்க வருவாயா?

மண்ணுள்ளே
புதையுண்டுப் போன
உத்தமியே!

மனசாட்சிக்கு கட்டுப்பட்டு
மனிதனாய் வாழத்தன் ஆசையிருந்தது எனக்கும்!

காலம் செய்திட்ட கலவரத்தில்
இன்று கயவன் பட்டத்துடன்
நான் - இது
இன்றைய என் நிலவரம்!

விதியின் பூட்சுக்கால்களால்
தினமும் நசுக்கப்பட்டு பழகியதால்
இன்று உள்ளம் கிடக்கிறது
குற்றுயிராய்!

சில அரக்கர்களின்
வரட்சிப் பசிக்கு - என்
இதயச்சாறல்லவா
பிழியப்பட்டது?
எல்லாம் முடிந்த பின்
கல்லாயிருந்த அது
தகர்க்கப்பட்டது!

நீ அறியாய்...
அறியாமலேயே போய் விட்டாய்!

நான்
சூழ்நிலைக் கைதியாகி விட்டேன்..
என் வாழ்வும்
இருள் மயமாகி விட்டது!

உன்னை தேடி
ஓடி வருகிறேன்...
பிழை பொறுத்து
என் உயிராய்
இருக்க வருவாயா?