என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, June 29, 2010

இதயமும் பழஞ்செருப்பும்!

வாழ்க்கை மீதான ஆவல்
கொஞ்சம் கொஞ்சமாக
வலுவிழந்து போகிறது!

யாரையும் பிடிக்கவில்லை
ஏமாந்தே மாய்ந்து போகும்
என்னையும் எனக்குப்
பிடிக்கவேயில்லை!

சேற்றில் முளைத்த செந்தாமரைக்கு
உள்ள மதிப்பு
சாலையோரப் பூக்களுக்கு இல்லை தானே?

வெறுமையாய்
இருக்கும் போது கூட
இப்படி இதயத்தில் வெம்மை
பரவியதில்லை!

அனுபவங்கள் ஆயிரம்!
என்றாலும்..
திருந்தாத என் இதயத்தை தான்
தேய்ந்த பழஞ் செருப்பால்
நாலு சாத்து சாத்த வேண்டும்!!!