என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, June 24, 2010

பொதி சுமக்கும் நினைவுகள்!

உன் காரசாரமான
வார்த்தைகளை
அசை போட்டபடியே
பலமிழந்து விட்டிருக்கும்
இதயத்துக்கு
என்ன மருந்து தந்து
உற்சாகப் படுத்துவாய்?

ஊடலை
யார் மேற்கொண்டாலும்
தேடிப் போக வேண்டியது
எழுதப் படாத
எனக்கான சட்டம்!

சொல் பேச்சை கேட்குமாறு
ஷெல் வீச்சை வீசுவது
அவமானப்படுமென்னால் - நீ
வெகுமானம் காண்பதற்கா?

மறவாதே!
கூந்தல் கட்டி நீ ஆடிய இடமோ
என் இதயமென்ற
;ஊஞ்சல்!

சதி செய்து எனை மறந்தாலும்
பொதி சுமப்பேன் உன் நினைவுகளை
என் நெஞ்சில்!!!