கவிதைகளை கண்ணீரால் கழுவுவது
வனிதையர் பெற்று வந்த வரமா?
களைஞர்கள் காரணங்களை
கதறி எழுதியும்
இளைஞர்கள் இளகாதது
வெறுமனே பணமா?
எங்கு பார்த்தாலும்
பொதுவான அந்த சிக்கல்...
பெற்றோருக்கும்
அதை எண்ணியே
சதாவும் விக்கல்...
சீ தனத்தை
வேண்டியலையும் இவர்கள்
ஒருமாத வேதனத்தை தானும்
காணாதவர்கள்!
பணக்கார நிரோசாவை
'நீ ரோசா' என்று விட்டு
ஏழைக்குமரி தேவயாணியை
'தேவையா' நீ என்கிறார்களே...
வாழத்துடிக்கும் இந்த
அபலைகளின் அபிலாஷைகள்
அந்தக்கழுகுகளுக்கு
புரியப்போவது எப்போது?