என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, December 17, 2010

நீ வாழ்வது மேல்!

கற்றவரை இவ்வுலகம்
போற்றும்- இது
கல்விப்பெருமையை
பறைசாற்றும்..
வையகத்து வாழ்வாங்கு வாழ்வோரை
வாழவைக்கும் வழிநிலையை
நித்தியமாய் காட்டும்...
அதை அறிந்து தான் வாழ்த்துது
இளம் காற்றும்!

நேர்மையாய் உன்வாழ்வை
வாழு - பிறர் கவலையை
காது கொடுத்து கேளு..
திக்கற்று வாழ்வோரை
தீமைகள் சூழ்கையிலே
அயராது அவருக்காய் மாளு..
தரணியிலே நீ வாழ்வது மேலு!

கவலையின்றி வாழ்பவன் தான்
யாரு - சிலரின் கண்ணிரண்டும்
குருடு நீ பாரு...
நம்பிக்கை இழக்காமல்
நாணயம் தவறாமல்
இலட்சியத்தை நோக்கி
நீ ஏறு..
அதை விட இன்பம் என்ன வேறு?

நடுவீதியில் பெண்ணை
மறியாதே - அவளுன் மனைவியாகலாம்
அது தெரியாதே..
தீயஎண்ணங்கள் பலகொண்டு
தவறுகள் பல செய்து
வாழ்க்கையில் நீயும் சரியாதே - பின்
பைத்தியமாய் வீதியில் திரியாதே!

அரிதாரம் பூசாமல்
பழகு - தீயவர் உன்னருகே
வந்தாலே விலகு..
சமூகத்தில் பலபேரு
ஏமாற்றக்காத்திருப்பர்
இது தானே இன்றைய உலகு...
இதையறிந்தாலே உன் வாழ்வு அழகு!!!