என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, December 2, 2010

இன்பமின்றி வேறு இனி ஏது!



கொத்துமலர் பூப்பறிக்க
உன் இதழில் தேன் தெறிக்க
அத்தை மகள் நீ வந்து நின்றாய்..
அடியே - இத்தனை நாள் பத்திரமாய்
பொத்தி வைத்த என் மனசை
பார்வையாலே முழுவதுமாய் தின்றாய்!

அருவிக்கு போகையிலே
ஆத்தங்கரை ஓரத்திலே
குடத்துடனே நீயுந்தான் இருந்தாய்..
குயிலே - குடத்தைப் போல என் உள்ளம்
தளும்பித் தளும்பித்துடிக்கையிலே
குருவியாக நீ பறந்து சென்றாய்!

மான் விழியால் எனைமாற்றி
தேன் மொழியால் எனை பேசி
மயக்கிட்ட ரத்தினமே நீ தான்..
அன்று - மலர்மாலை சூடுகையில்
வெக்கப்பட்டு சிணுங்கிச் சிரித்து
பற்றிக்கொள்ளச்செய்தாய் என்னில் தீ தான்!

அன்பகலா ப்ரியமுடன்
சோதி நிலா நீயிருக்க
மரணத்தின் பயமிருக்காது..
நாங்கள் - மாதெமெல்லாம் மகிழ்வுடனே
பேதமின்றி வாழ்வதாலே
இன்பமின்றி வேறு இனி ஏது???