என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, November 12, 2010

இரவிடம் மீள்கிறேன்!

இடம்பெயரவியலா
சமநிலை மாற்றத்தால்
சாமான்ய உணர்வுகளிலும்
சீற்றத்தணல் தெறித்தபடி!

ஒவ்வொரு நாட்களிலும்
நிம்மதியான இடம் தேடி
கால் வலிக்க என்
உயிரும் நடந்தபடி!

மழைக்கு முகவரி கேட்கும்
மனசாட்சி எரிந்தவர்களின்
கிரகத்தில் வாழ்கிறேன்!

பாலின வேறுபாடுகளறியா
பாவிகளின் போக்கு எண்ணி
சொல்லமுடியா சோகத்துடன்
இரவிடம் மீள்கிறேன்!

அரிதாரமற்ற மௌனங்களோடு
பெரிதாக நானும்
காட்டி விடாது
துன்பமாய் என் நிலை
உரைக்கிறேன்!

கேளுங்கள்...
எனை மீட்சிக்கும் வழிகளற்று
நீட்சிக்கும் துயரங்களை
சாட்சிகளின் தடயமின்றி
எல்லோரிடமும் மறைக்கிறேன்!!!