Wednesday, November 23, 2016
Wednesday, November 9, 2016
வாசல் வந்த நதி
நதியே
நீ என் வாசல் தேடி வந்திருந்த போது
நான் புறப்பட்டுப் போயிருந்தேன்
திரும்பி வந்துப் பார்க்கையில்
நீ வந்து போன தடங்கள் மாத்திரமே
மிஞ்சிக் கிடந்தன..
வண்டுகளுடன் போராடும்
பூக்களின் வேதனை
யாருக்கும் தெரிவதில்லையாதலால்
பூக்களுக்கு ஆறுதல் சொல்லப்
போயிருந்தேன்..
அப்போது பார்த்து
நீ வந்துச் சென்றிருந்தாய்
எனது அருகாமையில் வசித்துவிட
நீ எண்ணியிருந்ததாய்
அன்றிரவு நிலவெனக்குச் சொன்னது!
நட்சத்திரங்கள்
அழுது வடித்தன..
அடுத்தநாள் சூரியன் கூட
கோபப்பட்டு சுட்டெரித்தது!
நதியே
என்னிடம் உன் காதலை
இல்லை இல்லை
உன்னிடம் என் காதலைச்
சொல்லுமுன்பே நீ
வற்றி விட்டாயா?
உனக்குத் தெரியுமா
நான் உன்னை
எவ்வளவு காதலித்தேன் என்று?
நீ உன் பாட்டுக்கு
(ஓ)பாடிக் கொண்டிருந்த போதெல்லாம்
அதை இசையாய்
வீணை மீட்டியிருக்கின்றேன்...
தென்றலெனும் என் தோழிகளுக்கு
உன்னைக் காட்டிக் காட்டி
சந்தோசப்பட்டிருக்கின்றேன்..
எதிர்பாராத சமயம்
உன் மேனி தொட்டு நான் போகும்போது
நாணப்பட்டு முகம் சிவந்திருக்கிறேன்..
உன் தோளில் சாய்ந்துகொள்ள வரும்
அழகிய மீன் குஞ்சுகளுக்கெல்லாம்
பொய் சொல்லி அனுப்பிவிட்டு
உன்னை மட்டும் ரசித்திருக்கிறேன்..
என்னைப் பார்த்து கண் சிமிட்டும்
மின்மினிப் பூச்சிகளை எல்லாம்
கண்டித்து அனுப்பியிருக்கிறேன்..
மன்னிக்க மாட்டாயா?
இலைகள் கொண்டு
தூதுவிடுகின்றேன்
என்னை ஏற்றுக்கொள்..
என் அன்பில்; நனைந்து
நீ சிலிர்த்துக்கொள்..
வா
வந்தென் காதல் ஏற்றுக்கொள்..
இப்படிக்கு
உன் காற்று!!!
நீ என் வாசல் தேடி வந்திருந்த போது
நான் புறப்பட்டுப் போயிருந்தேன்
திரும்பி வந்துப் பார்க்கையில்
நீ வந்து போன தடங்கள் மாத்திரமே
மிஞ்சிக் கிடந்தன..
வண்டுகளுடன் போராடும்
பூக்களின் வேதனை
யாருக்கும் தெரிவதில்லையாதலால்
பூக்களுக்கு ஆறுதல் சொல்லப்
போயிருந்தேன்..
அப்போது பார்த்து
நீ வந்துச் சென்றிருந்தாய்
எனது அருகாமையில் வசித்துவிட
நீ எண்ணியிருந்ததாய்
அன்றிரவு நிலவெனக்குச் சொன்னது!
நட்சத்திரங்கள்
அழுது வடித்தன..
அடுத்தநாள் சூரியன் கூட
கோபப்பட்டு சுட்டெரித்தது!
நதியே
என்னிடம் உன் காதலை
இல்லை இல்லை
உன்னிடம் என் காதலைச்
சொல்லுமுன்பே நீ
வற்றி விட்டாயா?
உனக்குத் தெரியுமா
நான் உன்னை
எவ்வளவு காதலித்தேன் என்று?
நீ உன் பாட்டுக்கு
(ஓ)பாடிக் கொண்டிருந்த போதெல்லாம்
அதை இசையாய்
வீணை மீட்டியிருக்கின்றேன்...
தென்றலெனும் என் தோழிகளுக்கு
உன்னைக் காட்டிக் காட்டி
சந்தோசப்பட்டிருக்கின்றேன்..
எதிர்பாராத சமயம்
உன் மேனி தொட்டு நான் போகும்போது
நாணப்பட்டு முகம் சிவந்திருக்கிறேன்..
உன் தோளில் சாய்ந்துகொள்ள வரும்
அழகிய மீன் குஞ்சுகளுக்கெல்லாம்
பொய் சொல்லி அனுப்பிவிட்டு
உன்னை மட்டும் ரசித்திருக்கிறேன்..
என்னைப் பார்த்து கண் சிமிட்டும்
மின்மினிப் பூச்சிகளை எல்லாம்
கண்டித்து அனுப்பியிருக்கிறேன்..
மன்னிக்க மாட்டாயா?
இலைகள் கொண்டு
தூதுவிடுகின்றேன்
என்னை ஏற்றுக்கொள்..
என் அன்பில்; நனைந்து
நீ சிலிர்த்துக்கொள்..
வா
வந்தென் காதல் ஏற்றுக்கொள்..
இப்படிக்கு
உன் காற்று!!!
புழுதியான புனிதங்கள்
உலகத்தின் போக்கெல்லாம் உருமாறி உருமாறி
கீழ்த்தரமாய் போகின்ற போது - மக்கள்
மிருகங்கள் போல் மாறி மனிதத்தை துறக்கின்ற
நிலை மாறும் நாள் எப்போது?
புனிதங்கள் எல்லாமே புழுதியாய் ஆகிவிடும்
நாளின்று தூரத்தில் இல்லை - இதனை
உணராமல் வழிமாறி தடம்மாறி போவோரை
அறிந்திங்கு உடைத்திடனும் பல்லை
கலிகாலம் உருவாகி கன்னியரும் கருவாகி
அழிகின்ற நிலை என்று மாறும் - இதை
சரி காணும் சட்டங்கள் சில நாட்டில் பார்க்கையிலே
உச்சந்தலை கோபம் தான் ஏறும்
வெளிநாட்டு மோகங்களும் பணத்தாசை பூதங்களும்
தலைக்கேறி தாய் போவாள் சவூதி - இனி
தான் பெற்ற மகளையே தன் மனைவி ஆக்கவிடும்
தந்தையால் மகள் வாழ்க்கை சகதி
புகழ்ச்சிக்கும் பெருமைக்கும் காசுக்கும் மட்டுமே
பேராசைப் படுகின்ற கூட்டம் - சில
நாள் கழிந்து பார்க்கையிலே தம்மிடமே எதுவுமில்லை
என்றுணர்ந்து கண்ணீரைக் காட்டும்
வஞ்சகத்தை கொண்டு நிதம் வாஞ்சையாகப் பழகுபர்
ஒருபோதும் நல்லவரே ஆகார் - தூய
நட்புக்கு விலை பேசி நரிக் குணத்தை காட்டுமவர்
நடு வீதியில் அடிபட்டே சாவார்!!!
கீழ்த்தரமாய் போகின்ற போது - மக்கள்
மிருகங்கள் போல் மாறி மனிதத்தை துறக்கின்ற
நிலை மாறும் நாள் எப்போது?
புனிதங்கள் எல்லாமே புழுதியாய் ஆகிவிடும்
நாளின்று தூரத்தில் இல்லை - இதனை
உணராமல் வழிமாறி தடம்மாறி போவோரை
அறிந்திங்கு உடைத்திடனும் பல்லை
கலிகாலம் உருவாகி கன்னியரும் கருவாகி
அழிகின்ற நிலை என்று மாறும் - இதை
சரி காணும் சட்டங்கள் சில நாட்டில் பார்க்கையிலே
உச்சந்தலை கோபம் தான் ஏறும்
வெளிநாட்டு மோகங்களும் பணத்தாசை பூதங்களும்
தலைக்கேறி தாய் போவாள் சவூதி - இனி
தான் பெற்ற மகளையே தன் மனைவி ஆக்கவிடும்
தந்தையால் மகள் வாழ்க்கை சகதி
புகழ்ச்சிக்கும் பெருமைக்கும் காசுக்கும் மட்டுமே
பேராசைப் படுகின்ற கூட்டம் - சில
நாள் கழிந்து பார்க்கையிலே தம்மிடமே எதுவுமில்லை
என்றுணர்ந்து கண்ணீரைக் காட்டும்
வஞ்சகத்தை கொண்டு நிதம் வாஞ்சையாகப் பழகுபர்
ஒருபோதும் நல்லவரே ஆகார் - தூய
நட்புக்கு விலை பேசி நரிக் குணத்தை காட்டுமவர்
நடு வீதியில் அடிபட்டே சாவார்!!!
Tuesday, November 8, 2016
ஏகாந்த இரவு
மனசெல்லாம் வழிந்தோடும் குருதியினால்
ஈரமாகிப் போனதென் ஏகாந்த இரவு
இந்த இரகசியத்தை அறிந்த சாட்சி நிலவு
துயர் வாடை வீசுகின்ற காற்றிடம் இடம்மாறி
வழிகேட்டு அலையுதென் மனசு
இது மனசு இல்ல வெறுமையான தரிசு
வண்ணங்கள் நிறம் மங்கி கருமையாய் ஆனதுபோல்
துருப்பிடித்துப் போனதென் கனவு
என் கனவிலும் இழந்தவற்றின் நினைவு
தீபங்கள் ஏற்றியதாய் கனவுகளில் சிறைகிடந்து
தீப்பிடித்துக் கொண்டதென் வாழ்வு
நான் வாழ்வதிலும் நன்றுதான் சாவு
சிறகிழந்த பறவையொன்று வலியாலே கதறுவதாய்
காதலெனும் வழி மலர்ந்த உறவு
உறவு இன்று உப்பு இல்லா உணவு
ஈரமாகிப் போனதென் ஏகாந்த இரவு
இந்த இரகசியத்தை அறிந்த சாட்சி நிலவு
துயர் வாடை வீசுகின்ற காற்றிடம் இடம்மாறி
வழிகேட்டு அலையுதென் மனசு
இது மனசு இல்ல வெறுமையான தரிசு
வண்ணங்கள் நிறம் மங்கி கருமையாய் ஆனதுபோல்
துருப்பிடித்துப் போனதென் கனவு
என் கனவிலும் இழந்தவற்றின் நினைவு
தீபங்கள் ஏற்றியதாய் கனவுகளில் சிறைகிடந்து
தீப்பிடித்துக் கொண்டதென் வாழ்வு
நான் வாழ்வதிலும் நன்றுதான் சாவு
சிறகிழந்த பறவையொன்று வலியாலே கதறுவதாய்
காதலெனும் வழி மலர்ந்த உறவு
உறவு இன்று உப்பு இல்லா உணவு
Tuesday, November 1, 2016
கடன் கொடுத்துப் பார்
கடன்_கொடுத்துப்_பார்
.............................................
கடன் கொடுத்துப் பார்
உன்னைச் சுற்றி ஏமாற்றம் தோன்றும்
துரோகம் அர்த்தப்படும்
காலத்தின் நீளம் விளங்கும்
உனக்கும் கண்ணீர் வரும்
தலையெழுத்து மாறிப்போகும்
நண்பன் எதிரியாவான்
கடனைத் திருப்பிக்கேட்டே
உன் வாய் வலிக்கும்
கண்ணிரண்டும் இருட்டிப் போகும்
கடன் கொடுத்துப் பார்
தலையணை நனைப்பாய்
மூன்று முறை கோல் பண்ணுவாய்
ஆன்ஸர் பண்ணினால்
வருஷங்கள் நிமிஷம் என்பாய்
ஆன்ஸர் பண்ணாவிட்டால்
நிமிஷங்கள் வருஷம் என்பாய்
கடன் கேட்டவனே கவனிக்க மாட்டான்
ஆனால் அவனை நீ கவனிக்க வேணுமென உணர்வாய்
மூளைக்கும் மனசுக்கும் உருவமில்லா வலி உருண்டை உருளக் காண்பாய்
இந்த பாசம்இ நேசம்இ அன்புஇ நம்பிக்கை இந்த நட்பு எல்லாம்
பணத்தை வாங்கும் வரைக்கான ஏற்பாடுகள் என்பாய்
கடன் கொடுத்துப் பார்
இருதயம் அடிக்கடி வலியால் துடிக்கும்
நிசப்த அலைவரிசையில் கடன் வாங்கியவனின் குரல் ஒலிபரப்பாகும்
உன் பணமே எமனாகி
உன்னை வாட்டும்
கடனின் திரைச் சீலையை
பணம் கிழிக்கும்
எதிர்பார்ப்புகள்
நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் காய்ந்து சகாராவாகும்
கடன் சமுத்திரமாகும்
பிறகு கண்ணீர் துளிக்குள்
சமுத்திரம் மிதக்கும்
கடன் கொடுத்துப் பார்
சுவற்றில் மோதி மோதி உடைந்து போக உன்னால் முடியுமா
நம்பியதால் துரோகத்தை அடைந்ததுண்டா
கெஞ்சுகின்ற வலி அறிந்ததுண்டா
கவலையை உனக்குள் புதைக்கத் தெரியுமா
சபையில் அழுகையை கட்டுப்படுத்தவும்
தனிமையில் சத்தமிட்டு அழவும்
உன்னால் முடியுமா
பைத்தியம் ஆக வேண்டுமா
ஐந்து அங்குல இடைவெளியில் அவனிருந்தாலும்
உன்னை காணாததுபோல் இருந்ததுண்டா
கடன் கொடுத்துப் பார்
சின்னச் சின்ன துரோகங்களை பழக வேண்டுமே அதற்காகவேனும்
கோபத்தைக் கட்டுப்படுத்தி பணிந்துபோக வேண்டுமே அதற்காகவேனும்
நம்பிக்கை என்ற சொல்லுக்கும் துரோகம் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விளங்குமே அதற்காகவேனும்
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே அதற்காகவேனும்
கடன் கொடுத்துப் பார்
சுயமரியாதை சட்டை பிடித்தாலும்
கௌரவம் உயிர் பிழிந்தாலும்
விழித்துப் பார்க்கையில் கடன்காரன் ஊரைவிட்டு சென்றிருந்தாலும்
ஒரே சந்தியில் இருவரும் சந்தித்துக்கொண்டாலும்
நீ தேடும் அவனோ உன்னைக் கண்டுக்காமல்விட்டாலும்
கடன் கொடுத்துப் பார்
கண்ணீர் விரக்தி இரண்டில் ஒன்று
இங்கே நிச்சயம்
கடன் கொடுத்துப் பார்
மூலம் - கவிப்பேரரசு வைரமுத்து
.............................................
கடன் கொடுத்துப் பார்
உன்னைச் சுற்றி ஏமாற்றம் தோன்றும்
துரோகம் அர்த்தப்படும்
காலத்தின் நீளம் விளங்கும்
உனக்கும் கண்ணீர் வரும்
தலையெழுத்து மாறிப்போகும்
நண்பன் எதிரியாவான்
கடனைத் திருப்பிக்கேட்டே
உன் வாய் வலிக்கும்
கண்ணிரண்டும் இருட்டிப் போகும்
கடன் கொடுத்துப் பார்
தலையணை நனைப்பாய்
மூன்று முறை கோல் பண்ணுவாய்
ஆன்ஸர் பண்ணினால்
வருஷங்கள் நிமிஷம் என்பாய்
ஆன்ஸர் பண்ணாவிட்டால்
நிமிஷங்கள் வருஷம் என்பாய்
கடன் கேட்டவனே கவனிக்க மாட்டான்
ஆனால் அவனை நீ கவனிக்க வேணுமென உணர்வாய்
மூளைக்கும் மனசுக்கும் உருவமில்லா வலி உருண்டை உருளக் காண்பாய்
இந்த பாசம்இ நேசம்இ அன்புஇ நம்பிக்கை இந்த நட்பு எல்லாம்
பணத்தை வாங்கும் வரைக்கான ஏற்பாடுகள் என்பாய்
கடன் கொடுத்துப் பார்
இருதயம் அடிக்கடி வலியால் துடிக்கும்
நிசப்த அலைவரிசையில் கடன் வாங்கியவனின் குரல் ஒலிபரப்பாகும்
உன் பணமே எமனாகி
உன்னை வாட்டும்
கடனின் திரைச் சீலையை
பணம் கிழிக்கும்
எதிர்பார்ப்புகள்
நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் காய்ந்து சகாராவாகும்
கடன் சமுத்திரமாகும்
பிறகு கண்ணீர் துளிக்குள்
சமுத்திரம் மிதக்கும்
கடன் கொடுத்துப் பார்
சுவற்றில் மோதி மோதி உடைந்து போக உன்னால் முடியுமா
நம்பியதால் துரோகத்தை அடைந்ததுண்டா
கெஞ்சுகின்ற வலி அறிந்ததுண்டா
கவலையை உனக்குள் புதைக்கத் தெரியுமா
சபையில் அழுகையை கட்டுப்படுத்தவும்
தனிமையில் சத்தமிட்டு அழவும்
உன்னால் முடியுமா
பைத்தியம் ஆக வேண்டுமா
ஐந்து அங்குல இடைவெளியில் அவனிருந்தாலும்
உன்னை காணாததுபோல் இருந்ததுண்டா
கடன் கொடுத்துப் பார்
சின்னச் சின்ன துரோகங்களை பழக வேண்டுமே அதற்காகவேனும்
கோபத்தைக் கட்டுப்படுத்தி பணிந்துபோக வேண்டுமே அதற்காகவேனும்
நம்பிக்கை என்ற சொல்லுக்கும் துரோகம் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விளங்குமே அதற்காகவேனும்
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே அதற்காகவேனும்
கடன் கொடுத்துப் பார்
சுயமரியாதை சட்டை பிடித்தாலும்
கௌரவம் உயிர் பிழிந்தாலும்
விழித்துப் பார்க்கையில் கடன்காரன் ஊரைவிட்டு சென்றிருந்தாலும்
ஒரே சந்தியில் இருவரும் சந்தித்துக்கொண்டாலும்
நீ தேடும் அவனோ உன்னைக் கண்டுக்காமல்விட்டாலும்
கடன் கொடுத்துப் பார்
கண்ணீர் விரக்தி இரண்டில் ஒன்று
இங்கே நிச்சயம்
கடன் கொடுத்துப் பார்
மூலம் - கவிப்பேரரசு வைரமுத்து
Wednesday, October 29, 2014
நானும் எனது கவிதைகளும்
என் இதயமெனும் சிறு கடலில்
உன் நினைவெனும் பெருங்கப்பல்
நங்கூரமிட்டபடி!
புராதனங்களில் இருந்து
கண்டெடுத்த கல்வெட்டாய்
என் காதல் இப்போது!
மிகவும் காரிருள் படிந்த
பொழுதொன்றில் தோன்றிய
சிறு நிலவுக் கீற்றைப் போல்
இன்று உன்
தொலைபேசி அழைப்புக்களின் நாதம்!
தூறலும் இருட்டுமாய் இருக்கும்
அந்தி நேர உருவமாய்
நீயும் நானும்
கடைசியாய் சந்தித்துக்கொண்ட
நிமிடங்களின் நினைவுகள்!
புல்வெளிகள் ஏந்திக்கொண்ட
சிறிய பனித்துளிகள் போல்
உன் ஓரப் பார்வையை
நெஞ்சில் சுமந்தபடி
நானும் எனது கவிதைகளும்!
உன் நினைவெனும் பெருங்கப்பல்
நங்கூரமிட்டபடி!
புராதனங்களில் இருந்து
கண்டெடுத்த கல்வெட்டாய்
என் காதல் இப்போது!
மிகவும் காரிருள் படிந்த
பொழுதொன்றில் தோன்றிய
சிறு நிலவுக் கீற்றைப் போல்
இன்று உன்
தொலைபேசி அழைப்புக்களின் நாதம்!
தூறலும் இருட்டுமாய் இருக்கும்
அந்தி நேர உருவமாய்
நீயும் நானும்
கடைசியாய் சந்தித்துக்கொண்ட
நிமிடங்களின் நினைவுகள்!
புல்வெளிகள் ஏந்திக்கொண்ட
சிறிய பனித்துளிகள் போல்
உன் ஓரப் பார்வையை
நெஞ்சில் சுமந்தபடி
நானும் எனது கவிதைகளும்!
Monday, October 27, 2014
எல்லாமாக நீ!
ஆர்ப்பாட்டமில்லாத - ஒரு
அழகிய காதலை
எனக்குள் விதைத்தவன் நீ!
காதலானது ஆறு குளம் நதி
என்று வியாபித்திருக்கும் இன்றுகளில்
ஒரு ஆழமான சமுத்திரமாக
எனக்குள் இருப்பவன் நீ!
சோகமாக சோம்பிக் கிடக்கும்
பூந்தோட்ட புஷ்பங்களுக்கெல்லாம்
தென்றலுடன் சிரித்து
தலையாட்டச்
சொல்லிக் கொடுத்தவன் நீ!
ஊடல் கொண்டிருக்கும்
நட்சத்திரங்களுக்கிடையில்
அன்பைப் புரிய வைத்து
அழகான ரோஜாவைப் பரிசளித்தவன் நீ!
நீர்வீழ்ச்சியின் சலசலப்பை
எல்லாம் மொழிபெயர்த்து
சங்கீதமாக்கிப்
பாடியவன் நீ!
கொட்டிவிடும் மழைத்துளிகளை
கையில் ஏந்திவந்து
அவற்றுடன் ரகசியமாய்
பேசிக் கொண்டிருந்தவன் நீ!
மீசை வைத்த புயலாக
என் முன்னே தோன்றி
என் இதயத்தை
வாரிச் சுருட்டி
எடுத்துச் சென்றவன் நீ!
என்னையும் என் அன்பையும்
முழுசாக புரிந்துகொண்டு
எனக்குள்ளே எல்லாமாக
என்றும் இருப்பவன் நீ!
அழகிய காதலை
எனக்குள் விதைத்தவன் நீ!
காதலானது ஆறு குளம் நதி
என்று வியாபித்திருக்கும் இன்றுகளில்
ஒரு ஆழமான சமுத்திரமாக
எனக்குள் இருப்பவன் நீ!
சோகமாக சோம்பிக் கிடக்கும்
பூந்தோட்ட புஷ்பங்களுக்கெல்லாம்
தென்றலுடன் சிரித்து
தலையாட்டச்
சொல்லிக் கொடுத்தவன் நீ!
ஊடல் கொண்டிருக்கும்
நட்சத்திரங்களுக்கிடையில்
அன்பைப் புரிய வைத்து
அழகான ரோஜாவைப் பரிசளித்தவன் நீ!
நீர்வீழ்ச்சியின் சலசலப்பை
எல்லாம் மொழிபெயர்த்து
சங்கீதமாக்கிப்
பாடியவன் நீ!
கொட்டிவிடும் மழைத்துளிகளை
கையில் ஏந்திவந்து
அவற்றுடன் ரகசியமாய்
பேசிக் கொண்டிருந்தவன் நீ!
மீசை வைத்த புயலாக
என் முன்னே தோன்றி
என் இதயத்தை
வாரிச் சுருட்டி
எடுத்துச் சென்றவன் நீ!
என்னையும் என் அன்பையும்
முழுசாக புரிந்துகொண்டு
எனக்குள்ளே எல்லாமாக
என்றும் இருப்பவன் நீ!
Tuesday, August 5, 2014
மரண வலி
உடைத்து வெளிவந்த
என் அழுகையை
அடைத்து வைத்துக் காத்திருந்தேன்..
முடிந்துவிடாத
உன் பயணத்தை எண்ணி
இடிந்து போய் அமர்ந்திருந்தேன்....
தேக்கி வைத்த
என் சோகங்கள் - நன்றாய்
தாக்கி விட்டது உள்ளத்தை!
புதைத்து வைத்த துன்பங்கள்
மேற்கிளம்பி
வதைத்து என்னை பாடுபடுத்தியது!
வேரோடு என் இதயத்தை
பிடுங்கிச் சென்றுவிட்டாய் - நீ
ஊருக்குப் போகையிலே!
மறைத்து வைத்த
பாசத்தை எல்லாம் மெதுவாய்
உரைத்துவிட்டது உன் பிரிவு!
என் ஜனனத்தின்
மறுபிறப்பாய் நீதானே இருக்கிறாய்
என் மரணத்தின்
வலியாகவும் நீயேதான் இருக்கின்றாய்!
என் அழுகையை
அடைத்து வைத்துக் காத்திருந்தேன்..
முடிந்துவிடாத
உன் பயணத்தை எண்ணி
இடிந்து போய் அமர்ந்திருந்தேன்....
தேக்கி வைத்த
என் சோகங்கள் - நன்றாய்
தாக்கி விட்டது உள்ளத்தை!
புதைத்து வைத்த துன்பங்கள்
மேற்கிளம்பி
வதைத்து என்னை பாடுபடுத்தியது!
வேரோடு என் இதயத்தை
பிடுங்கிச் சென்றுவிட்டாய் - நீ
ஊருக்குப் போகையிலே!
மறைத்து வைத்த
பாசத்தை எல்லாம் மெதுவாய்
உரைத்துவிட்டது உன் பிரிவு!
என் ஜனனத்தின்
மறுபிறப்பாய் நீதானே இருக்கிறாய்
என் மரணத்தின்
வலியாகவும் நீயேதான் இருக்கின்றாய்!
பனித்துளியா நீ?
என் ஞாபகப் புற்களில்
அமர்ந்து கொண்ட
பனித் துளியா நீ?
இதயத்தின் கீதங்களை
மொழிபெயர்த்துப் பாடிய
இளங் குயிலா நீ?
இருட்டாயிருந்த
என் வானத்தில் தோன்றிய
நிலவொளியா நீ?
உள்ளமெனும் கனியை
சுவை பார்த்த
சிறு அணிலா நீ?
மனச் சோலையில்
அழகாய் பூத்த
சிவப்பு ரோஜாவா நீ?
என் மனசை
மெதுமெதுவாய் கொத்தும்
கோழிக்குஞ்சா நீ?
எனக்குள்ளே
பதிந்துபோன
முதல் கவிதையா நீ?
மெது மெதுவாய்
என்னில் உதித்த
வளர் பிறையா நீ?
எனை களவாடிச்
சென்றுவிட்ட
வாலிபக் காற்றா நீ?
எனக்குள்ளே
ஒன்றி விட்ட
என்னவனா நீ?
அமர்ந்து கொண்ட
பனித் துளியா நீ?
இதயத்தின் கீதங்களை
மொழிபெயர்த்துப் பாடிய
இளங் குயிலா நீ?
இருட்டாயிருந்த
என் வானத்தில் தோன்றிய
நிலவொளியா நீ?
உள்ளமெனும் கனியை
சுவை பார்த்த
சிறு அணிலா நீ?
மனச் சோலையில்
அழகாய் பூத்த
சிவப்பு ரோஜாவா நீ?
என் மனசை
மெதுமெதுவாய் கொத்தும்
கோழிக்குஞ்சா நீ?
எனக்குள்ளே
பதிந்துபோன
முதல் கவிதையா நீ?
மெது மெதுவாய்
என்னில் உதித்த
வளர் பிறையா நீ?
எனை களவாடிச்
சென்றுவிட்ட
வாலிபக் காற்றா நீ?
எனக்குள்ளே
ஒன்றி விட்ட
என்னவனா நீ?
Thursday, July 17, 2014
நீ ஒரு குழந்தையாக
நெடிதுயர்ந்த
ஒரு ஆலமரம் போன்ற
உன் காதலில்
கூடு கட்டி வாழ்ந்திருக்க
விருப்பம் எனக்குள்!
அருகருகே
இருந்துகொண்டே
நம் வாழ்நாளை
கடத்திவிட
பிரார்த்தனை எமக்குள்!
காதலை மட்டுமே கொண்டு
மற்றதெல்லாம் தவிர்ந்து
ஒரு எல்லையில்லாப் பெருவெளியில்
பயணிக்கிறதெம் உறவு!
தினம்தினம் குறுஞ்செய்திகள்
நள்ளிரவு ரகசியக் குரல்கள்
கடிதங்கள்.. வாழ்த்தட்டைகள்
எதுவுமேயில்லாமல்
யதார்த்தபூர்வமாய்
நகர்கிறது நம் நேசம்!
பக்கத்தில் நீ வந்திருந்தபோதுதான்
என் பெண்மையின் நாணமும்
உன் ஆண்மையின் வீரமும்
சிநேகபூர்வமாகின!
வாழ்வதற்காக காதலே தவிர
காதலுக்காக வாழ்க்கை அல்ல
என்ற நம் சித்தாந்தத்திலிருந்து
என்றுமே நாம் விலக நினைத்ததில்லை!
நீயில்லாத நிமிடங்களில்
உன்னை
என் காதலனாய்
கணவனாய் எண்ணி
கனவுகள் வளர்க்கும் நான்..
கண் பார்வைக்குள் அடங்கி
என்னருகில் நீ இருக்கையில்
உன்னை ஒரு குழந்தையாக
பார்த்து மகிழ்கிறேன்!
காதலுக்குள் தாய்மையும் இருக்கிறது
என்பதைப் புரிய வைத்தவனே..
நீண்ட நாள் பிரிவைத் தாங்க முடியாது..
ஒரு வனாந்தரத்து இருட்டை
எனக்குள் தந்துவிடாமல்
பூக்களால் நிறைந்த
என் இதயத்தை
உனக்குள் வசமாக்கிட வா!!!
ஒரு ஆலமரம் போன்ற
உன் காதலில்
கூடு கட்டி வாழ்ந்திருக்க
விருப்பம் எனக்குள்!
அருகருகே
இருந்துகொண்டே
நம் வாழ்நாளை
கடத்திவிட
பிரார்த்தனை எமக்குள்!
காதலை மட்டுமே கொண்டு
மற்றதெல்லாம் தவிர்ந்து
ஒரு எல்லையில்லாப் பெருவெளியில்
பயணிக்கிறதெம் உறவு!
தினம்தினம் குறுஞ்செய்திகள்
நள்ளிரவு ரகசியக் குரல்கள்
கடிதங்கள்.. வாழ்த்தட்டைகள்
எதுவுமேயில்லாமல்
யதார்த்தபூர்வமாய்
நகர்கிறது நம் நேசம்!
பக்கத்தில் நீ வந்திருந்தபோதுதான்
என் பெண்மையின் நாணமும்
உன் ஆண்மையின் வீரமும்
சிநேகபூர்வமாகின!
வாழ்வதற்காக காதலே தவிர
காதலுக்காக வாழ்க்கை அல்ல
என்ற நம் சித்தாந்தத்திலிருந்து
என்றுமே நாம் விலக நினைத்ததில்லை!
நீயில்லாத நிமிடங்களில்
உன்னை
என் காதலனாய்
கணவனாய் எண்ணி
கனவுகள் வளர்க்கும் நான்..
கண் பார்வைக்குள் அடங்கி
என்னருகில் நீ இருக்கையில்
உன்னை ஒரு குழந்தையாக
பார்த்து மகிழ்கிறேன்!
காதலுக்குள் தாய்மையும் இருக்கிறது
என்பதைப் புரிய வைத்தவனே..
நீண்ட நாள் பிரிவைத் தாங்க முடியாது..
ஒரு வனாந்தரத்து இருட்டை
எனக்குள் தந்துவிடாமல்
பூக்களால் நிறைந்த
என் இதயத்தை
உனக்குள் வசமாக்கிட வா!!!
Monday, June 23, 2014
வலி..
தாங்க முடியாத சுமையொன்றை
இதயம் எதிர்கொள்வதாய்
வலி..
நாட்கள் எல்லாம்
யுகங்கள் போல் மாறிடுமோ
என்ற தவிப்பு
ஒரு சின்ன அன்பு
இத்தனைக் கண்ணீர்த் துளியை
வருவிக்கும் என்பது
ஆச்சரியம்தான்!
அருகேயற்ற நிமிடங்கள் இனி
எப்படித்தான் கழியப் போகின்றதோ
நானறியேன்..
செல்லக் குறும்புகளும்
சின்னச் சிரிப்பும்
பொய்க் கோபங்களும் பார்க்காமல்
நான் கிட்டத்தட்ட
செத்துப் போய்விட மாட்டேனா?
வெளிக்காட்டவும் தெரியாமல்
அன்புகாட்டவும் தெரியாமல்
ஒதுங்கி நிற்கவும் முடியாமல்
ஒட்டி நிற்கவும் முடியாமல்..
எனக்குள் மட்டும்தான்
இத்தனை உணர்வுகளும்
உள்வாங்கப் பட்டிருக்கின்றதா?
எதிர்திசையில் இதுபோன்ற
எந்தவித சலனங்களும்
இல்லாதிருத்தல் முடியுமா?
இதயம் எதிர்கொள்வதாய்
வலி..
நாட்கள் எல்லாம்
யுகங்கள் போல் மாறிடுமோ
என்ற தவிப்பு
ஒரு சின்ன அன்பு
இத்தனைக் கண்ணீர்த் துளியை
வருவிக்கும் என்பது
ஆச்சரியம்தான்!
அருகேயற்ற நிமிடங்கள் இனி
எப்படித்தான் கழியப் போகின்றதோ
நானறியேன்..
செல்லக் குறும்புகளும்
சின்னச் சிரிப்பும்
பொய்க் கோபங்களும் பார்க்காமல்
நான் கிட்டத்தட்ட
செத்துப் போய்விட மாட்டேனா?
வெளிக்காட்டவும் தெரியாமல்
அன்புகாட்டவும் தெரியாமல்
ஒதுங்கி நிற்கவும் முடியாமல்
ஒட்டி நிற்கவும் முடியாமல்..
எனக்குள் மட்டும்தான்
இத்தனை உணர்வுகளும்
உள்வாங்கப் பட்டிருக்கின்றதா?
எதிர்திசையில் இதுபோன்ற
எந்தவித சலனங்களும்
இல்லாதிருத்தல் முடியுமா?
மெலிதான நேசம்
உள்ளத்தில் தோன்றும்
தா(க்)கத்தை
போக்கும் வழி என்னவோ?
நெஞ்சில் தோன்றும் துன்பத்தை
தீர்க்கும் வழி என்னவோ?
தண்ணீர் இல்லாத காட்டுக்குள்
தயக்கமின்றி செல்லுவதா?
சாத்தான்கள் இருக்குமிடத்தில்
சத்தியத்தை வெல்லுவதா?
மனசில் எரியும் அக்கினித் தீ
மார்பு வலிக்கச் செய்கிறது..
ஆறுதலுக்கு ஆட்களின்றி
அழுகை வந்து கொல்கிறது!
பாசத்துக்கும் பொறாமைக்கும்
வித்தியாசம் தெரிகிறது..
பாசம் என்பதன் வெள்ளை நிறம்
இப்போது எனக்கு புரிகிறது!
ஆதலால்
அன்பு என்பதன் ஆழ வேர்
அடி மனசில் வளர்கிறது..
மிக மெல்லிய நேசமொன்று
எனக்குள்ளே மலர்கிறது!
எனைப் பிடித்த சோகமெல்லாம்
மெதுமெதுவாய் தேய்கிறது..
அலையடித்த சந்தேகங்கள்
அடியோடு ஓய்கிறது!!!
தா(க்)கத்தை
போக்கும் வழி என்னவோ?
நெஞ்சில் தோன்றும் துன்பத்தை
தீர்க்கும் வழி என்னவோ?
தண்ணீர் இல்லாத காட்டுக்குள்
தயக்கமின்றி செல்லுவதா?
சாத்தான்கள் இருக்குமிடத்தில்
சத்தியத்தை வெல்லுவதா?
மனசில் எரியும் அக்கினித் தீ
மார்பு வலிக்கச் செய்கிறது..
ஆறுதலுக்கு ஆட்களின்றி
அழுகை வந்து கொல்கிறது!
பாசத்துக்கும் பொறாமைக்கும்
வித்தியாசம் தெரிகிறது..
பாசம் என்பதன் வெள்ளை நிறம்
இப்போது எனக்கு புரிகிறது!
ஆதலால்
அன்பு என்பதன் ஆழ வேர்
அடி மனசில் வளர்கிறது..
மிக மெல்லிய நேசமொன்று
எனக்குள்ளே மலர்கிறது!
எனைப் பிடித்த சோகமெல்லாம்
மெதுமெதுவாய் தேய்கிறது..
அலையடித்த சந்தேகங்கள்
அடியோடு ஓய்கிறது!!!
எரிக்கும் சுவாசம்
உண்மையையும்
உதாசீனத்தையும்
புரிய வைத்ததே நீ தானே..
அப்படியிருக்க
துகள்துகளாக
இதயக் கண்ணாடியை உடைத்துவிட்டு
இப்போது
அது தெளிவாக இல்லை
என்பது ஞாயமா?
பாசத்தை மட்டுமே
பகிரத் தெரிந்த என்னால்
பாசாங்கு பண்ணத்தெரியாது
என்ற உண்மையை அறிந்த பின்பும்
குறை சொல்தல் ஞாயமா?
உயிர்மூச்சின் துளிகளில் எல்லாம்
உனக்கான சுவாசித்தலை செய்த போது
உள்ளுணர்வேயின்றி
உன் அகங்காரத்தை காட்டியது ஞாயமா?
உனக்காக எதையும்
விட்டுக்கொடுக்கத் தயார் என்று நானிருந்தபோது
எதற்காகவும் என்னை இழக்க நீ
தயாராயிருந்தது மட்டும் ஞாயமா?
என் இதயத்தை
உன் விழியிடம் ஒப்படைத்துவிட்டு
சந்தோஷித்திருந்தபோது
அதைப் புழுவாக
சுடுமணலில் இட்டு வதைத்தது ஞாயமா?
இப்போது மட்டுமென்ன
உன் வார்த்தைகளாலும் செய்கையினாலும்
தண்ணீர் வற்றச்செய்த
என் மன நதியில்
நீச்சலடிக்க நீ நினைப்பது
ஞாயமா?
உதாசீனத்தையும்
புரிய வைத்ததே நீ தானே..
அப்படியிருக்க
துகள்துகளாக
இதயக் கண்ணாடியை உடைத்துவிட்டு
இப்போது
அது தெளிவாக இல்லை
என்பது ஞாயமா?
பாசத்தை மட்டுமே
பகிரத் தெரிந்த என்னால்
பாசாங்கு பண்ணத்தெரியாது
என்ற உண்மையை அறிந்த பின்பும்
குறை சொல்தல் ஞாயமா?
உயிர்மூச்சின் துளிகளில் எல்லாம்
உனக்கான சுவாசித்தலை செய்த போது
உள்ளுணர்வேயின்றி
உன் அகங்காரத்தை காட்டியது ஞாயமா?
உனக்காக எதையும்
விட்டுக்கொடுக்கத் தயார் என்று நானிருந்தபோது
எதற்காகவும் என்னை இழக்க நீ
தயாராயிருந்தது மட்டும் ஞாயமா?
என் இதயத்தை
உன் விழியிடம் ஒப்படைத்துவிட்டு
சந்தோஷித்திருந்தபோது
அதைப் புழுவாக
சுடுமணலில் இட்டு வதைத்தது ஞாயமா?
இப்போது மட்டுமென்ன
உன் வார்த்தைகளாலும் செய்கையினாலும்
தண்ணீர் வற்றச்செய்த
என் மன நதியில்
நீச்சலடிக்க நீ நினைப்பது
ஞாயமா?
Tuesday, April 8, 2014
அல்லாஹ்வின் சந்நிதானத்தில்
தங்கையே
ஒரு கிராமத்து நதியின்
குளிர்ச்சியாக நீ
எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கின்றாய்..
ஒரு நிலாக்கீற்றின்
ஒளி போல - நீ
நீங்கிச் சென்றாலும்
எமக்குள் வாழ்கின்றாய்..
வசந்த காற்று வீசும்
இடத்தில்
ஒரு தென்றலாக
நினைவில் மலர்கிறாய்..
உலகத்தின் அழுக்குகளை
காணக் கூடாதென்றா
கண்மூடிக்கொண்டாய்?
பாவம் செய்யும் நீசர்களின்
முகத்தில் விளிக்க வேண்டாமென்றா
விழி திறக்குமுன்னேயே
உயிர் நிறுத்திக்கொண்டாய்?
நாளை மறுமையில்
சுவர்க்கத்தின் வாசலிலே
ஒரு குழந்தை தேவதையாக
நீ எங்களை
அழைத்துப்போவாய்
அங்கே
நாங்களெல்லாம்
ஒன்றாயிருந்து
உம்மம்மாவின் மடியில்
சாய்ந்திருக்கலாம்
அப்பாவுடனிருந்து
கதைகள் கேட்கலாம்..
நான் .. நீ
உம்மா.. வாப்பாதம்பி.. தங்கை என்ற
நமது குருவிக் கூட்டுக் குடும்பம்
அல்லாஹ்வின் சந்நிதானத்தில்
சந்தோஷமாயிருக்கலாம்!!!
ஒரு கிராமத்து நதியின்
குளிர்ச்சியாக நீ
எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கின்றாய்..
ஒரு நிலாக்கீற்றின்
ஒளி போல - நீ
நீங்கிச் சென்றாலும்
எமக்குள் வாழ்கின்றாய்..
வசந்த காற்று வீசும்
இடத்தில்
ஒரு தென்றலாக
நினைவில் மலர்கிறாய்..
உலகத்தின் அழுக்குகளை
காணக் கூடாதென்றா
கண்மூடிக்கொண்டாய்?
பாவம் செய்யும் நீசர்களின்
முகத்தில் விளிக்க வேண்டாமென்றா
விழி திறக்குமுன்னேயே
உயிர் நிறுத்திக்கொண்டாய்?
நாளை மறுமையில்
சுவர்க்கத்தின் வாசலிலே
ஒரு குழந்தை தேவதையாக
நீ எங்களை
அழைத்துப்போவாய்
அங்கே
நாங்களெல்லாம்
ஒன்றாயிருந்து
உம்மம்மாவின் மடியில்
சாய்ந்திருக்கலாம்
அப்பாவுடனிருந்து
கதைகள் கேட்கலாம்..
நான் .. நீ
உம்மா.. வாப்பாதம்பி.. தங்கை என்ற
நமது குருவிக் கூட்டுக் குடும்பம்
அல்லாஹ்வின் சந்நிதானத்தில்
சந்தோஷமாயிருக்கலாம்!!!
Sunday, January 19, 2014
வாழ்க்கை எனும் நாடக மேடை!
தோற்றத்தில் நைந்துள்ளோமா
ஏற்றத்தில் தொய்ந்துள்ளோமா
மாற்றங்கள் நடக்கும் என்றே
நாற்றத்தில் வாழ்கிறோமா?
கறுத்த உடலோடும், வெயிலோடும்
பெருத்த மழையோடும், பனியோடும்
சிறுத்த லாபத்துக்காகN;வண்டி
பொறுத்துப் பொறுத்து இருக்கிறோமா?
கரிய புகை படிந்த காம்பறாவில்
சிறிய, பெரிய பிள்ளைகளுடன்
அரியதொரு வாழ்வைத்தான்
தெரியாமலே கடத்திவிட்டோம்!
அன்னை போல் மதித்தேதான்
மண்ணை நாம் மிதித்தோமே
பெண்ணையும், ஆணையும்
கண்ணைப் போல் காத்தோமே!
மலை வாழ்க்கை பழகிடுச்சு
இலைசாயம் இனிச்சிடுச்சி
தலை தோறும் வறுமை எனும்
அலை வந்து அடிச்சிடுச்சு!
சாதுவாக வாழ்கின்றோம்
மாதுகளை மதிக்கின்றோம்
தீது என நன்குணர்ந்து
சூது கூட தவிர்த்திருந்தோம்!
சுமை வந்து நெரித்த போதும்
எமைப் பற்றி கவலையில்லை
இமை போல துரை காப்பார்
நமை என்று நம்பி நின்றோம்!
துடுப்பு இல்லா ஓடம் போல
இடுப்பு கடுத்தே வேலை செய்து
அடுப்பு மூட்டிகொஞ்சம் சமைத்து
விடுப்பு பார்க்கும் வாழ்க்கை நமதே!
படித்த இளைஞர் வாழ்க்கையாவும்
குடித்துக் குடித்தே வீணாய் போகும்
வடித்த கண்ணீர் ஆவியாகும்
நடித்த வாழ்க்கை மேடை ஏறும்!
நாளை எப்படி கழியும் என்று
வேளை தோறும் சிந்தித்தேதான்
காலை மாலை ஓலைக் குடிலில்
ஏழை வாழ்க்கை முடிஞ்சு போகும்!!!
Thursday, January 16, 2014
அன்புத் தோழிக்கு
நீ என்மீது
அளவு கடந்த அன்பை காட்டியபோது
என்னால் அதனைப் புரிந்து கொள்ள
இயலவில்லை
அடிக்கடி வருகின்ற
உன் மெஸேஜ்களும்
மிஸ்கோல்களும்
நான் உன்னிடம் பேசாதபோது
நீ கொண்ட கோபமும்
உண்மையில் என்னை
எரிச்சல் அடையவே செய்தன
எனது அன்பை வழிபார்த்து
நீ காட்டிய பாசத்தின் தடயங்கள்
அப்போதெல்லாம்
என் இதயத்தில் பதியவேயில்லை
உன்னை சந்தித்த தருணத்தில்
உன்னிடம் ஏற்பட்ட
அந்த அன்பு கூட
காலப்போக்கில்
காணாமலேயே போனது
கண்ணில் காணாத பொருள்
கருத்திலிருந்து மறையும்
என்ற கூற்றுக்கிணங்க
உன்னை நான்
மறந்தே போனேன் தெரியுமா?
ஆனால்
இன்று
நானும் உன்னைப் போல
ஒரு அன்புக்காக ஏங்குகின்றேன்
உன்னைப் போலவே
மெஸேஜ் பண்ணுகிறேன்
அடிக்கடி மிஸ்கோல் கொடுக்கிறேன்..
நான் எப்படி உன்னை
தவிர்த்துவிட்டேனோ
அதைப் போலவே
இல்லையில்லை
அதையும்விட இப்போது
தவிர்க்கப்படுகிறேன்
என்னில் பாசம் காட்டாத இடத்தில்
நான் வைத்த அன்பு
கண்டுகொள்ளப்படாமல்
அந்தரத்தில் இருக்கிறது
அதனால்தான்
நீ கொண்ட அன்பின் ஆழத்தையும்
பிரிவின் நீளத்தையும்
காலம் இப்போது
நன்றாகவே புரிய வைத்திருக்கிறது!!!
அளவு கடந்த அன்பை காட்டியபோது
என்னால் அதனைப் புரிந்து கொள்ள
இயலவில்லை
அடிக்கடி வருகின்ற
உன் மெஸேஜ்களும்
மிஸ்கோல்களும்
நான் உன்னிடம் பேசாதபோது
நீ கொண்ட கோபமும்
உண்மையில் என்னை
எரிச்சல் அடையவே செய்தன
எனது அன்பை வழிபார்த்து
நீ காட்டிய பாசத்தின் தடயங்கள்
அப்போதெல்லாம்
என் இதயத்தில் பதியவேயில்லை
உன்னை சந்தித்த தருணத்தில்
உன்னிடம் ஏற்பட்ட
அந்த அன்பு கூட
காலப்போக்கில்
காணாமலேயே போனது
கண்ணில் காணாத பொருள்
கருத்திலிருந்து மறையும்
என்ற கூற்றுக்கிணங்க
உன்னை நான்
மறந்தே போனேன் தெரியுமா?
ஆனால்
இன்று
நானும் உன்னைப் போல
ஒரு அன்புக்காக ஏங்குகின்றேன்
உன்னைப் போலவே
மெஸேஜ் பண்ணுகிறேன்
அடிக்கடி மிஸ்கோல் கொடுக்கிறேன்..
நான் எப்படி உன்னை
தவிர்த்துவிட்டேனோ
அதைப் போலவே
இல்லையில்லை
அதையும்விட இப்போது
தவிர்க்கப்படுகிறேன்
என்னில் பாசம் காட்டாத இடத்தில்
நான் வைத்த அன்பு
கண்டுகொள்ளப்படாமல்
அந்தரத்தில் இருக்கிறது
அதனால்தான்
நீ கொண்ட அன்பின் ஆழத்தையும்
பிரிவின் நீளத்தையும்
காலம் இப்போது
நன்றாகவே புரிய வைத்திருக்கிறது!!!
Wednesday, December 25, 2013
நீ என்ன செய்வாய் பாவம்!
நீயும் நானும்
அமர்ந்திருந்து பேசும்
அந்த படிக்கட்டு
இன்று ஏனோ வெறுமையாக!
உன் முகம் பார்த்தபடியே
நானிருக்கும் பொழுதுகள்
நீயில்லாத இன்று கசப்பாக!
பலர் சுற்றியிருந்த போதும்
நான் மட்டும்
இந்த குரூர உலகில்
தனித்து விடப்பட்டதாய்
உணர முடிந்தது என்னால்..
இந்த மாற்றங்கள் எல்லாம்
ஏற்பட்டதெனக்கு உன்னால்!
உன் அருகேயிருந்து
பேசும் அழகிய தருணங்கள்..
இன்று ஆயிரம் முறை
தோன்றி மறைந்தது
தெரியுமா உனக்கு?
காலை, பகல், மாலை
எல்லாம் உன்னோடு
செல்ல காத்திருப்பேனே
அந்த சுகம்
இன்று சுமையாகிப் போனதில்
ஆச்சரியம் இல்லை
உனக்கு இப்படியெல்லாம்
இருந்திருக்காது..
ஏனெனில்
இந்த அவஸ்தையை
ஆரம்பித்து வைத்த
பாவி நான் தானே.
நீ என்ன செய்வாய்
பாவம்!
அமர்ந்திருந்து பேசும்
அந்த படிக்கட்டு
இன்று ஏனோ வெறுமையாக!
உன் முகம் பார்த்தபடியே
நானிருக்கும் பொழுதுகள்
நீயில்லாத இன்று கசப்பாக!
பலர் சுற்றியிருந்த போதும்
நான் மட்டும்
இந்த குரூர உலகில்
தனித்து விடப்பட்டதாய்
உணர முடிந்தது என்னால்..
இந்த மாற்றங்கள் எல்லாம்
ஏற்பட்டதெனக்கு உன்னால்!
உன் அருகேயிருந்து
பேசும் அழகிய தருணங்கள்..
இன்று ஆயிரம் முறை
தோன்றி மறைந்தது
தெரியுமா உனக்கு?
காலை, பகல், மாலை
எல்லாம் உன்னோடு
செல்ல காத்திருப்பேனே
அந்த சுகம்
இன்று சுமையாகிப் போனதில்
ஆச்சரியம் இல்லை
உனக்கு இப்படியெல்லாம்
இருந்திருக்காது..
ஏனெனில்
இந்த அவஸ்தையை
ஆரம்பித்து வைத்த
பாவி நான் தானே.
நீ என்ன செய்வாய்
பாவம்!
என்னவென்று தெரியவில்லை
என்னவென்று தெரியவில்லை
ஒருநாளும் இல்லாமல்
இன்று நேரகாலத்துடன்
போக வேண்டும்
போல் இருக்கின்றது
தலையணையில்
முகம் புதைத்து
அழுது தீர்க்க வேண்டும்
போலிருக்கின்றது
நண்பர்களிடமெல்லாம்
மன்னிப்பு கேட்டு
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
போலிருக்கின்றது
எங்கள் வீட்டுக்குப் போய்
உம்மாவின் மடியில்
தலை வைத்துப் படுக்க வேண்டும்
போலிருக்கின்றது
வாப்பாவுடன் எல்லோரும் அமர்ந்து
அனைவரும் ஒன்றாக சாப்பிட வேண்டும்
போல் இருக்கின்றது
மீண்டும் சிறுகுழந்தையாய் மாறி
என் தம்பி, தங்கையுடன்
செல்லச் சண்டை போட வேண்டும்
போலிருக்கின்றது
இந்த உலகத்தையே மறந்து
பட்டாம்பூச்சி பிடித்து
விளையாடிக் களைக்க வேண்டும்
போலிருக்கின்றது!
கடற்கரைக்குச் சென்று
கடலிடம் என் சோகங்களை
கத்திச் சொல்ல வேண்டும்
போலிருக்கின்றது
யார் கண்ணிலும் படாமல்
யாருக்கும் வலி கொடுக்காமல்
செத்துப் போக வேண்டும்
போலிருக்கின்றது
ஒருநாளும் இல்லாமல்
இன்று நேரகாலத்துடன்
போக வேண்டும்
போல் இருக்கின்றது
தலையணையில்
முகம் புதைத்து
அழுது தீர்க்க வேண்டும்
போலிருக்கின்றது
நண்பர்களிடமெல்லாம்
மன்னிப்பு கேட்டு
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
போலிருக்கின்றது
எங்கள் வீட்டுக்குப் போய்
உம்மாவின் மடியில்
தலை வைத்துப் படுக்க வேண்டும்
போலிருக்கின்றது
வாப்பாவுடன் எல்லோரும் அமர்ந்து
அனைவரும் ஒன்றாக சாப்பிட வேண்டும்
போல் இருக்கின்றது
மீண்டும் சிறுகுழந்தையாய் மாறி
என் தம்பி, தங்கையுடன்
செல்லச் சண்டை போட வேண்டும்
போலிருக்கின்றது
இந்த உலகத்தையே மறந்து
பட்டாம்பூச்சி பிடித்து
விளையாடிக் களைக்க வேண்டும்
போலிருக்கின்றது!
கடற்கரைக்குச் சென்று
கடலிடம் என் சோகங்களை
கத்திச் சொல்ல வேண்டும்
போலிருக்கின்றது
யார் கண்ணிலும் படாமல்
யாருக்கும் வலி கொடுக்காமல்
செத்துப் போக வேண்டும்
போலிருக்கின்றது
உனக்கொன்று தெரியுமா?
என் இதய மாளிகையில்
சிம்மாசனமிட்டு
அமர்ந்திருக்கும்
என்னவனே!
உனக்கொன்று தெரியுமா?
நான் நினைத்திருந்தேன்
நீ என்னில்
கலந்துவிட்டதாக..
இல்லை
நான் தான்
உன்னுள் தொலைந்துவிட்டேன்!
கனவில் வருகிறேன் என்று
சொல்லிச் சென்றவனே!
பின்பு
கனவைத் திருடி
என் தூக்கம் தின்றவனே!
இரவு பதினொரு மணிக்கு
வாசிக்க வைத்தவனே
உன்னை மட்டும்
சுவாசிக்க வைத்தவனே
வாரநாட்கள் ஐந்தும்
நரகம் போல் இருந்தது அன்று..
இன்று அவை
தேன் சொட்டுகிறது
சுவர்க்கமாகத் தெரிந்த
விடுமுறை நாட்கள்
இன்று தேள் கொட்டுகின்றது
அழகிய பூக்களை எல்லாம்
மாலை செய்து உனக்கு
சூட நினைத்தேன்
'பூவுக்கே பூ மாலையா?' என
பூக்கள் சொல்லிச் சிரித்தன என்றாய்
வான் பிறையை ரசித்திருந்தேன்
'உன்னவள் நறுக்கி வீசிய
நகத்துண்டை விடவா
நான் அழகு?' என்று கூறி அது
நாணிச் செத்தது என்றாய்
எங்கு பார்த்தாலும்
உன் முகம்
திரும்புகிற திசையெல்லாம்
உன் ஞாபகம் என்றாய்
இப்படி சொல்லிச் சொல்லியே என்னை
உனதாக்கிக் கொண்டாய்!!!
சிம்மாசனமிட்டு
அமர்ந்திருக்கும்
என்னவனே!
உனக்கொன்று தெரியுமா?
நான் நினைத்திருந்தேன்
நீ என்னில்
கலந்துவிட்டதாக..
இல்லை
நான் தான்
உன்னுள் தொலைந்துவிட்டேன்!
கனவில் வருகிறேன் என்று
சொல்லிச் சென்றவனே!
பின்பு
கனவைத் திருடி
என் தூக்கம் தின்றவனே!
இரவு பதினொரு மணிக்கு
வாசிக்க வைத்தவனே
உன்னை மட்டும்
சுவாசிக்க வைத்தவனே
வாரநாட்கள் ஐந்தும்
நரகம் போல் இருந்தது அன்று..
இன்று அவை
தேன் சொட்டுகிறது
சுவர்க்கமாகத் தெரிந்த
விடுமுறை நாட்கள்
இன்று தேள் கொட்டுகின்றது
அழகிய பூக்களை எல்லாம்
மாலை செய்து உனக்கு
சூட நினைத்தேன்
'பூவுக்கே பூ மாலையா?' என
பூக்கள் சொல்லிச் சிரித்தன என்றாய்
வான் பிறையை ரசித்திருந்தேன்
'உன்னவள் நறுக்கி வீசிய
நகத்துண்டை விடவா
நான் அழகு?' என்று கூறி அது
நாணிச் செத்தது என்றாய்
எங்கு பார்த்தாலும்
உன் முகம்
திரும்புகிற திசையெல்லாம்
உன் ஞாபகம் என்றாய்
இப்படி சொல்லிச் சொல்லியே என்னை
உனதாக்கிக் கொண்டாய்!!!
சாயம்போன இதயம்
மறந்து போனேன் எல்லாமே..
என் இயல்பை
என் இருப்பை..
உன்னை
உன் அன்பை..
எல்லாமே மறந்துபோனேன் இன்று!
எனக்கு என்ன ஆயிற்று?
ஏன் இப்படிக் கோபப்படுகின்றேன்
தனிமையை விரும்புகின்றேன்
சந்தோசத்தைத் தொலைக்கிறேன்..
உனது அருகாமை தந்த
அந்த இன்பம்
இன்று இன்பமாக இருக்கவில்லை..
என் கண்கள் கலங்குகின்றது
தொண்டை அடைக்கிறது
அழ வேண்டும்போல் தோன்றுகிறது
இதயம் விம்மி வெடிக்கின்றது!
என்னைப் புரிந்து கொள்ள
அவசியங்கள் இங்கில்லை..
ஆனால்
என்னை பிழிந்து கொல்ல
அதிகாரம் தந்தது யார்?
உன்னால் மட்டுமே பிடிக்கும் வாலிபம்
இன்று
ஏனோ வெறுத்தே போனது!
நீ சொல்வாயே அடிக்கடி
பச்சோந்திகள் பதுங்கியிருக்கும்
உலகம் இதுவென்று
உண்மைதான்!
அன்பின் விலாசம்
திசை தெரியாமல் போனது
சாப்பிடும் போதும்
மன இறுக்கம் இருந்தது
எதிர்பார்ப்புகள் எல்லாம்
ஏமாற்றம் அடைந்தால்
அன்பின் முகவரியும்
அழிந்தல்லவா போய்விடும்?
அகத்தில் உள்ளதை
முகத்தில் கண்டுவிட்டாய்
மறக்க முயன்றும்
தோற்றுத்தான் போனேன்
பயமாயிருக்கின்றது
என் வாழ்க்கை முழுவதும் இப்படி
தோற்றுப் போவேனோ என்றெண்ணி!
சுயநல வேட்கையில்
சுற்றியிருக்கும் சொந்தங்கள்
எதிரியை மட்டுமல்ல
எதிரே இருப்பவரையும் குறிபார்க்கிறது..
கழித்தது எப்படியோ நீ
கடந்த காலங்களை..
வாழ்வென்றால்
ஆயிரமிருக்கும் என்று
நீ வார்த்தையில் சொல்லிவிடலாம்
ஆனால்
காயப்பட்ட உள்ளத்துக்கும்
சாயம்போன இதயத்துக்கும்தான் தெரியும்
வலியின் ஊடுறுவல்கள்!!!
என் இயல்பை
என் இருப்பை..
உன்னை
உன் அன்பை..
எல்லாமே மறந்துபோனேன் இன்று!
எனக்கு என்ன ஆயிற்று?
ஏன் இப்படிக் கோபப்படுகின்றேன்
தனிமையை விரும்புகின்றேன்
சந்தோசத்தைத் தொலைக்கிறேன்..
உனது அருகாமை தந்த
அந்த இன்பம்
இன்று இன்பமாக இருக்கவில்லை..
என் கண்கள் கலங்குகின்றது
தொண்டை அடைக்கிறது
அழ வேண்டும்போல் தோன்றுகிறது
இதயம் விம்மி வெடிக்கின்றது!
என்னைப் புரிந்து கொள்ள
அவசியங்கள் இங்கில்லை..
ஆனால்
என்னை பிழிந்து கொல்ல
அதிகாரம் தந்தது யார்?
உன்னால் மட்டுமே பிடிக்கும் வாலிபம்
இன்று
ஏனோ வெறுத்தே போனது!
நீ சொல்வாயே அடிக்கடி
பச்சோந்திகள் பதுங்கியிருக்கும்
உலகம் இதுவென்று
உண்மைதான்!
அன்பின் விலாசம்
திசை தெரியாமல் போனது
சாப்பிடும் போதும்
மன இறுக்கம் இருந்தது
எதிர்பார்ப்புகள் எல்லாம்
ஏமாற்றம் அடைந்தால்
அன்பின் முகவரியும்
அழிந்தல்லவா போய்விடும்?
அகத்தில் உள்ளதை
முகத்தில் கண்டுவிட்டாய்
மறக்க முயன்றும்
தோற்றுத்தான் போனேன்
பயமாயிருக்கின்றது
என் வாழ்க்கை முழுவதும் இப்படி
தோற்றுப் போவேனோ என்றெண்ணி!
சுயநல வேட்கையில்
சுற்றியிருக்கும் சொந்தங்கள்
எதிரியை மட்டுமல்ல
எதிரே இருப்பவரையும் குறிபார்க்கிறது..
கழித்தது எப்படியோ நீ
கடந்த காலங்களை..
வாழ்வென்றால்
ஆயிரமிருக்கும் என்று
நீ வார்த்தையில் சொல்லிவிடலாம்
ஆனால்
காயப்பட்ட உள்ளத்துக்கும்
சாயம்போன இதயத்துக்கும்தான் தெரியும்
வலியின் ஊடுறுவல்கள்!!!
Subscribe to:
Posts (Atom)

