என் இதய மாளிகையில்
சிம்மாசனமிட்டு
அமர்ந்திருக்கும்
என்னவனே!
உனக்கொன்று தெரியுமா?
நான் நினைத்திருந்தேன்
நீ என்னில்
கலந்துவிட்டதாக..
இல்லை
நான் தான்
உன்னுள் தொலைந்துவிட்டேன்!
கனவில் வருகிறேன் என்று
சொல்லிச் சென்றவனே!
பின்பு
கனவைத் திருடி
என் தூக்கம் தின்றவனே!
இரவு பதினொரு மணிக்கு
வாசிக்க வைத்தவனே
உன்னை மட்டும்
சுவாசிக்க வைத்தவனே
வாரநாட்கள் ஐந்தும்
நரகம் போல் இருந்தது அன்று..
இன்று அவை
தேன் சொட்டுகிறது
சுவர்க்கமாகத் தெரிந்த
விடுமுறை நாட்கள்
இன்று தேள் கொட்டுகின்றது
அழகிய பூக்களை எல்லாம்
மாலை செய்து உனக்கு
சூட நினைத்தேன்
'பூவுக்கே பூ மாலையா?' என
பூக்கள் சொல்லிச் சிரித்தன என்றாய்
வான் பிறையை ரசித்திருந்தேன்
'உன்னவள் நறுக்கி வீசிய
நகத்துண்டை விடவா
நான் அழகு?' என்று கூறி அது
நாணிச் செத்தது என்றாய்
எங்கு பார்த்தாலும்
உன் முகம்
திரும்புகிற திசையெல்லாம்
உன் ஞாபகம் என்றாய்
இப்படி சொல்லிச் சொல்லியே என்னை
உனதாக்கிக் கொண்டாய்!!!
சிம்மாசனமிட்டு
அமர்ந்திருக்கும்
என்னவனே!
உனக்கொன்று தெரியுமா?
நான் நினைத்திருந்தேன்
நீ என்னில்
கலந்துவிட்டதாக..
இல்லை
நான் தான்
உன்னுள் தொலைந்துவிட்டேன்!
கனவில் வருகிறேன் என்று
சொல்லிச் சென்றவனே!
பின்பு
கனவைத் திருடி
என் தூக்கம் தின்றவனே!
இரவு பதினொரு மணிக்கு
வாசிக்க வைத்தவனே
உன்னை மட்டும்
சுவாசிக்க வைத்தவனே
வாரநாட்கள் ஐந்தும்
நரகம் போல் இருந்தது அன்று..
இன்று அவை
தேன் சொட்டுகிறது
சுவர்க்கமாகத் தெரிந்த
விடுமுறை நாட்கள்
இன்று தேள் கொட்டுகின்றது
அழகிய பூக்களை எல்லாம்
மாலை செய்து உனக்கு
சூட நினைத்தேன்
'பூவுக்கே பூ மாலையா?' என
பூக்கள் சொல்லிச் சிரித்தன என்றாய்
வான் பிறையை ரசித்திருந்தேன்
'உன்னவள் நறுக்கி வீசிய
நகத்துண்டை விடவா
நான் அழகு?' என்று கூறி அது
நாணிச் செத்தது என்றாய்
எங்கு பார்த்தாலும்
உன் முகம்
திரும்புகிற திசையெல்லாம்
உன் ஞாபகம் என்றாய்
இப்படி சொல்லிச் சொல்லியே என்னை
உனதாக்கிக் கொண்டாய்!!!