சுருதி இல்லாத பாட்டைப் போல்தான்
நான் பட்ட பாட்டையும்
சொல்ல வேண்டியிருக்கிறது!
காதலித்தால்
கவிதை வருகிறதோ இல்லையோ
கட்டாயம்
கண்ணீர் வருகிறது!
பிரிவின் துயரத்தை
இனியும் தாங்க முடியாது
என்னால்!
எத்தனை நாளைக்குத்தான்
என் இதயத்தை
நானும் ஏமாற்றித் தேற்றுவது?
நீ...
உன் குடும்பம்..
உன் சூழல்.. யாவும்
என் நினைப்பை விட்டும்
உன்னை தூரமாக்கியிருக்கிறது!
நான்..
என் தனிமை...
என் அன்பு.. எல்லாம்
உன் நினைப்பால்
மனதை ஈரமாக்கியிருக்கிறது!
உன் உள்ளத்தின் ஓரத்தில்
நான் வீற்றிருப்பதை அறிவேன்..
கண்ணால் காணாமல்
கருத்தொருமித்து வாழலாம் என்றாயே..
உன்
தத்துவங்களின்
ஞாயத்தை புரியுமளவுக்கு
எனக்கு
வயதுமில்லை
அறிவுமில்லை!
நான் பட்ட பாட்டையும்
சொல்ல வேண்டியிருக்கிறது!
காதலித்தால்
கவிதை வருகிறதோ இல்லையோ
கட்டாயம்
கண்ணீர் வருகிறது!
பிரிவின் துயரத்தை
இனியும் தாங்க முடியாது
என்னால்!
எத்தனை நாளைக்குத்தான்
என் இதயத்தை
நானும் ஏமாற்றித் தேற்றுவது?
நீ...
உன் குடும்பம்..
உன் சூழல்.. யாவும்
என் நினைப்பை விட்டும்
உன்னை தூரமாக்கியிருக்கிறது!
நான்..
என் தனிமை...
என் அன்பு.. எல்லாம்
உன் நினைப்பால்
மனதை ஈரமாக்கியிருக்கிறது!
உன் உள்ளத்தின் ஓரத்தில்
நான் வீற்றிருப்பதை அறிவேன்..
கண்ணால் காணாமல்
கருத்தொருமித்து வாழலாம் என்றாயே..
உன்
தத்துவங்களின்
ஞாயத்தை புரியுமளவுக்கு
எனக்கு
வயதுமில்லை
அறிவுமில்லை!