என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, December 3, 2013

இடைவெளி நிரப்புவாயா

பரீட்சையின்போதும்
உன்
பாச முகம் கண்முன்னே

பதற்றத்தின் போதும்
உன் உருவம் நிழலாடுது
என் முன்னே!

தலைக்குனிந்தெழுதுது பேனா
தலைநிமிர்ந்து பார்ப்பது நானா
என்று எனக்குள் ஒரு அவஸ்தை!

என்ன செய்கிறாய்
என்று தெரியாமலேயே
என் எண்ணங்கள் சுற்றித் திரிகிறது

மேலெழும் நினைவலைகள்
மீண்டும் சுழியடித்து
என் உயிருக்குள் உன்னை
எட்டிப் பார்க்கிறது!

எனது இதயத்தில் எழுந்துள்ள
இடைவெளியை நீ
இடைவெளி நிரப்புவாயா - இல்லை
இரட்டிப்பாக்குவாயா..???

தவித்துத் தணியும் என் மனதை
என்ன தந்து தீர்க்கப்போகிறாய்.....
நீ வந்தபின் என்னிடம்
நன்றாக மாட்டி சாகப்போகிறாய்!