என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, December 25, 2013

நீயேதான்

ஒரு
பூர்வீகத்தின் காலடியில்
புதைந்து கிடந்த
என் இதயத்தைக்
கண்டுபிடித்து
தூசு தட்டி எடுத்தது யார்?
நீதான்!

அமில விஷங்களால்
அழுகியிருந்த
என் மனதை
அள்ளியெடுத்து
பாதுகாத்து பத்திரப்படுத்தியது யார்?
நீதான்!

திக்குகள் தெரியாமல்
விக்கி நான் தவித்தபோது
தடுக்கி நான் விழுந்து விடாமல்
தட்டிக் கொடுத்தது யார்?
நீதான்!

இயலாமையின் உச்சத்தில்
இடிந்து போயிருக்கையில்
இது பிழை என்று என்னிடம்
இனிமையாக எடுத்துரைத்தது யார்?
நீதான்!

மனிதநேயம் செத்துவிட்டதாய்
மனதளவில் மரித்திருந்தபோது
மயிலிறகாய் மனதுக்கு
ஒத்தடம் தந்தது யார்?
நீயேதான்!

ஆனால்
இன்று..
என்னைப் பிரிந்து
கொல்லாமல் கொன்று
மீண்டும் மரணிக்கச் செய்தது யார்?
அதுவும் நீயேதான்!