எத்தனை இன்பம்
உன்னுடன் நான் பேசிவிட்டால்..
மனசெல்லாம் பூ பூக்கிறது..
தென்றல் தாலாட்டுகிறது..
பாரமாக இருந்த இதயம்
பஞ்சாக பறக்கிறது!
நிறைய பேச வேண்டும்
உன் கண்கள் பார்த்து
உன் விரலைப் பிடித்து
உனதருகே இருந்து
தனிமையில் நிறைய பேச வேண்டும்
நான் இழந்தவை பற்றி
என் எதிர்காலம் பற்றி
என் ஆசைகள் பற்றி
என் கனவுகள் பற்றி
என் அன்பு பற்றி
என்னைப் பற்றியெல்லாம்
நிறைய பேச வேண்டும்
சந்தர்ப்பம் வருமா.. அவை
எப்போதும் போல
எனக்கு சதி செய்யுமா?
அல்லது
தருணம் பார்த்து யாராவது வந்து
என் வயிற்றெரிச்சலை
கொட்டிக் கொள்வார்களா?
உன்னுடன் பேசுவதற்கான
சந்தர்ப்பங்கள் தானாய்
உருவாகாது..
நாம் தான்
உருவாக்க வேண்டும்...
நான் உருவாக்கிக் கொள்வேன்
நீ???
உன்னுடன் நான் பேசிவிட்டால்..
மனசெல்லாம் பூ பூக்கிறது..
தென்றல் தாலாட்டுகிறது..
பாரமாக இருந்த இதயம்
பஞ்சாக பறக்கிறது!
நிறைய பேச வேண்டும்
உன் கண்கள் பார்த்து
உன் விரலைப் பிடித்து
உனதருகே இருந்து
தனிமையில் நிறைய பேச வேண்டும்
நான் இழந்தவை பற்றி
என் எதிர்காலம் பற்றி
என் ஆசைகள் பற்றி
என் கனவுகள் பற்றி
என் அன்பு பற்றி
என்னைப் பற்றியெல்லாம்
நிறைய பேச வேண்டும்
சந்தர்ப்பம் வருமா.. அவை
எப்போதும் போல
எனக்கு சதி செய்யுமா?
அல்லது
தருணம் பார்த்து யாராவது வந்து
என் வயிற்றெரிச்சலை
கொட்டிக் கொள்வார்களா?
உன்னுடன் பேசுவதற்கான
சந்தர்ப்பங்கள் தானாய்
உருவாகாது..
நாம் தான்
உருவாக்க வேண்டும்...
நான் உருவாக்கிக் கொள்வேன்
நீ???