என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, December 25, 2013

நானறியேன்..

எனக்கானவனே!
எனக்குள் உதிக்கும்
உன் மீதான அன்பை
உன்னால்
தாங்க முடியவில்லை என்கிறாய்..

நிறைய பாசம் வைத்தால்
பிரச்சினைகள் வரும் என்கிறாய்..

அதை எந்த அர்த்தத்தில் நீ
சொல்கிறாய் என்பதை
நானறியேன்..

நானும், நீயும்
பிரச்சினை படாதவிடத்து
மரணத்தைத் தவிர நம்மை
பிரிக்க சக்தயுடையோர் யார்?

நான்...
என் நேசம்...
என் இதயம்...
இவையெல்லாம்
வேண்டும் என்கிறாயா?
வேண்டாம் என்கிறாயா?
எனக்குப் புரியவில்லை

என் காதலை
நான் ஒருபோதும்
வலுக்கட்டாயமாக
காட்டப் போவதில்லை

ஒவ்வொரு தாக்கத்துக்கும்
எதிரானதும் சமமானதுமான
மறுதாக்கம் இருந்தால்தான்
அந்த நேசிப்பின் ஆயுள் கூடும்...

உயிரே
என்னுள் உற்பத்தியாகும்
இந்த அன்பை
நீ வெறுக்கின்றாயா?

குளிரெடுக்கும் என் இதயம்
உன் இதயத்தைத் தானே எதிர்பார்க்கிறது?

அது நிம்மதியாக
உறங்குவதற்;கு உன்
மார்ச்சூட்டைத்தானே நிதம் கேட்கிறது?

நீ இல்லாதுபோனால்
நான் இல்லை..
ஆனால் நானில்லை
என்றால்
உனக்கு பிரச்சினைகளே இல்லையல்லவா?

தயவு செய்து என்னிடம்
பேசாமல் மட்டும் இருந்துவிடாதே..

உனக்கு என்னைப் பிடிக்கவில்லை
என்றால்
கூர் வாள் எடுத்து
என் இதயத்தை குத்திக் கிழித்துவிடு..

அப்படியே மன்டியிட்டு விழுந்து
உன் காலடியிலேயே
செத்துப் போகிறேன்!!!