என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, November 1, 2016

கடன் கொடுத்துப் பார்

கடன்_கொடுத்துப்_பார்
.............................................
கடன் கொடுத்துப் பார்
உன்னைச் சுற்றி ஏமாற்றம் தோன்றும்
துரோகம் அர்த்தப்படும்
காலத்தின் நீளம் விளங்கும்
உனக்கும் கண்ணீர் வரும்
தலையெழுத்து மாறிப்போகும்
நண்பன் எதிரியாவான்
கடனைத் திருப்பிக்கேட்டே
உன் வாய் வலிக்கும்
கண்ணிரண்டும் இருட்டிப் போகும்
கடன் கொடுத்துப் பார்

தலையணை நனைப்பாய்

மூன்று முறை கோல் பண்ணுவாய்
ஆன்ஸர் பண்ணினால்
வருஷங்கள் நிமிஷம் என்பாய்
ஆன்ஸர் பண்ணாவிட்டால்
நிமிஷங்கள் வருஷம் என்பாய்
கடன் கேட்டவனே கவனிக்க மாட்டான்
ஆனால் அவனை நீ கவனிக்க வேணுமென உணர்வாய்
மூளைக்கும் மனசுக்கும் உருவமில்லா வலி உருண்டை உருளக் காண்பாய்
இந்த பாசம்இ நேசம்இ அன்புஇ நம்பிக்கை இந்த நட்பு எல்லாம்
பணத்தை வாங்கும் வரைக்கான ஏற்பாடுகள் என்பாய்
கடன் கொடுத்துப் பார்

இருதயம் அடிக்கடி வலியால் துடிக்கும்

நிசப்த அலைவரிசையில் கடன் வாங்கியவனின் குரல் ஒலிபரப்பாகும்
உன் பணமே எமனாகி
உன்னை வாட்டும்
கடனின் திரைச் சீலையை
பணம் கிழிக்கும்
எதிர்பார்ப்புகள்
நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் காய்ந்து சகாராவாகும்
கடன் சமுத்திரமாகும்
பிறகு கண்ணீர் துளிக்குள்
சமுத்திரம் மிதக்கும்
கடன் கொடுத்துப் பார்

சுவற்றில் மோதி மோதி உடைந்து போக உன்னால் முடியுமா

நம்பியதால் துரோகத்தை அடைந்ததுண்டா
கெஞ்சுகின்ற வலி அறிந்ததுண்டா
கவலையை உனக்குள் புதைக்கத் தெரியுமா
சபையில் அழுகையை கட்டுப்படுத்தவும்
தனிமையில் சத்தமிட்டு அழவும்
உன்னால் முடியுமா

பைத்தியம் ஆக வேண்டுமா

ஐந்து அங்குல இடைவெளியில் அவனிருந்தாலும்
உன்னை காணாததுபோல் இருந்ததுண்டா
கடன் கொடுத்துப் பார்

சின்னச் சின்ன துரோகங்களை பழக வேண்டுமே அதற்காகவேனும்

கோபத்தைக் கட்டுப்படுத்தி பணிந்துபோக வேண்டுமே அதற்காகவேனும்
நம்பிக்கை என்ற சொல்லுக்கும் துரோகம் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விளங்குமே அதற்காகவேனும்
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே அதற்காகவேனும்
கடன் கொடுத்துப் பார்

சுயமரியாதை சட்டை பிடித்தாலும்

கௌரவம் உயிர் பிழிந்தாலும்
விழித்துப் பார்க்கையில் கடன்காரன் ஊரைவிட்டு சென்றிருந்தாலும்
ஒரே சந்தியில் இருவரும் சந்தித்துக்கொண்டாலும்
நீ தேடும் அவனோ உன்னைக் கண்டுக்காமல்விட்டாலும்
கடன் கொடுத்துப் பார்

கண்ணீர் விரக்தி இரண்டில் ஒன்று

இங்கே நிச்சயம்
கடன் கொடுத்துப் பார்

மூலம் - கவிப்பேரரசு வைரமுத்து