என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, October 29, 2014

நானும் எனது கவிதைகளும்

என் இதயமெனும் சிறு கடலில்
உன் நினைவெனும் பெருங்கப்பல்
நங்கூரமிட்டபடி!

புராதனங்களில் இருந்து
கண்டெடுத்த கல்வெட்டாய்
என் காதல் இப்போது!

மிகவும் காரிருள் படிந்த
பொழுதொன்றில் தோன்றிய
சிறு நிலவுக் கீற்றைப் போல்
இன்று உன்
தொலைபேசி அழைப்புக்களின் நாதம்!

தூறலும் இருட்டுமாய் இருக்கும்
அந்தி நேர உருவமாய்
நீயும் நானும்
கடைசியாய் சந்தித்துக்கொண்ட
நிமிடங்களின் நினைவுகள்!

புல்வெளிகள் ஏந்திக்கொண்ட
சிறிய பனித்துளிகள் போல்
உன் ஓரப் பார்வையை
நெஞ்சில் சுமந்தபடி
நானும் எனது கவிதைகளும்!