ஆர்ப்பாட்டமில்லாத - ஒரு
அழகிய காதலை
எனக்குள் விதைத்தவன் நீ!
காதலானது ஆறு குளம் நதி
என்று வியாபித்திருக்கும் இன்றுகளில்
ஒரு ஆழமான சமுத்திரமாக
எனக்குள் இருப்பவன் நீ!
சோகமாக சோம்பிக் கிடக்கும்
பூந்தோட்ட புஷ்பங்களுக்கெல்லாம்
தென்றலுடன் சிரித்து
தலையாட்டச்
சொல்லிக் கொடுத்தவன் நீ!
ஊடல் கொண்டிருக்கும்
நட்சத்திரங்களுக்கிடையில்
அன்பைப் புரிய வைத்து
அழகான ரோஜாவைப் பரிசளித்தவன் நீ!
நீர்வீழ்ச்சியின் சலசலப்பை
எல்லாம் மொழிபெயர்த்து
சங்கீதமாக்கிப்
பாடியவன் நீ!
கொட்டிவிடும் மழைத்துளிகளை
கையில் ஏந்திவந்து
அவற்றுடன் ரகசியமாய்
பேசிக் கொண்டிருந்தவன் நீ!
மீசை வைத்த புயலாக
என் முன்னே தோன்றி
என் இதயத்தை
வாரிச் சுருட்டி
எடுத்துச் சென்றவன் நீ!
என்னையும் என் அன்பையும்
முழுசாக புரிந்துகொண்டு
எனக்குள்ளே எல்லாமாக
என்றும் இருப்பவன் நீ!
அழகிய காதலை
எனக்குள் விதைத்தவன் நீ!
காதலானது ஆறு குளம் நதி
என்று வியாபித்திருக்கும் இன்றுகளில்
ஒரு ஆழமான சமுத்திரமாக
எனக்குள் இருப்பவன் நீ!
சோகமாக சோம்பிக் கிடக்கும்
பூந்தோட்ட புஷ்பங்களுக்கெல்லாம்
தென்றலுடன் சிரித்து
தலையாட்டச்
சொல்லிக் கொடுத்தவன் நீ!
ஊடல் கொண்டிருக்கும்
நட்சத்திரங்களுக்கிடையில்
அன்பைப் புரிய வைத்து
அழகான ரோஜாவைப் பரிசளித்தவன் நீ!
நீர்வீழ்ச்சியின் சலசலப்பை
எல்லாம் மொழிபெயர்த்து
சங்கீதமாக்கிப்
பாடியவன் நீ!
கொட்டிவிடும் மழைத்துளிகளை
கையில் ஏந்திவந்து
அவற்றுடன் ரகசியமாய்
பேசிக் கொண்டிருந்தவன் நீ!
மீசை வைத்த புயலாக
என் முன்னே தோன்றி
என் இதயத்தை
வாரிச் சுருட்டி
எடுத்துச் சென்றவன் நீ!
என்னையும் என் அன்பையும்
முழுசாக புரிந்துகொண்டு
எனக்குள்ளே எல்லாமாக
என்றும் இருப்பவன் நீ!