என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, August 5, 2014

மரண வலி

உடைத்து வெளிவந்த
என் அழுகையை
அடைத்து வைத்துக் காத்திருந்தேன்..

முடிந்துவிடாத
உன் பயணத்தை எண்ணி
இடிந்து போய் அமர்ந்திருந்தேன்....

தேக்கி வைத்த
என் சோகங்கள் - நன்றாய்
தாக்கி விட்டது உள்ளத்தை!

புதைத்து வைத்த துன்பங்கள்
மேற்கிளம்பி
வதைத்து என்னை பாடுபடுத்தியது!

வேரோடு என் இதயத்தை
பிடுங்கிச் சென்றுவிட்டாய் - நீ
ஊருக்குப் போகையிலே!

மறைத்து வைத்த
பாசத்தை எல்லாம் மெதுவாய்
உரைத்துவிட்டது உன் பிரிவு!

என் ஜனனத்தின்
மறுபிறப்பாய் நீதானே இருக்கிறாய்
என் மரணத்தின்
வலியாகவும் நீயேதான் இருக்கின்றாய்!