மனசெல்லாம் வழிந்தோடும் குருதியினால்
ஈரமாகிப் போனதென் ஏகாந்த இரவு
இந்த இரகசியத்தை அறிந்த சாட்சி நிலவு
துயர் வாடை வீசுகின்ற காற்றிடம் இடம்மாறி
வழிகேட்டு அலையுதென் மனசு
இது மனசு இல்ல வெறுமையான தரிசு
வண்ணங்கள் நிறம் மங்கி கருமையாய் ஆனதுபோல்
துருப்பிடித்துப் போனதென் கனவு
என் கனவிலும் இழந்தவற்றின் நினைவு
தீபங்கள் ஏற்றியதாய் கனவுகளில் சிறைகிடந்து
தீப்பிடித்துக் கொண்டதென் வாழ்வு
நான் வாழ்வதிலும் நன்றுதான் சாவு
சிறகிழந்த பறவையொன்று வலியாலே கதறுவதாய்
காதலெனும் வழி மலர்ந்த உறவு
உறவு இன்று உப்பு இல்லா உணவு
ஈரமாகிப் போனதென் ஏகாந்த இரவு
இந்த இரகசியத்தை அறிந்த சாட்சி நிலவு
துயர் வாடை வீசுகின்ற காற்றிடம் இடம்மாறி
வழிகேட்டு அலையுதென் மனசு
இது மனசு இல்ல வெறுமையான தரிசு
வண்ணங்கள் நிறம் மங்கி கருமையாய் ஆனதுபோல்
துருப்பிடித்துப் போனதென் கனவு
என் கனவிலும் இழந்தவற்றின் நினைவு
தீபங்கள் ஏற்றியதாய் கனவுகளில் சிறைகிடந்து
தீப்பிடித்துக் கொண்டதென் வாழ்வு
நான் வாழ்வதிலும் நன்றுதான் சாவு
சிறகிழந்த பறவையொன்று வலியாலே கதறுவதாய்
காதலெனும் வழி மலர்ந்த உறவு
உறவு இன்று உப்பு இல்லா உணவு