என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, November 8, 2016

ஏகாந்த இரவு

மனசெல்லாம் வழிந்தோடும் குருதியினால்
ஈரமாகிப் போனதென் ஏகாந்த இரவு
இந்த இரகசியத்தை அறிந்த சாட்சி நிலவு

துயர் வாடை வீசுகின்ற காற்றிடம் இடம்மாறி
வழிகேட்டு அலையுதென் மனசு
இது மனசு இல்ல வெறுமையான தரிசு

வண்ணங்கள் நிறம் மங்கி கருமையாய் ஆனதுபோல்
துருப்பிடித்துப் போனதென் கனவு
என் கனவிலும் இழந்தவற்றின் நினைவு

தீபங்கள் ஏற்றியதாய் கனவுகளில் சிறைகிடந்து
தீப்பிடித்துக் கொண்டதென் வாழ்வு
நான் வாழ்வதிலும் நன்றுதான் சாவு

சிறகிழந்த பறவையொன்று வலியாலே கதறுவதாய்
காதலெனும் வழி மலர்ந்த உறவு
உறவு இன்று உப்பு இல்லா உணவு