என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, November 9, 2016

புழுதியான புனிதங்கள்

உலகத்தின் போக்கெல்லாம் உருமாறி உருமாறி
கீழ்த்தரமாய் போகின்ற போது - மக்கள்
மிருகங்கள் போல் மாறி மனிதத்தை துறக்கின்ற
நிலை மாறும் நாள் எப்போது?

புனிதங்கள் எல்லாமே புழுதியாய் ஆகிவிடும்
நாளின்று தூரத்தில் இல்லை - இதனை
உணராமல் வழிமாறி தடம்மாறி போவோரை
அறிந்திங்கு உடைத்திடனும் பல்லை

கலிகாலம் உருவாகி கன்னியரும் கருவாகி
அழிகின்ற நிலை என்று மாறும் - இதை
சரி காணும் சட்டங்கள் சில நாட்டில் பார்க்கையிலே
உச்சந்தலை கோபம் தான் ஏறும்

வெளிநாட்டு மோகங்களும் பணத்தாசை பூதங்களும்
தலைக்கேறி தாய் போவாள் சவூதி - இனி
தான் பெற்ற மகளையே தன் மனைவி ஆக்கவிடும்
தந்தையால் மகள் வாழ்க்கை சகதி

புகழ்ச்சிக்கும் பெருமைக்கும் காசுக்கும் மட்டுமே
பேராசைப் படுகின்ற கூட்டம்  - சில
நாள் கழிந்து பார்க்கையிலே தம்மிடமே எதுவுமில்லை
என்றுணர்ந்து கண்ணீரைக் காட்டும்

வஞ்சகத்தை கொண்டு நிதம் வாஞ்சையாகப் பழகுபர்
ஒருபோதும் நல்லவரே ஆகார் - தூய
நட்புக்கு விலை பேசி நரிக் குணத்தை காட்டுமவர்
நடு வீதியில் அடிபட்டே சாவார்!!!