என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Monday, June 23, 2014

வலி..

தாங்க முடியாத சுமையொன்றை
இதயம் எதிர்கொள்வதாய்
வலி..

நாட்கள் எல்லாம்
யுகங்கள் போல் மாறிடுமோ
என்ற தவிப்பு

ஒரு சின்ன அன்பு
இத்தனைக் கண்ணீர்த் துளியை
வருவிக்கும் என்பது
ஆச்சரியம்தான்!

அருகேயற்ற நிமிடங்கள் இனி
எப்படித்தான் கழியப் போகின்றதோ
நானறியேன்..

செல்லக் குறும்புகளும்
சின்னச் சிரிப்பும்
பொய்க் கோபங்களும் பார்க்காமல்
நான் கிட்டத்தட்ட
செத்துப் போய்விட மாட்டேனா?

வெளிக்காட்டவும் தெரியாமல்
அன்புகாட்டவும் தெரியாமல்
ஒதுங்கி நிற்கவும் முடியாமல்
ஒட்டி நிற்கவும் முடியாமல்..

எனக்குள் மட்டும்தான்
இத்தனை உணர்வுகளும்
உள்வாங்கப் பட்டிருக்கின்றதா?

எதிர்திசையில் இதுபோன்ற
எந்தவித சலனங்களும்
இல்லாதிருத்தல் முடியுமா?