என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, November 22, 2013

காத்திருக்கச் செய்தாயடி தோழி..

காத்திருக்கச் செய்தாயடி தோழி..
உன் வருகைக்காக
உன் சிரிப்பிற்காக
உன் குரலுக்காக
என்னை காத்திருக்கச் செய்தாயடி!

உனக்கு மெஸேஜ்
பண்ணிய பிறகு
பதில் வரும் என்று
என்னை காத்திருக்கச் செய்தாயடி!

உனக்கு கோல் பண்ணிய பிறகு
நீ பேசுவாய் என்று
என்னை காத்திருக்கச் செய்தாயடி

நான் என்ன செய்யட்டும்
நீயே சொல்

நீ சூடும்
பூக்களாக மாறி விடட்டுமா?
உன் கையில் வளையலாக
ஆகி விடட்டுமா?

நீ சுவாசிக்கும் மூச்சாக
மாறி விடட்டுமா?
இல்லை நீ குடிக்க
ப்ளேன்டீயாக
ஆகி விடட்டுமா?

என்ன செய்யட்டும்
நீயே சொல்!

என்ன இது
எனக்குள் இனம் தெரியாத
ஒருவித இன்பம்..

அந்த
இன்பத்தினுள்ளே
தாங்க இயலாத ஒரு துன்பம்?

முடியவில்லை பெண்ணே
வந்துவிடு

உனக்காக என் இதயம்
துடிப்பதை மறந்து விடாதே..
பிறகு அது
துடிப்பதை நிறுத்திவிட்டால்
வருந்திவிடாதே!