என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, November 22, 2013

தூக்கம்

என்னால் தாங்க முடியவில்லை
பாடாய் படுத்துகிறது நோயே
பாடுபட வைத்திற்று தாயை!

நான் குணமாக
வேண்டும் என்றா
இத்தனை நேர்ச்சைகள்
இதர நோன்புகள்
ஏனும்மா..
என்னால் தாங்க இயலவில்லை!

கண் வருத்தம் வந்தாலும்
கலங்காதிருக்கும் என் வாப்பா
என் வருத்தம் என்றதுமே
எப்படி ஒடிந்து போனார்?

தங்கச்சி...
நீ ஏனம்மா அழுகிறாய்
எனக்கு ஏதும் ஆகாது!
உம்மாவுக்கும் வாப்பாவுக்கும்
ஆறுதல் கூற வேண்டிய நீயே
இப்படி அழலாமா?
வேண்டாம் கண்களை
துடைத்துக்கொள்!

தம்பி..
நீ ஏனடா
அப்படிப் பார்க்கிறாய்?
எல்லோரையும் பார்க்க வேண்டிய நீ
என்னைப் பார்த்தே
மனமுடைந்துவிடாதே!

உங்கள் பாசம்
இருக்கும் வரை
என் உயிரும்
பத்திரமாயிருக்கும்
உங்கள் உள்ளங் கைகளுக்குள்!

கலங்காதீர்கள்
அப்பால் செல்லுங்கள்
எனக்கு
தூ..க்..க..ம்  வருகிறது!!!