என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, November 22, 2013

மனமெனும் அருவி

அவ்வப்போது தோன்றும்
உணர்வுகளால்
சில வேளைகளில்
புத்தி பேதலிக்கிறது!

ஆனாலும்
தெரிந்து கொண்டு
மனது அவனை மட்டும்
காதலிக்கிறது!

வருவானா இல்லையா
என்று தெரியாமலேயே
மனது அவனுக்காய்
தவிக்கிறது!

வரமாட்டான் என்ற
உறுதியிருந்தாலும்
அவனை இதயம்
எதிர்பார்க்கிறது!

அன்பில்
அரவணைப்பில்
ஆறுதலில் எல்லாம்
அவனின் விம்பம்
வந்தாடுகிறது!

தூரே இருக்கும்
அவனிடம்
மனம் எனும் அருவி
பாய்ந்தோடுகிறது!

பாறாங் கல்லாய்
இருக்கும்
என் சிறு இதயம்
அவனின் நினைப்பில்
லேசாகிறது!

எனக்குள் உள்ள
அணுக்கள் எல்லாம்
அவனின் மூச்சை
சுவாசிக்கிறது!!!