என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, November 22, 2013

என் வாழ்க்கை

தரணியிலே தனியாக
நான் வாழச் செய்யாமல் - நல்
பெற்றோரை தந்திட்ட
இறைவனுக்கு பல நன்றி!

கருவுற்ற நிமிடம் முதல்
கண்ணுங் கருத்துமாயிருந்து
காலப்போக்கில் அழுகையினூடு
தாயென்னை ஈன்றெடுத்தாள்!

அழுகை எல்லாம் ஆனந்தமாய்
ஆனபொழுது வந்தபோது
கண்குளிர என் தந்தை
வாரி என்னை முத்தமிட்டார்!

நிலவு காட்டி சோறு ஊட்டி
நித்தமும் பாசம் காட்டி
பாராட்டி சீராட்டி
பார்த்தாரே என் உம்மா!

தோளில் தூக்கி மார்பில் ஏற்றி
தொட்டில் வாங்கி தூங்க வைத்து
நான் விழித்தால் தான ;விழித்து
காத்தாரே என் வாப்பா!

பாடசாலை போகையிலே
ஆள்காட்டி விரல் பிடித்து
உம்மாவுடன் சென்றதெல்லாம்
அடி மனசில் அப்படியே!

ஓதலுக்கு செல்வதற்கு
பயத்தோடு வாப்பாவின்
பின்னாலே மறைந்து நின்று
சென்றதெல்லாம ;நினைவிருக்கு!

தங்கையும் தம்பியும்
தனியாக ஒழிந்து கொண்டு
தேட வைத்த பொழுதெல்லாம்
பசுமையாய் பதிஞ்சிருக்கு!

எல்லாமே நினைவிருக்க
என் நெஞ்சில் நெறஞ்சிருக்கு
என் குடும்ப அன்பினில்தான்
என் வாழ்க்க அடங்கிருக்கு!!!