என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, November 22, 2013

வேதனைத் தீ

பல நாட்கள் ஆயிற்று
உனை நானும் மறந்தின்று
ஆனாலும் சில சமயம்
உன் நினைவே மருந்தொன்று!

இதயத்தால் நேசித்தேன்
இயல்பாயுனை சுவாசித்தேன்
மறந்தாயே நீ என்னை
எரித்தாயே என் நெஞ்சை

சொல் கத்தி பட்டெந்தன்
இதயத் துகள் சிதறியதே
சொல் பெண்ணே ஏன் சொன்னாய்
என் உள்ளம் பதறியதே

எதிர்காலம் இனித்திடுமா
நீயின்றி கழிந்திடுமா
எனக்குள்ளே தீ மூட்டும்
நினைவுகளும் அழிந்திடுமா?

அடி பெண்ணே நீ என்னை
மறந்தெங்கு சென்றாயோ
மறக்காமல ;நான் இருக்க
மாயங்கள் செய்தாயோ?

உன் வதனம் எனக்குள்ளே
வேதனைத் தீ மூட்டிடுதே
நாமிருந்த மரநிழலோ
என் மனதை வாட்டிடுதே

என் பேனை மை என்றும்
உனை பற்றியே எழுதும்
நீ நலமாய் வாழ்வதற்கு
வரம ;கேட்பேன் நான் தொழுதும்!!!