என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, November 22, 2013

வஞ்சகம்

வாஞ்சையுடன் பழகுவதற்கு
சிலராலும் முடிவதில்லை
வஞ்சகமாய் நடிப்பதற்கு
பலராலும் முடிகிறது!

உள்ளத்தால் நெருங்குவதற்கு
சிலரால்தான் முடிகிறது
உள்ளத்தை உடைப்பதற்கு
பலராலும் இயலுகிறது!

எந்தப் புற்றில்
எந்தப் பாம்பு உள்ளதென்று
யாரறிவார்?

அதுபோலத்தான்
யார் மனதில்
என்ன உள்ளதென்பதும்!

தலைகுனிந்து பொறுத்ததெல்லாம்
தலை நிமிர்ந்து
நிற்பதற்குத்தான்!

எமக்காக ஒரு ஜீவன்
எப்போதும் இருக்க வேண்டும்
அந்த எதிர்பார்ப்பில்தானே
வாழ்க்கை அடங்கியிருக்கிறது?

நட்பு என்ற வார்த்தை
நயவஞ்சகத்தை ஏற்றிருப்பதால்
சகோதர உறவுகள்தான்
சாகும் வரை தொடருமென்பேன்!