என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, November 22, 2013

மருந்துண்டா?

பல வருடம் கழிந்தாலும்
பலி சொல்லில் குறைவில்லை
அகதியில்லை நாம் என்று
சொல்லும் நாள் வரவில்லை

ஓடோடி வந்ததெல்லாம்
ஓருயிரைக் காப்பதற்கே
நாடோடி என்றெம்மை
நினைத்திங்கே பார்ப்பதற்கா?

வயலோடு ஏர் உழுது
வாய்க்காலில் நீர் பிடித்து
அமுதுண்டு வாழ்ந்தவர்தாம்
அழுதபடி கிடக்கின்றோம்

குழந்தைகள் குடும்பம் என
குதூகலமாய் வாழ்ந்துவிட்டோம்
குற்றுயிராய் கிடக்கின்றோம்
குறைப்ட்டு வாழ்கின்றோம்

ஒரு தாயின் பிள்ளைகளாய்
ஒரு வீட்டில் வாழ்ந்த நாங்கள்
ஒரு குடிசை தானுமின்றி
முகாம்களிலே வாடுகின்றோம்..

உடற் பிணியைத் தீர்ப்பதற்கோ
உத்திகளும் பல உண்டே
மனச் சுமையை தீர்ப்பதற்கு
மாமருந்து ஏதுமுண்டோ???

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா