கூடுகட்டிக் குருவி வாழும்
கூட்டை உடைப்பவன் இருக்கிறான்..
பாடுபட்டு வாழ்க்கையோட்டும்
மனிதனை வெறுப்பவன் இருக்கிறான்!
போட்டி போட்டு பொறாமையிலே
வெந்து அழிபவன் இருக்கிறான்..
காட்டிக்கொடுத்து மகிழ்ச்சியடையும்
மானிடனும் இருக்கிறான்!
தவறுசெய்யா பெண்ணைப்பற்றி
தவறு சொல்பவன் இருக்கிறான்..
கயிறுகொடுத்து தூக்குபோட
சொல்லிக் கொடுப்பவன் இருக்கிறான்!
பணத்துக்காக பிற மனிதரின்
தலையெடுப்பவன் இருக்கிறான்..
குணத்தை என்றும் மதிக்காமல்
குறை கூறுபவன் இருக்கிறான்!
தோற்றம் பார்த்து யாவரையும்
எடை போடுபவன் இருக்கிறான்..
கைதூக்கி விட்டவனின்
கால் வாருபவன் இருக்கிறான்!
உறுதியாக வாக்களித்து
கழுத்தறுப்பவன் இருக்கிறான்..
இறுதிவரை பொறாமையிலே
பொருமுபவன் இருக்கிறான்!
பிறருடைய மனசை என்றும்
புண்படுத்துபவன் இருக்கிறான்..
வார்த்தைகளால் கத்திசெய்து
துன்புறுத்துபவன் இருக்கிறான்!
வஞ்சம்கொண்டு நஞ்சுடனே
பழகுபவன் இருக்கிறான்..
மனசாட்சி இறந்து போய்
வாழ்பவனும் இருக்கிறான்!!!
Saturday, May 21, 2011
Tuesday, March 8, 2011
உம்மாவுக்கு!
உம்மா!
பிடிக்கவில்லை...
ஊரில் நீங்களும்
தூரத்தில் நானுமாய்
இருக்கும் இந்தக்காலங்கள்!
கிணற்று நீர்குளித்து
மொட்டை மாடியில்
குளிர்காயும் சுகம் இங்கில்லை!
அன்று...
வாப்பாவும் நீங்களும்
என் நுனி விரல் பிடித்து
மொண்டசூரிக்கு
அழைத்துப்போன போது...
பாடசாலையின்
முதல்நாள் குழந்தையின்
அழுகை தோன்றவில்லை எனக்கு!
ஆனால் இப்போதுகளில்
'அத்துல அய்யாவின்'
'ஸ்கூல் சர்வீஸ்'
வேனுக்குள் அடைத்து
தனியாக பாடசாலைக்கனுப்பிய
நாட்கள் போல வெறுத்துப்போய்
எல்லாம் கிடக்கு!
தூரப்பாடசாலை போவதால்
அனைவரையும்
விட்டுப்பிரிய மனமின்றி
பரீட்சையில் வேண்டுமென்றே
பதில் எழுதாத
சின்னக்குழந்தை நான் அன்று..
நினைத்திருப்பேனா
இப்படியொரு
நிலைமை வந்து
புத்திசாலித்தனமாய்
தூரவாக்கும் என்று?
என் முன்னேற்றங்களுக்காக
உங்கள் எல்லோரையும்
பிரிந்திருந்தாலும்
தங்கையுடனும்
தம்பியுடனும்
பிடித்த சண்டைகள்
என் நெஞ்சுக்குள்
இன்னும் பசுமையாகவே!
சாச்சி வீடு..
அஹதிய்யா...
டியூஷன்...
என்றிருந்த எனக்கு...
இன்றைய
வாழ்க்கையை நினைத்தால்
அழுகை வருது உம்மா!
என்ன செய்ய?
என் வாழ்க்கையின்
வெற்றிப் படிகளை எட்டி
நானொரு நாள்
முன்னேறி வருவேன்...
அதுவரை
கொஞ்சம் பொறுத்திருங்கள்
உம்மா..
வாப்பாவுக்கும் சொல்லுங்கள்!!!
பிடிக்கவில்லை...
ஊரில் நீங்களும்
தூரத்தில் நானுமாய்
இருக்கும் இந்தக்காலங்கள்!
கிணற்று நீர்குளித்து
மொட்டை மாடியில்
குளிர்காயும் சுகம் இங்கில்லை!
அன்று...
வாப்பாவும் நீங்களும்
என் நுனி விரல் பிடித்து
மொண்டசூரிக்கு
அழைத்துப்போன போது...
பாடசாலையின்
முதல்நாள் குழந்தையின்
அழுகை தோன்றவில்லை எனக்கு!
ஆனால் இப்போதுகளில்
'அத்துல அய்யாவின்'
'ஸ்கூல் சர்வீஸ்'
வேனுக்குள் அடைத்து
தனியாக பாடசாலைக்கனுப்பிய
நாட்கள் போல வெறுத்துப்போய்
எல்லாம் கிடக்கு!
தூரப்பாடசாலை போவதால்
அனைவரையும்
விட்டுப்பிரிய மனமின்றி
பரீட்சையில் வேண்டுமென்றே
பதில் எழுதாத
சின்னக்குழந்தை நான் அன்று..
நினைத்திருப்பேனா
இப்படியொரு
நிலைமை வந்து
புத்திசாலித்தனமாய்
தூரவாக்கும் என்று?
என் முன்னேற்றங்களுக்காக
உங்கள் எல்லோரையும்
பிரிந்திருந்தாலும்
தங்கையுடனும்
தம்பியுடனும்
பிடித்த சண்டைகள்
என் நெஞ்சுக்குள்
இன்னும் பசுமையாகவே!
சாச்சி வீடு..
அஹதிய்யா...
டியூஷன்...
என்றிருந்த எனக்கு...
இன்றைய
வாழ்க்கையை நினைத்தால்
அழுகை வருது உம்மா!
என்ன செய்ய?
என் வாழ்க்கையின்
வெற்றிப் படிகளை எட்டி
நானொரு நாள்
முன்னேறி வருவேன்...
அதுவரை
கொஞ்சம் பொறுத்திருங்கள்
உம்மா..
வாப்பாவுக்கும் சொல்லுங்கள்!!!
Sunday, February 13, 2011
சிப்பிக்குள் முத்தாகி!

என் கண்ணே உன்னிடமே
இவன் வேண்டுகோள்..
காலமெல்லாம் நீயே தான்
என் ஊன்றுகோல்!
உயிரோடு நானிருக்க
உணர்வோடு வாழ்ந்திருக்க
நீயன்றோ எனக்கான
என் தூண்டுகோல்!
கல்லூரியில் ஒரு நாளில்
எனை வாழ்த்தினாய் - பதில்
சொன்ன போது நீ தலை தாழ்த்தினாய்!
எனைப்பார்த்து கண்காட்டி
என்மனசை தடுமாற்றி
உன் பார்வையில் என்னை
உடன் வீழ்த்தினாய்!
உயிருக்குள் விளையாடி
எனை மோதினாய் - கனவுகளில்
வந்தெந்தன் தலை கோதினாய்!
கவியெழுதி நாள் செல்ல
உன் எண்ணம் நான் கொள்ள
காதலின் கீதங்கள் தினம் ஓதினாய்!
விபரங்கள் தெரிந்திட்ட
நாள் முதலாய் நாம்..
எனக்கு நீ உனக்கு நான்
என்றிருந்தோமே
சுகமின்றி நானிருந்த
ஓரு நாளில் நீ
எனக்காக கோயிலுக்கு சென்றிருந்தாயே!
மாந்தோப்பில் மா பறிக்கும்
நேரத்தில் நான்...
விழுவேனோ என்று நீ
பயந்திருந்தாய் ஏன்?
விழுந்தெந்தன் கைகால்கள்
புண்ணானதும்
உன் கண்ணில் நீர் ஆறாய்
ஓடியதும் ஏன்?
கடற்கரையில் சிப்பிதேட
சென்றிருந்தோமே - சிப்பிக்குள்
முத்தாகி நின்றிருந்தோமே!
காதலுடன் இவ்வாழ்க்கை
என்றென்றும் எப்பொழுதும்
வாழ்நாளில் நிதம் வேண்டும்
என்றிருந்தோமே!
வாழ்வு பற்றிய விடயங்களை
சித்தரித்தோமே - கவலை தரும்
அனைத்தையும் கத்தரித்தோமே..
நாம் வாழ நலமாக
வாழ்நாளில் சுகமாக
புரிந்துணர்வு வேண்டுமென
உச்சரித்தோமே!
பொறாமையான கண்களுக்கு
கொள்ளி வைத்தோமே..
நமை தவிர யாவரையும்
தள்ளி வைத்தோமே!
நம் அன்பில் எப்போதும்
துயர்வந்த போதினிலும்
நமக்குள்ளே காதலையே
அள்ளி வைத்தோமே!
உனக்காக என் ஆயுள்
நீண்டிருக்குமே - என்று
நான் சொல்லி இரு ஆண்டிருக்குமே!
அந்நாளின் இன்பங்கள்
உனைப்பிரிந்த துன்பங்கள்
இப்போதும் என் நெஞ்சில்
வாழ்ந்திருக்குமே!
எப்படியோ நம் காதல்
வீட்டில் தெரிய - வீட்டாரின்
பேச்சினிலே தீயாய் எரிய!
காரணம் தான் என்னவென்று
கடைசியிலே சொன்ன போது
சீதனம் தான் அதுவென்று
கிடைத்தது அறிய!
உன் தகப்பன் எனக்கும் தான்
தந்தையன்றோ? அன்றென்னில்
உதித்த எண்ணம் விந்தையன்றோ?
பல நாழிகை சிந்தித்தும்
பலபேரை சந்தித்தும்
குழம்பிப் போனது என் சிந்தையன்றோ?
வெளிநாடு போவதாய் நான்
சொல்லி முடிக்க - அக்கணமே
கவலையால் உன் உதடு துடிக்க!
சரிஎன்றும் சொல்லாமல்
துணிவும் தான் இல்லாமல்
புறப்பட்டேன் அன்று நான்
உள்ளம் வெடிக்க!
உடல் இளைக்க மாடாய் நான்
அங்கு உழைக்க - அவை மீறி
உன் நினைப்பு நெஞ்சைத்துளைக்க!
நான் என்னை திடப்படுத்தி
எனில்உன்னை நிலைநிறுத்தி
பொறுத்தேனே கண்ணே
நம் காதல் நிலைக்க!
ஆண்டிரண்டு கழிந்து
உனைத்தேடி வந்தேனே - ஓடி வந்து
நீ அணைப்பாய் என்றிருந்தேனே!
எனைப்பார்த்து நீயும் தான்
வேர்க்கின்றாய் ஏன்?
கதவிடுக்கில் ஒளிந்திருந்து
பார்க்கின்றாய் ஏன்?
உன் உயிரில் நான் பாதி
என்று இணைத்துக்கொள்..
வா பெண்ணே வந்தென்னை
உடன் அணைத்துக்கொள்!!!
Friday, December 17, 2010
நீ வாழ்வது மேல்!
கற்றவரை இவ்வுலகம்
போற்றும்- இது
கல்விப்பெருமையை
பறைசாற்றும்..
வையகத்து வாழ்வாங்கு வாழ்வோரை
வாழவைக்கும் வழிநிலையை
நித்தியமாய் காட்டும்...
அதை அறிந்து தான் வாழ்த்துது
இளம் காற்றும்!
நேர்மையாய் உன்வாழ்வை
வாழு - பிறர் கவலையை
காது கொடுத்து கேளு..
திக்கற்று வாழ்வோரை
தீமைகள் சூழ்கையிலே
அயராது அவருக்காய் மாளு..
தரணியிலே நீ வாழ்வது மேலு!
கவலையின்றி வாழ்பவன் தான்
யாரு - சிலரின் கண்ணிரண்டும்
குருடு நீ பாரு...
நம்பிக்கை இழக்காமல்
நாணயம் தவறாமல்
இலட்சியத்தை நோக்கி
நீ ஏறு..
அதை விட இன்பம் என்ன வேறு?
நடுவீதியில் பெண்ணை
மறியாதே - அவளுன் மனைவியாகலாம்
அது தெரியாதே..
தீயஎண்ணங்கள் பலகொண்டு
தவறுகள் பல செய்து
வாழ்க்கையில் நீயும் சரியாதே - பின்
பைத்தியமாய் வீதியில் திரியாதே!
அரிதாரம் பூசாமல்
பழகு - தீயவர் உன்னருகே
வந்தாலே விலகு..
சமூகத்தில் பலபேரு
ஏமாற்றக்காத்திருப்பர்
இது தானே இன்றைய உலகு...
இதையறிந்தாலே உன் வாழ்வு அழகு!!!
போற்றும்- இது
கல்விப்பெருமையை
பறைசாற்றும்..
வையகத்து வாழ்வாங்கு வாழ்வோரை
வாழவைக்கும் வழிநிலையை
நித்தியமாய் காட்டும்...
அதை அறிந்து தான் வாழ்த்துது
இளம் காற்றும்!
நேர்மையாய் உன்வாழ்வை
வாழு - பிறர் கவலையை
காது கொடுத்து கேளு..
திக்கற்று வாழ்வோரை
தீமைகள் சூழ்கையிலே
அயராது அவருக்காய் மாளு..
தரணியிலே நீ வாழ்வது மேலு!
கவலையின்றி வாழ்பவன் தான்
யாரு - சிலரின் கண்ணிரண்டும்
குருடு நீ பாரு...
நம்பிக்கை இழக்காமல்
நாணயம் தவறாமல்
இலட்சியத்தை நோக்கி
நீ ஏறு..
அதை விட இன்பம் என்ன வேறு?
நடுவீதியில் பெண்ணை
மறியாதே - அவளுன் மனைவியாகலாம்
அது தெரியாதே..
தீயஎண்ணங்கள் பலகொண்டு
தவறுகள் பல செய்து
வாழ்க்கையில் நீயும் சரியாதே - பின்
பைத்தியமாய் வீதியில் திரியாதே!
அரிதாரம் பூசாமல்
பழகு - தீயவர் உன்னருகே
வந்தாலே விலகு..
சமூகத்தில் பலபேரு
ஏமாற்றக்காத்திருப்பர்
இது தானே இன்றைய உலகு...
இதையறிந்தாலே உன் வாழ்வு அழகு!!!
Thursday, December 2, 2010
மரணத்தின் தேதி!
இத்தனை நாள் பார்த்த நிலா
ஒளி மங்கி வீசும்..
இதயத்தின் பாகமெல்லாம்
தீ கருகிய வாசம்!
உன் மாற்றம் என்னுள்ளே
தீயள்ளி போடும்..
உன் நினைப்பு என் உயிரின்
அந்தம் வரை ஓடும்!
சுட்டெரிக்கும் சூரியன்
என் தோழனாய் மாறும்!
என் நிலை கண்டுதான்
கலங்கி நீளும் ஆறும்!
வீணை தடவிய விரல்களெல்லாம்
கண்ணைக்குத்தி நிற்கும்..
வானைத்தொடும் கவலைகள்
முட்டும் எட்டுத்திக்கும்!
பட்ட பகல் வெட்ட வெயில்
துன்பமில்லை எனக்கு - கை
தொட்ட அவள் வெப்பம்நெஞ்சில்
பத்திரமாய் இருக்கு!
ஏமாற்றம் வலியெல்லாம்
எனக்குள்ளே மோதி..
சீக்கிரமாய் நிர்ணயிக்கும்
என் மரணத்தின் தேதி!!!
ஒளி மங்கி வீசும்..
இதயத்தின் பாகமெல்லாம்
தீ கருகிய வாசம்!
உன் மாற்றம் என்னுள்ளே
தீயள்ளி போடும்..
உன் நினைப்பு என் உயிரின்
அந்தம் வரை ஓடும்!
சுட்டெரிக்கும் சூரியன்
என் தோழனாய் மாறும்!
என் நிலை கண்டுதான்
கலங்கி நீளும் ஆறும்!
வீணை தடவிய விரல்களெல்லாம்
கண்ணைக்குத்தி நிற்கும்..
வானைத்தொடும் கவலைகள்
முட்டும் எட்டுத்திக்கும்!
பட்ட பகல் வெட்ட வெயில்
துன்பமில்லை எனக்கு - கை
தொட்ட அவள் வெப்பம்நெஞ்சில்
பத்திரமாய் இருக்கு!
ஏமாற்றம் வலியெல்லாம்
எனக்குள்ளே மோதி..
சீக்கிரமாய் நிர்ணயிக்கும்
என் மரணத்தின் தேதி!!!
இன்பமின்றி வேறு இனி ஏது!

கொத்துமலர் பூப்பறிக்க
உன் இதழில் தேன் தெறிக்க
அத்தை மகள் நீ வந்து நின்றாய்..
அடியே - இத்தனை நாள் பத்திரமாய்
பொத்தி வைத்த என் மனசை
பார்வையாலே முழுவதுமாய் தின்றாய்!
அருவிக்கு போகையிலே
ஆத்தங்கரை ஓரத்திலே
குடத்துடனே நீயுந்தான் இருந்தாய்..
குயிலே - குடத்தைப் போல என் உள்ளம்
தளும்பித் தளும்பித்துடிக்கையிலே
குருவியாக நீ பறந்து சென்றாய்!
மான் விழியால் எனைமாற்றி
தேன் மொழியால் எனை பேசி
மயக்கிட்ட ரத்தினமே நீ தான்..
அன்று - மலர்மாலை சூடுகையில்
வெக்கப்பட்டு சிணுங்கிச் சிரித்து
பற்றிக்கொள்ளச்செய்தாய் என்னில் தீ தான்!
அன்பகலா ப்ரியமுடன்
சோதி நிலா நீயிருக்க
மரணத்தின் பயமிருக்காது..
நாங்கள் - மாதெமெல்லாம் மகிழ்வுடனே
பேதமின்றி வாழ்வதாலே
இன்பமின்றி வேறு இனி ஏது???
கடல் கொண்டு போகட்டும்!
பத்துரூபா கேட்டவளை
'பரதேசி' என்றவனில்
பண்பென்று என்ன இருக்க முடியும்?
அவள் பசி போக்க கேட்டிருப்பாள்
என்று மனம் சொல்லுகையில்
இருதயம் சுக்குநூறாய் ஒடியும்!
நாகரீகம் மறந்தவனை
நாய் கூட மதிக்காது
நங்கையர் சொல்லித்தானா விளங்கும்?
பாவம்..
பலிசொல்லை ஏற்காமல்
பாவையரை வதைப்பவனை
படைத்தவனே தண்டிப்பான் சுணங்கும்!
விதி செய்த சதியினிலே
விலைபோகும் மாதுகளை
எப்படி நாம் காப்பாற்ற இயலும்?
வெறும் பணத்துக்காய்
ஆசைப்பட்டு வீணாகும் சிலபேரை
மொத்தமாக அள்ளி செல்லும் புயலும்!
அகதியாக மாற்றப்பட்டு
அகம் நொந்து வாழ்வோரை
அரவணைக்கும் நாள் என்று வருமோ?
தொலைந்து போன சொந்தங்களை
தொலைவில் சென்று தேடினாலும்
இனியவர்களை மீட்டித்தான் தருமோ?
போலியாக பழகியதும்
அன்பென்று நடித்ததுவும்
ஒருநாளில்
உணர்வு கிழித்து வதைக்கும்..
அன்று..
பேராசைப் பட்டதாலே
மனிதமின்றி வாழ்ந்த வாழ்க்கை
அணுவணுவாய்
உயிரையே சிதைக்கும்!
இனத்துவேசம் அறியாத
இலங்கைத்தாய் பெற்ற எமை
பிரித்திட்ட பூதமே நீ அழிக..
உனை என்றென்றும் கூர்வாளால்
ஒழித்திடுமே எம் கைகள்
ஒற்றுமையே உன் பாதம் பதிக!
பாடசாலை பருவத்து
சிறார்களை வைத்து நிதம்
தொழில் செய்து
பிழைப்பவர்கள் சாகட்டும்..
அவரின்
அந்தஸ்து சொத்தெல்லாம்
இப்படி தான் வந்ததென்றால்
கடல்பொங்கி
எல்லாம் கொண்டு போகட்டும்!!!
'பரதேசி' என்றவனில்
பண்பென்று என்ன இருக்க முடியும்?
அவள் பசி போக்க கேட்டிருப்பாள்
என்று மனம் சொல்லுகையில்
இருதயம் சுக்குநூறாய் ஒடியும்!
நாகரீகம் மறந்தவனை
நாய் கூட மதிக்காது
நங்கையர் சொல்லித்தானா விளங்கும்?
பாவம்..
பலிசொல்லை ஏற்காமல்
பாவையரை வதைப்பவனை
படைத்தவனே தண்டிப்பான் சுணங்கும்!
விதி செய்த சதியினிலே
விலைபோகும் மாதுகளை
எப்படி நாம் காப்பாற்ற இயலும்?
வெறும் பணத்துக்காய்
ஆசைப்பட்டு வீணாகும் சிலபேரை
மொத்தமாக அள்ளி செல்லும் புயலும்!
அகதியாக மாற்றப்பட்டு
அகம் நொந்து வாழ்வோரை
அரவணைக்கும் நாள் என்று வருமோ?
தொலைந்து போன சொந்தங்களை
தொலைவில் சென்று தேடினாலும்
இனியவர்களை மீட்டித்தான் தருமோ?
போலியாக பழகியதும்
அன்பென்று நடித்ததுவும்
ஒருநாளில்
உணர்வு கிழித்து வதைக்கும்..
அன்று..
பேராசைப் பட்டதாலே
மனிதமின்றி வாழ்ந்த வாழ்க்கை
அணுவணுவாய்
உயிரையே சிதைக்கும்!
இனத்துவேசம் அறியாத
இலங்கைத்தாய் பெற்ற எமை
பிரித்திட்ட பூதமே நீ அழிக..
உனை என்றென்றும் கூர்வாளால்
ஒழித்திடுமே எம் கைகள்
ஒற்றுமையே உன் பாதம் பதிக!
பாடசாலை பருவத்து
சிறார்களை வைத்து நிதம்
தொழில் செய்து
பிழைப்பவர்கள் சாகட்டும்..
அவரின்
அந்தஸ்து சொத்தெல்லாம்
இப்படி தான் வந்ததென்றால்
கடல்பொங்கி
எல்லாம் கொண்டு போகட்டும்!!!
Subscribe to:
Posts (Atom)