என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, August 10, 2012

ரமழானே நீ மீண்டும் வந்திடு


ரமழானே நீ மீண்டும்
வந்திட வேண்டும்..
நல்மாற்றத்தை உள்ளத்தில்
தந்திட வேண்டும்!

தரணியிலே சிறப்பாக
வாழ்ந்திட வேண்டும்..
அல்லாஹ்வின் அருளெம்மை
சூழ்ந்திட வேண்டும்!

காமங்கள் பசி தாகம்
மறைந்திட வேண்டும்..
குற்றங்கள் எமைவிட்டு
கரைந்திட வேண்டும்!

பர்ளான தொழுகைகளை
தொழுதிட வேண்டும்..
கப்ருடைய நிலை எண்ணி
அழுதிட வேண்டும்!

இறை ஆணை எப்போதும்
ஏற்றிட வேண்டும்..
பெற்றோரின் சொல் தினமும்
கேட்டிட வேண்டும்!

அடக்கமாக அனைவரிடமும்
பேசிட வேண்டும்..
அன்புதனை இதயத்தில்
பூசிட வேண்டும்!

பொறுமையை வாழ்க்கையில்
காத்திட வேண்டும்..
நன்மைகளை மறுமைக்காய்
சேர்த்திட வேண்டும்!

தீனுக்காய் எதனையும்
நாம் இழக்க வேண்டும்..
அதில் திளைப்பதற்கு
உள்ளத்தைப் பழக்க வேண்டும்!!!