கழிகின்ற காலங்கள்
களியாட்டம் கண்டவை..
விடிகின்ற பொழுதுகள்
விபரீதம் கொண்டவை!
கற்கும் பருவத்தில்
காதலை சிந்திக்காதீர்..
களவாக உறவாட
கயவரைச் சந்திக்காதீர்!
நாகரீகத்தில் மூழ்கி
நரக வழி தேடாதீர்..
சமூகத் துரோகிகளாய்
சமாதியாகிப் போகாதீர்!
தலைகளிலே தவறான
சிந்தனைகள் சுமக்காதீர்..
அறிவின்றி அவனியிலே
அலைந்து நீர் திரியாதீர்!
பொன்னான நேரத்தை
வீணாகக் கழிக்காதீர்..
அல்லாஹ்வின் படைப்பினிலே
எவரையும் பழிக்காதீர்!
கண்ணியத்தைப் பேணி
கனவான்களாகப் பாருங்கள்..
கனவு தேசம் கடந்து
கற்றவராய் மாறுங்கள்!!!