என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, August 10, 2012

நோன்பு


நோன்பென்று மாண்பாக
இதயம் சொல்லும்..
நிறைவேற்றினால்
மனித இனம்
ரையான் செல்லும்!

அல்லாஹ்வின்
அருட்கொடையை
பெற்று வெல்லும்..
அந்த இன்பத்தின்
உச்சியிலே
நாளும் வெல்லும்!

நோய்களைக்
கவலைகளை
அப்பால் தள்ளும்..
ஏழைகள் வயிற்றுப் பசி
உணர்ந்து கொள்ளும்!

தானங்கள் தர்மங்கள்
செய்யச் சொல்லும்..
அந்த தர்மத்தால்
இதயத்தில்
இன்பம் பொங்கும்!

பொறுமையாய்
வாழ்வதனைக்
கற்றுக் கொள்ளும்..
தீய எண்ணங்கள்
யாவையும்
விட்டுத் தள்ளும்!!!