பிஞ்சுக் கால்கள்
நெஞ்சில் உதைக்க
சிரித்த அந்த
தந்தை முகம்..
இன்று
முதுமையில் சோகமாய்!
பத்து மாதங்கள் சுமந்து
போற்றி வளர்த்த அந்தத்
தாயின் குரல்
இன்று
இயலாமையில் தீனமாய்!
இத்தனைக்கும்
தவமிருந்து பெற்ற
தவப்புதல்வனோ
படித்து பட்டம் பெற்று
பெற்றோரை விரட்டினான்
வீட்டை விட்டு!
மனைவிக்கு அடிபணிந்து
காசுக்குள் மனம் குளித்து
ஏழைப் பெற்றாரை
அவமதித்தது
பிள்ளை மனம்!
ஆனால்
பிள்ளையின் நல்வாழ்வுக்காகவே
ஓயாமல் பிரார்த்திக்கும்
பெற்ற மனம்!
அமுதப்பால் கொடுத்து
அன்பு கொடுத்து
ஆடை கொடுத்து
அறிவு கொடுத்து
இன்றென்ன பயன்
பெற்றோர்க்கு?
முதியோர் இல்லங்கள் பல
முளைத்துவிட்டன
கருணை உள்ளங்களைக்
காணோம் என்பதால்!!!
நெஞ்சில் உதைக்க
சிரித்த அந்த
தந்தை முகம்..
இன்று
முதுமையில் சோகமாய்!
பத்து மாதங்கள் சுமந்து
போற்றி வளர்த்த அந்தத்
தாயின் குரல்
இன்று
இயலாமையில் தீனமாய்!
இத்தனைக்கும்
தவமிருந்து பெற்ற
தவப்புதல்வனோ
படித்து பட்டம் பெற்று
பெற்றோரை விரட்டினான்
வீட்டை விட்டு!
மனைவிக்கு அடிபணிந்து
காசுக்குள் மனம் குளித்து
ஏழைப் பெற்றாரை
அவமதித்தது
பிள்ளை மனம்!
ஆனால்
பிள்ளையின் நல்வாழ்வுக்காகவே
ஓயாமல் பிரார்த்திக்கும்
பெற்ற மனம்!
அமுதப்பால் கொடுத்து
அன்பு கொடுத்து
ஆடை கொடுத்து
அறிவு கொடுத்து
இன்றென்ன பயன்
பெற்றோர்க்கு?
முதியோர் இல்லங்கள் பல
முளைத்துவிட்டன
கருணை உள்ளங்களைக்
காணோம் என்பதால்!!!