என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, June 28, 2012

இரவில் அழுதல்

ஏ பெண்ணே!
திசை தெரியாத காட்டுக்குள்
பூப் பறிக்கப் போகாதீர்கள்..
கரை காணா சமுத்திரத்தில்
நீச்சலடிக்கப் புறப்படாதீPர்கள்!

இந்த அற்பர்களின்
இச்சைக்கு உங்களை
இரையாக்கி விடாதீர்கள்!

உங்கள் வீடுகளில்
வெளிச்சம் சேர்க்க - ஏன்
பிற குடும்பங்களைப்
பற்ற வைக்கிறீர்கள்?

சந்தர்ப்பம் அமையாமல் - சில
சந்திரர்கள் யோக்கியனாய்
சஞ்சரிக்கிறார்கள் - அவர்களுக்கு
சந்தர்ப்பமளித்து
சஞ்சலப்படுத்தாதீர்கள்!

வயிற்றுப் பிழைப்புக்கு
வழியுண்டு ஏராளமாக..
வயிற்றெரிச்சல் பெற்று ஏன்
வாழ்க்கின்றீர் ஏளனமாக?

பெற்றோரும் மற்றோரும்
உறவுகளும் பிள்ளைகளும்
அறிந்தால் தாங்குவாரா
உம்மைப் பற்றி?

அற்ப ஆசைக்கு
அலைபவர்கள் பகலில்
இராமர்களாக வாழ்கிறார்கள்..
அவர்களிடமா
ஆடை வாங்கிக் கேட்கிறீர்கள்?;

வேண்டாம்..

கௌரவமாக வாழ்வதாய்
ஊருக்கு காட்டிக்கொண்டு
பகலில் சந்தோஷிப்பதற்காய்
இரவில் அழ வேண்டாம்!!!