என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Saturday, October 19, 2013

உயிருக்குள் ஈரலிப்பாய்

எப்போதும் தோன்றுகின்ற
உனை பற்றிய எண்ணங்கள்
தப்பேதும் செய்யாத
எனை மட்டும் கொல்வது ஏன்?

பிரியங்கள் இல்லாமல்
பிரிந்து நீ போன பின்னும்
யதார்த்தத்தை உணராமல்
உன்னையே எண்ணுவதேன்?

உன்னோடு நானிருந்து
உயிர் வாழ்ந்த காலங்கள்
உருமாறிப் போகாமல்
உயிருக்குள் ஈரலிப்பாய்...

வேறு வேறாய் வாழ்ந்தபோதும்
கற்பனையில் ஒன்றாக
சேர்ந்திருந்த நினைவலைகள்
உதிரத்தை உறிஞ்சுவதாய்...

உன் கண்ணில் எனைப் பார்த்து
நெஞ்சோடு உனை சேர்த்து
கழித்திட்ட காலங்கள்
கண்முன்னே நிழல்போல...

மடிமீது சாய்ந்திருந்து
கொடி பூவாய் உனை சுமந்து
சுகம் கண்ட பொழுதெல்லாம்
மனவெளியில் முள்ளாக...

ஞாபகக் கனவுகளில்
கூடி நின்ற நம் பொழுது
சுட்டெரித்து நிதம் என்னை
சுடுகாடாய் பயமுறுத்த...

முற்றாக எனைப் பற்றி
முழுதாக மறந்தவளே
உனக்கென்று வாழ்ந்த என்னை
கொஞ்சமேனும் நினைவிருக்கா???