இரத்தக்களறி ஆகிவிட்ட
என் வாழ்வை..
கண்ணீர் கொண்டு
கழுவியும் பயனில்லை!
சொந்தம் என்று சொல்லியே
சோகங்களை சொந்தமாய்
தந்துவிட்டுப் போனவர்களை
எத் திணையில்
நான் அழைக்க?
ஆழ் மனதில் உருவாகிய
காதல் கூட
காற்றில் எறியப்பட்ட
காகிதமாய்
பறந்து போனது!
உறவுகளின் உதறல்களால்
உடைந்த உள்ளத்தை
சீராக்க பட்டபாடெல்லாம்
மழை நீரில் விட்ட
கப்பல் தான்!
குதறி விடப்பட்டுள்ள
என் மனசின்
காயங்கள் தான்
காய்ந்து கிடக்கின்றன!
எத்தனை ஆறுதல் கொண்டும்
தேற்ற முடியாதபடி
மாரிகால வானம் போல
மரித்து தான் போயிற்று
என்னில்
ஊற்றெடுத்த நேசங்களும்
எனக்கான பாசங்களும்!!!