நான் அழுகிறேன்
இல்லையில்லை
அழ முயல்கிறேன்
எவ்வளவு தான்
பிரயத்தனப்பட்டாலும்
அடைமழையில் வரைந்த
ரங்கோலியாகத்தான் அது!
முன்பு
கண்ணீர் வெள்ளம்
வற்றும் போதெல்லாம்
இதய ஊரில்
ஒரு மயான அமைதி நிலவும்!
இப்போது
அது முடியாமல்
என்னுடன்
ஊமையாய் கரைகிறது
அந்த நிலவும்!
வயிற்று வழியே மேலெழும்
அக்கினிக் குழம்பு
தொண்டைக் குழியை நிரப்புகிறது!
சல்லடையான
என் இதயத்துக்குள்
கல்லறைக் காயங்கள்
தகிக்கிறது!
என் மனசின்
அந்தரங்கத்தின்
அவஸ்தையோடு
அந்தரப்பட்டு
கண்ணீரும்
காய்ந்து போகிறது!!!