இதயத்தணலில் மேலெழும்
சில நினைவுப் புகை
என்னில் படிந்துகொள்கிறது!
அதனால்
மனசோ அவிந்தழிந்து
நாற்றமெடுத்த
விரக்தியில் நான்!
வக்கிரம் வலம் வரும்
இவ் வஞ்சகர்கள்
உள்ளத்தில்
எதை சாதிக்கப்போவதான பிரமமையோ?
உயிர் கவசத்தை
உடைத்துப்போடுவதில்
இப்படியும் கூட
இன்பம் காண
முடிவது பற்றித்தான்
புதினமாயிருக்கிறது!
முடிவிலியாகிப்போன
துரோகங்களால்
மிதமிஞ்சிப் போகிற
துரோகத்தைத் தடுக்க
ஆண்டவா
உனக்கு கூட
அருள்தரப்போவது யார்???