இதயம் எதிர்கொண்ட
தாக்கங்களை
இரு வரியில் கூறிட
முடியவில்லை!
எதையும் தாங்கும்
இதயம் கொள்ள
எல்லோருக்கும் முடிவதில்லை!
அராஜகமாய் அரங்கேறுகிறது
அதிகாரத்தின் அடிவாடித்தனம்!
அநியாயமாக செத்துப் பிழைப்பது
அன்பு தேடும்
உள்ளங்கள் தான்!
அப்பாவிகளின்
உள்ளத்தின் வலிகளை
அப் பாவிகள் உணர்வதற்கு
ஏன் தான் சாத்தியமாவதேயில்லை?
தன் ஆளுமையை காட்டிடத்தான்
மனிதத்தோல் போர்த்திய
மிருகங்களை உற்பவித்தானா
அந்த இறைவன்?
மலட்டு மனம் கொண்டவர்களின்
பொறாமைத் தீயில்
எரிந்துவெந்து சாம்பலாகுவது
தத்தம் மரக்கட்டை
உடல்கள் தான் என்பதை
உணரும் காலம் வெகுதூரமில்லை!
உள்ளத்தில் விஷம் வைத்து
உதட்டில் தேன் தெளிக்கும்
கலையை கற்ற நரகசாலை எதுவோ?