
காதலித்து
கண்ணாம்மூச்சியாடி
நீ இன்று
தாய்மைக் கோலத்தில்
தயவாய் வாழ்ந்த படி!
கவிதை எழுதியே
காகிதமாகி
சேற்றில் புதைந்த
செருப்பாய் நான்!
இதயத்தின் வெடிப்புக்களில்
இம்சையின் சித்திரவதை...
உள்ளார்ந்த மனவெளயில்
இன்பமினி எவ்வகை?
இலக்கியமாய் எமைப்பார்த்தால்
நீ எழுவாய் நான் பயனிலை..
சேர்ந்திருந்த நாள் எல்லாம் - இனி
என்ன நினைத்தாலும் பயனிலை!!!