
அட்டையாய் என்
இதயத்தில் அமர்ந்து
ஏன் என் இரத்தம் உறிஞ்சுகிறாய்?
உன் வார்த்தைகளின் சுனாமியினால்
சேதப்பட்ட உள்ளத்தை
சீராக்கத்தானே
நிலவினைப்போல
உன் நினைவுகளுடன்
தேய்ந்தும்
தூரமாகவே இருக்கிறேன்....
உனக்குத்தெரியாது
என் சோகம் தின்று
சோர்ந்து போன
கைக்குட்டைக்குத்தான் தெரியும்
இந்த இதயத்தின் புலம்பல்...
தூங்கினாய் நீ
கனவு கண்டது நான்..
வெயிலில் போனாய் பொனாய் நீ
வெந்து துடித்தது நான்...
குளிரின் கையிலே நீ
உன்னிடம்
போர்வையானது கூட நான்...
ஆனால்
இப்போது - தினமும்
இன்னொரு அரவணைப்பிலே நீ..
அதனால்
நித்தமும்
சாவின் பிடியிலே நான்!